ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணிக்கு வெற்றிக் கிண்ணம்

ஓமன், அல் அமெரத் மைதானத்தில் நடைபெற்ற ஆசியாவில் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ரி20 கிண்ண இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.  இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்றது.  இலங்கை அணி சார்பாக Sahan Arachchige ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றார்.  … Read more

நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஒக்டோபர் 28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் … Read more

நாடளாவிய ரீதியாக பரந்து காணப்படும் சர்வமத வணக்கஸ்தலங்களுக்கு இலவச சூரிய மின்கலம்..

புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கான உதயத்துடன் மக்களை மையமாகக் கொண்ட வலுசக்தித் துறையாக வளர்ச்சியடையும் வலுசக்தி அமைச்சின் நெறிப்படுத்தலில், இந்திய அரசின் 17 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையும் இணைந்து நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் சர்வமத வணக்கஸ்தலங்களை உள்ளடக்கியவாறு கூரையின் மீது நிர்மாணிக்கப்படும் இலவச சூரிய மின்கலத் தொகுதிக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் விகாரைகள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் … Read more

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன் துறை வரை பயணிக்கும் புகையிரத சேவை நாளை (28) முதல் மீண்டும் ஆரம்பம்

மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை நாளை 2024.10.28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி புகையிரதப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) என். ஜே. இந்திபொலகே விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை … Read more

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 75 மி.மீ  அளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஒக்டோபர் 27ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஒக்டோபர் 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி … Read more

அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.

கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (25) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டதுடன் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பிலும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.  குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சுனில் பிரேமதிலக, செயலாளர் செல்வராஜா கோகுலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.  

பிரதமர் ஹரிணி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (25) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, பிரிவெனா ஆசிரியர் சேவை உள்ளிட்ட சேவைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதமரிடம் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் அதிபர், ஆசிரியர்கள் சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.      

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் (GDSA) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (24) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் மற்றும் வாய் சுகாதார சேவை நேரடியாக முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமருக்கு தெளிவுபடுத்த அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது.  குறித்த சந்திப்பில் அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட … Read more

அரிசி சந்தையை சமநிலைப்படுத்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வர்த்தகர்களின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசு ஆதரவு

நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட அரிசி கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் செய்யப்படமாட்டாது – சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். … Read more

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, சுற்றுலா மேம்பாடு மற்றும் முதலீடுகளுக்கு உதவிகளை வழங்குவதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் உறுதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பயின்(David Pine) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் வலுவான மற்றும் பலன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். தற்போது வருடாந்தம் இலங்கைக்கு 7,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், அந்த எண்ணிக்கையை 50,000 வரையில் அதிகரிக்க இலங்கைக்கு ஒத்துழைப்பு … Read more