பத்து அத்தியவசியப் பொருட்களி விலைகள் குறைப்பு – லங்கா சதொச அறிவிப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (24) முதல் அமுலுக்குவரும் வகையில் பத்து அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, செத்தல் மிளகாய், வெள்ளைப் பூண்டு, நெத்தலி, கடலை, உள்நாட்டு சம்பா, டின் மீன், பெரிய வெங்காயம், உள்நாட்டு உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி மற்றும் வட்டானா பருப்பு ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1380 ரூபாவாகும். ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை முழுமையான விடியலாக கருதக்கூடாது – அமைச்சர் டக்ளஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கு கிடைத்த முழுமையான விடியலாக கருதி விடக்கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூச்சு விடுவதற்கான சந்தர்ப்பமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட ஏனைய நிதி நிறுவனங்கள், … Read more

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.37 ரூபாவாகவும், கொள்வனவு விலை … Read more

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை (25) மு.ப. 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, கோட்டை, கடுவெல ஆகிய மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை – முல்லேரியா ஆகிய … Read more

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் நாளை (25) ஆரம்பமாகவுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்து, உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், நாளை (25) ஒக்லாந்து மைதானத்தில் காலை 6.30 மணிக்கு முதலாவது ஒரு நாள் போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஒரு நாள் போட்டி அட்டவணை … Read more

யுத்தத்தின் போது விமானியாக செயற்பட்டவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! சபையில் அம்பலமான தகவல்கள் (Live)

தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக ஓய்வுபெற்ற எயர்வைஸ் மார்சல் சம்பத் துயாகொந்த உள்ளிட்ட 3 இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஓய்வுபெற்ற எயர்வைஸ் மார்சல் சம்பத் துயாகொந்த எந்தவொரு விமானப்படைத் தளத்திற்குள்ளும் நுழைவதற்கும், விமானப்படை நிகழ்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் … Read more

ஆசிரியர் போட்டிப் பரீட்சை நாளை இடம்பெற மாட்டாது

தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நாளை (25) நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை இடம்பெறமாட்டாது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை, 2023.03.25 ஆம் திகதி (நாளை) நடைபெறவிருந்தது. இப்போட்டிப் பரீட்சை, உயர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் … Read more

இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்குவதற்கான நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டத்தினாலும், மக்களின் தியாகத்தினாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறும் தகுதியின் அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு போதுமான நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின், யார் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான கடன் வசதிகள் மற்றும் எதிர்கால … Read more

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை விபரம் பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 120 ரூபா 1380 ரூபா உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) 11 ரூபா 199 ரூபா வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) 7 ரூபா 210 ரூபா … Read more

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நவீனப்படுத்த திட்டம்

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். • காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது மற்றும் தணிக்கும் போது மேற்படி … Read more