இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை! அமைச்சர் அறிவிப்பு

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடையொன்று விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சஃப்பாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த அமரவீரவின் அறிவிப்பு இந்த விடயத்தை வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யால சரணாலயத்திற்குள் பிரவேசித்து விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யால சரணாலய … Read more

பியகம வைத்தியசாலை “வெல்னஸ் விலேஜ்” திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

‘ஆரோக்கியமான கிராமம்’ திட்டத்தின் (Wellness Village) கீழ் பியகம வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டம் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவிற்கு அமைய சுற்றுலாத்துறையில் “மெடிகல் டுவரிசம்” பிரிவை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு, ‘வெல்னஸ் விலேஜ்’ திட்டம் இலங்கையில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காக கொண்டு சர்வதேச தரத்திலான … Read more

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்

பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட ரீயூனியன் தீவுகளில் தஞ்சம் அடைந்திருந்த இரண்டு இலங்கையர்களும், சட்டவிரோதமாக ஜப்பானில் வசித்து வந்த மற்றுமொருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகு மூலம் ரீயூனியன் தீவை அடைந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழையத் தயாரான இரண்டு இலங்கையர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆராச்சிக்கட்டுவ, பளுகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரும், பங்கதெனியவைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவருமே நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள், … Read more

பெண் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் தொந்தரவு: பொலிஸ் அலுவலர் பணி இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன், சம்மந்தப்பட்ட பொலிஸ் அலுவலர் நேற்று முன்தினம் (25.10.2022) கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நீதிமன்றின் உத்தரவு குறித்த பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் கடமையாற்றி வந்த அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் சாஜன் அங்கு கடமையாறிறிவந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் … Read more

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எந்தவொரு கூட்டத்திலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனைக்கு ராஜபக்ஷ குடும்பத்தினரும் முழுமையாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய கோட்டபாய ராஜபக்ஷ குடும்பத்திற்கு தெரிந்தே, பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தப்பி ஓடிய கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் மக்களிடம் … Read more

பிரேத பரிசோதனை விசாரணைகள் தொடர்பான குற்றவியல் சட்டத்தில் திருத்தம்

பிரேத பரிசோதனை விசாரணைகள் தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு (2021) முழு காலப்பகுதியில் 521 கொலைகள் பதிவாகியுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, பிரேத பரிசோதனை விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை … Read more

“ஒன்லைன்” ஊடாக எரிவாயுவை பெற்றுக்கொள்ள வசதி

இலங்கை எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணய நெருக்கடிக்கு தீர்வாக ,வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் உள்ள தமது அன்புக்குரியவர்களுக்காக லிட்ரோ எரிவாயுவை இணையவழி (ஒன்லைனில்) ஊடாக ஆர்டர் செய்யும் வசதியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. கையடக்க தொலைபேசி (மொபைல் போன்) யை பயன்பாடுகள் மூலம் உலகின் எந்த நாட்டிலிருந்தும் லிட்ரோ எரிவாயுவை ஆர்டர் செய்யலாம், எனவே பின்வரும் செயலிகளுக்கு சென்று லிட்ரோ எரிவாயுவை ஆடர் செய்ய முடியும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. iOS: https://apple.co/3zesrlk அல்லது … Read more

நெதர்லாந்து – இலங்கை நேரடி விமான சேவை

நெதர்லாந்துக்கும் – இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தினை கையெழுத்திட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெதர்லாந்துடன் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை கைச்சாத்திட அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், நெதர்லாந்து … Read more

அரச சேவையிலிருந்து ஓய்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் இயங்கிவரும் பதிவாளர் நாயக கிழக்கு வலய அலுவலத்தின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி.ரஞ்சினி சுந்தரலிங்கம் நேற்று (26) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 1991 ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி அரச சேவையில் இணைந்த இவர், கொழும்பு பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் கடமையாற்றினார். 1991 ஏப்ரல் 1 ஆம் திகதி மட்டக்களப்பு காணி பதிவகத்திற்கு இடமாற்றம் பெற்று பின்னர் 2006 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் பதிவாளர் நாயக … Read more

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தியவர் கைது

பாணந்துறை, எலுவில சந்தி பகுதியிலுள்ள கடையொன்றில் பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை கலந்த மாவா எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர், சுமார் பத்து இலட்சம் பெறுமதியான மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாணந்துறை ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரால் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்து கிலோ மாவா போதைப்பொருள்; பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியில், பாடசாலை மாணவர்களும், பகுதி நேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களும் புகையிலை கலந்த மாவா எனப்படும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் … Read more