75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி. வி.முரளீதரன் (V. Muraleedharan) முதலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்ததுடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் … Read more

சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படலாம்! இறுதி தீர்மானம் குறித்து வெளியான அறிவிப்பு

சிற்றுண்டிகளின் விலைகளிலும் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையளார்கள் சங்கம் இது தொடர்பில் ஆலோசிப்பதாக கூறப்படுகின்றது.  இதன்படி, சிற்றுண்டிகளின் விலைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளைய தினம் இறுதித் தீர்மானம்  அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு விலை அதிகரிப்பு எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு … Read more

ஷாப்டரின் மரணத்தின் மர்மத்தை வெளிப்படுத்த தயாராகும் பொலிஸார்

கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவுள்ளன. தனித்துவமான விடயங்களை உள்ளடக்கிய மரண விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் அடங்கியுள்ளதாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையுடன் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மர்மம் முழுமையாக வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

“Path to Freedom” விசேட கண்காட்சியை ஜனாதிபதி திறந்துவைத்தார்

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தின் “Path to Freedom” விசேட கண்காட்சியை நேற்று (04) கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் திறந்துவைத்தார். தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம் ஆகியன இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சியின் திறப்பு விழாவிற்கு வருகைதந்த ஜனாதிபதியை புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வரவேற்றார். 1919-1972 வரையிலான சுதந்திரப் போராட்டம் தொடர்பான வரலாற்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வுகளை … Read more

<span class="follow-up">NEW</span> லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு! புதிய விலை விபரம்

புதிய இணைப்பு லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை 4,743 என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 134 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,904 ரூபாவாகும்.  இதேவேளை, 2.3 … Read more

உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புடினின் சர்ச்சைக்குரிய புகைப்படம்

வரலாற்று நிகழ்வொன்றில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய பாதுகாவலர்கள் இருவர், கையில் பயணப்பெட்டியுடன் (Suitcase) காணப்பட்ட காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததான battle of Stalingrad போரின் வெற்றி நினைவு நாள் விழாவில் ரஷ்ய அதிபர் புடின் மலர்கொத்துக்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது அவருடனிருந்த பாதுகாவலர்கள் இருவர் தங்கள் கைகளில் பயணப்பெட்டியை வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் கவசம் குறிப்பாக துப்பாக்கிச்சூடு நடத்தினால், புடினை பாதுகாப்பதற்காக புடினின் பாதுகாவலர் … Read more

‘லங்காரலங்கா’ கலாசார நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘லங்காரலங்கா’ எனும் விசேட கலாசார நிகழ்வு நேற்று (03) இரவு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இங்கு நடனம், சங்கீதம், இசையென 18 விசேட கலாசார நிகழ்வுகளின் தொகுப்பைக் கண்டுகளிக்க கூடியதாக இருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ‘லங்காரலங்கா’ கலாசார நிகழ்வில் 10 அரச நடனக் குழுக்களும் 08 தனியார் நடனக் குழுக்களும் பங்குபற்றின. காயா ரம்யா அல்விஸ்ஸின் எழுத்தாக்கத்தில் ஜானக்க பொன்சேக்காவின் … Read more

75ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலிமுகத்திடலில் நடைபெற்றது. மிகக் குறைந்தச் செலவில் பெருமைக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் பிரதான நோக்கம் இலங்கையர்களின் பெருமையை மீண்டும் உலகுக்கு வெளிக்காட்டுவதாகும். ஜனாதிபதியின் வருகையைக் குறிக்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் இசைவாத்தியங்களை இசைத்த பின்னர், பாதுகாப்பு படைகளின் … Read more

இலங்கை பொலிஸாருக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து நன்கொடை

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக ஜப்பான் அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வேன்கள் மற்றும் சிறிய பஸ் வண்டிகள், 115 சோதனைக் கருவிகள் ஆகியவற்றை நன்கொடையளித்துள்ளது. இவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கும் அடையாள நிகழ்வு நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி வாகனங்களை நன்கொடையளிப்பதுடன் தொடர்புடைய ஆவணங்களை ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டக்கே சுன்சூக்கி (Takei Shunsuke) ஜனாதிபதியிடம் கையளித்தார். வாகனங்களின் நிலைமைக் குறித்து கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி, … Read more