வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணிகளை முதன்மைப்படுத்துங்கள்நிவாரணம் வழங்குவதற்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக பணம் தேவைப்படுமாயின், அதற்கான நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள். இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் (UNDP) உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதி ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் இதன் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. “பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும் இலங்கை மக்கள் மீதான அவற்றின் தாக்கம்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஐ.நா … Read more

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை..

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்  குழுவுடன் கலந்துரையாடி, வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளைய (15) தினமும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களனி கல்வி வலயங்கள் மற்றும் கடுவெல, கொலன்னாவ கல்விப் பிரிவுக்குட்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நாளைய (15) தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி … Read more

14 வயதுடைய பாடசாலை மாணவியிடமிருந்து பிரதமருக்கு கிடைத்த மகஜர்

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார். சிறுவர் மற்றும் இளைஞர் பரம்பரையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரி மாணவி இந்த மகஜரை கையளித்துள்ளார். பிரதமர் ஊடகப் பிரிவு

மழை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்

இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தளம், கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அம்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அதிப திலகரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடும் மழை … Read more

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 10 நிவாரண குழுக்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கடற்படையின் 10 நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான அனைத்து படகுகளும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மின்சார … Read more

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவ வீரர்கள்..

நாட்டில்; ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக மேலதிக இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கேணல் சஞ்சீவ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எந்தவொரு அனர்த்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள 6500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நாடளாவிய ரீதியில் தேவையான இடங்களில் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் … Read more

அத்தனகலு ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு – நீர்ப்பாசனத் திணைக்களம்

11.10.2024 அன்று காலை 9.45 மணிக்கு வெளியிடப்பட்ட அத்தனகலு ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக  நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதேசவாசிகள் மற்றும் அப்பகுதிகளினூடாக (குறிப்பாக பக்க வீதிகளில்) பயணிக்கும் வாகன சாரதிகள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனர்த்த முகமைத்துவ பிரிவுகளின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித் தொடர் வெலிசரையில் நிறைவடைந்தது

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் 2024 ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வெலிசரை இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவன ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்றதுடன், இங்கு ஆண்களுக்கான இணைச் சம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படைக் கட்டளை மற்றும் பயிற்சிக் கட்டளை வென்றதுடன் பெண்கள் இணைச் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை வென்றது. கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் 2024 க்காக கடற்படை கட்டளைகளைகள் … Read more

கம்பஹா மாவட்டத்தில் அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்..

சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் இதுவரையிலும் 20இ553 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடுமபங்களுக்கு உணவு மற்றும் நிவாரைணைங்கள் உரிய பிரதேச செயலகத்தினூடாக கிராம உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கம்பஹா மாவட்ட அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், கம்பஹா மாவட்டத்தில் நேற்று (13) பிற்பககல் 4 மணி வரை 20இ553 குடும்பங்களைச் சேரந்த 82,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கம்பஹா மாவட்ட அணர்த்த முகாமைத்துவ … Read more