பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை விபரம் பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 120 ரூபா 1380 ரூபா உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) 11 ரூபா 199 ரூபா வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) 7 ரூபா 210 ரூபா … Read more

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நவீனப்படுத்த திட்டம்

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். • காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது மற்றும் தணிக்கும் போது மேற்படி … Read more

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது – ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் … Read more

அம்மா, அப்பா மன்னித்து விடுங்கள்… இளம் பெண்ணின் விபரீத முடிவு

புத்தளம், பட்டுலு ஓய பிரதேசத்தில் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். இளம் வைத்தியர் ஒருவரே ரயிலில் மோதுண்டு தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது. அவர் இறப்பதற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரியவந்து. அந்தக் கடிதத்தில் “அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் இங்கிருந்து செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். குறித்த இளம் பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் … Read more

இலங்கையில் அதிரடியாக குறையப் போகும் வங்கி வட்டி விகிதங்கள்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி எதிர்காலத்தில் இலங்கையில் வட்டி விகிதங்களைக் குறைக்க உதவும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடன் வசதி கிடைக்காவிட்டால் அரசாங்கம் அதிக வட்டிக்கு நிதியை வசதிகளை பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்றாவது அல்லது நான்காம் காலாண்டுக்குள் இலங்கையின் பணவீக்கத்தை ஒற்றை பெறுமதிக்கு கொண்டு … Read more

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவும்:நலேடி பாண்டோர் உறுதி

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவுமென அந்த நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில்,இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவிடமே அமைச்சர் நலேடி பாண்டோர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இலங்கையின் அமைச்சர் குழு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர்களை சந்திக்கும் நோக்கில் இலங்கையின் அமைச்சர் குழுவினர் அங்கு … Read more

ஜனாதிபதியானதும் கோட்டாபய எடுத்த நடவடிக்கை! பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பான தகவல் (Video)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்து அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.  அந்த நடவடிக்கைகளுக்கு அமைய 34 ஆயிரம் சிற்றூழியர்களாக உள்வாங்கப்பட்டார்கள்.  அதன் பின்னர் நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த செயற்பாடு நிறுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.  அந்த 34 ஆயிரம் பேரில்  வடக்கு மாகாணத்தில் … Read more

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக தடைப்படும்! எரிசக்தி அமைச்சருக்கு சென்ற எச்சரிக்கை கடிதம்

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக தடைப்படும் அளவிற்கு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன பணியாளர்களின் தொழிற்சங்கங்கள், அமைச்சர் கஞ்சன விஜயசேகரவை எச்சரித்துள்ளன. இந்த விடயத்தை நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத்தின் கடிதம் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அளவுக்கு பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என எச்சரித்து, பெட்ரோலிய … Read more

பிரித்தானியாவில் ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் விபரீத முடிவு! வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டதாக சர்வதேச  ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட 5 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள், ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்கள் டியாகோ கார்சியாவில் 18 மாத சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிற நோய்களுக்காக உளவியல் … Read more

அடுத்தக் கட்டம் சிரமமானதாகவே அமையும்! நிதி கிடைக்காமல் போகலாம் என எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்து விட்டதாக தெரிவித்து மகிழ்ச்சியை சிலர் வெளிப்படுத்தினாலும் அடுத்த கட்டம் கடினமானதாகவே இருக்கும்  என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.  நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  நிதி கிடைக்காமல் போகலாம் இலங்கை இணங்கியுள்ளதற்கு அமையவே சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கியுள்ளது.  அந்த நிபந்தனைகளை நிறைவு செய்யாமல் விடும் பட்சத்தில் அடுத்த கட்டம் சிரமமமானதாகவே அமையும். அடுத்தக் கட்டத்தில் நிதி … Read more