கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி மகளிர் விவகார அமைச்சினால் வழங்கி வைப்பு!

வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை(19) வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் … Read more

உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை ஜனாதிபதி வலியுறுத்தினார்

நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை. வளர்ந்து வரும் நாடுகளுக்கே இதனால் அநீதி இழைக்கப்படுகிறது – G77 மற்றும் சீனாவின் 3ஆவது தென்துருவ மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி வலியுறுத்தினார். உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை முன்னெப்போதையும் விட தற்போது எழுந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பெரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் என்பவற்றினால் உலகளாவிய கடன் தீர்வு தொடர்பில் ஆதிக்கம் செலுத்தும் உலகிற்கே நவீன சர்வதேச கடன் … Read more

தென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள பல்வேறு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் (19) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவிற்கும் (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பொன்று (19) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தென்னாபிரிக்க ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதேவேளை, … Read more

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு “Pekoe trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்

தற்போது உள்ள பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடி விரைவான தீர்வுகளைப் பெறுங்கள் – சாகல ரத்நாயக்க. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள “Pekoe trail” திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில்(19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. “Pekoe trail” திட்டத்தின் கீழ், சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுலாப் பாதை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இத்திட்டம் உலகளவில் பெரும் புகழைப் … Read more

எதிர்கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்

எதிர்கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டை முன்னேற்றும் போது சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் (19) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். … Read more

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (20) இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது உதவும் என்றும் … Read more

ஜனாதிபதியின் உகண்டா விஜயத்தினால் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முடிந்தது

ஜனாதிபதியின் உகண்டா விஜயத்தினால் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முடிந்தது இலங்கையின்பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு உலகத் தலைவர்கள் பாராட்டு. ‘ஆபிரிக்காவைப் பார்ப்போம்’ என்ற ஜனாதிபதியின் எண்ணகரு தொடர்பில் ஆபிரிக்க தலைவர்களின் கவனம் – வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினால் எதிர்காலத்தில் உலகில் துரிதமாக அபிவிருத்தியை எட்டுமென கருதப்படும்1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளதென வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் … Read more

இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்

இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது – இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு எத்தியோப்பியா பிரதமர் வாழ்த்து. அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் (19) உகண்டாவின் கம்பாலா நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதாவிற்கும் (Mariam Chabi Talata) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையில் 2012 இல் … Read more

தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்

இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக … Read more

டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் என்பன அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மையை உருவாகியுள்ளன

சிறந்த உலகை கட்டியெழுப்ப அணிசேரா நாடுகளின் அமைப்புக்குள் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். 05 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். பிரதான நாடுகளின் போட்டி, வர்த்தக மற்றும் பொருளாதார ஒற்றுமையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அணிசேரா நாடுகள் இனியும் வலுவற்ற நாடுகளின் அமைப்பாக இருக்கப்போவதில்லை – அணிசேரா நாடுகளின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் … Read more