மாந்திரீக நம்பிக்கையில் காவு கொள்ளப்பட்ட சிறுவன்! பரிசோதனையில் வெளிவந்த தகவல்

படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனுக்கு கோவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்மணம் வீசுவதாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய,  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன்போது, அவ்வீட்டில் உள்ள அறையொன்றின் கட்டிலில் 10 வயது சிறுவனின் சடலம் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவன் தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுவனது பெற்றோர் எவ்வித மருத்துவ … Read more

பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் விலைகள்

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நீண்டகாலமாக நீடித்தால், பண்டிகைக் காலத்தில் பல உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிலர் கோதுமை மாவை இறக்குமதி செய்து தட்டுப்பாடு இருப்பதாக பாவனை செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன சிங்கள ஊடகம் ஒன்றுக்கு  தெரிவித்தார். கோதுமை மா தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை … Read more

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா? வெளியானது தகவல்

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், அரசாங்கத்திடம் மீளவும் யோசனை முன்வைத்துள்ளது. விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்த யோசனையை அனுப்பி வைத்துள்ளதாக, கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,  எவ்வாறிருப்பினும், குறித்த யோசனை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை. உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவேண்டிய அவசியத்தன்மை ஏற்பட்டுள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், … Read more

சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உட்பட 39 படையதிகாரிகளுக்கு சர்வதேச தடை

30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 39 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கருதது வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பாதுகாப்பு தரப்பினருக்கு மாத்திரமல்லது எதிர்காலத்தில் ஏனைய துறைகளை சார்ந்த நபர்களுக்கும் இந்த நிலைமையை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more

பிரித்தானியாவில் வேகம் எடுக்கும் புதிய காய்ச்சல்! முதல் மரணம் பதிவானது

இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் லஸ்ஸா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதி செய்துள்ளன. லஸ்ஸா காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி கடுமையான வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளால் பரவும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயால் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA)தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த தொற்றினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து “மிகக் குறைவு” என்று இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. … Read more

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சார மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு – எப்போ சந்தைக்கு வருகிறது?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மின்சார மோட்டார்  சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில்,120 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சசிரங்க டி சில்வா தெரிவித்துள்ளார். Source link

தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் மாற்றம்… “சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள்…”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில் இன்று (11) இடம்பெற்றது. இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக … Read more

பூஸ்டர் தடுப்பூசிகள் இரத்த உறைவை ஏற்படுத்துமா? விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்

பூஸ்டர் டோஸாக வழங்கப்படும் பைசர் தடுப்பூசியால் உலகில் எந்த நாட்டிலும் இரத்த உறைவு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பைசர் தடுப்பூசி தற்போது உலகளவில் பில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இரத்த உறைவு எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இரத்த … Read more

இராவணன் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும்! – புத்திக பத்திரன கோரிக்கை

இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாததால் இராவணன் தொடர்பாக முறை சார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவர் முன்வைத்துள்ள பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மொழி பாடநெறி:சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்திறன் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அந் நூர் மண்டபத்தில் இடம்பெற்றது. மொழித்திணைக்களத்தின் போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகளாக … Read more