ஜாதக கதைகள் ஒலிப்புத்தகத்தின் இரண்டாவது தொகுதி வெளியீடு

அதிவணக்கத்துக்குரிய சங்கமித்தை தேரி அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தமையை குறிக்கும் முகமாக 2022 டிசம்பர் 02 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ,கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் “ஜாதக கதைகள்”  சிங்கள மொழி மூலமான ஒலிப்புத்தகத்தின் இரண்டாவது தொகுதி வெளியிடப்பட்டது.  ஜாதககதைகள் தொகுப்பிலிருந்து நன்னெறிக்கதைகள் என்ற கருப்பொருளின்கீழ் 50 ஜாதக கதைகள் இந்த ஒலிப்புத்தகத்தில் இலங்கை மக்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளதுடன் கட்புலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இந்த தொகுப்பின் … Read more

இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத முடிவை எடுத்த ஜனாதிபதி ரணில்

இலங்கையில் இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத சில தீர்மானங்களை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக எடுத்திருந்தார். உண்மையில், இந்த முடிவு மிகவும் முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.  பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, பாரம்பரிய கட்டமைப்பிற்கு வெளியே தயாரிக்கப்பட்டது. மக்களுக்கு உடனடி குறுகியகால பலன்கள் கிடைக்கும் … Read more

பஸ் கட்டண மீளாய்வு குறித்து ,தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கும்

பஸ் கட்டணங்களை மீளாய்வு செய்வது குறித்து ,தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், டீசல் விலை குறைக்கப்படதனால் பஸ் கட்டணங்களும் குறைக்கப்படுமா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். டீசல் விலை குறைக்கப்பட்டமை உண்மைதான். ஆனால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்கு 12 காரணிகள் அவசியம். … Read more

புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது

புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்று போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைகள்இ வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். புகையிரத சேவையை நட்டம் ஏற்படாதவகையில் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் புகையிரத ஊழியர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. அத்துடன், திணைக்களம் என்ற ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களினால் பல பிரச்சனைகள் … Read more

அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன் (video)

அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன் நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது நாளைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது. ஒரு நாள் முன்கூட்டி திட்டமிடுவதன் மூலம் நம்மால் ஓராயிரம் பிரச்சினைகளை சமாளிக்க இயலும். இந்த நிலையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ள என்பதை பார்க்கலாம். … Read more

உலகில் வளர்ந்த நாடுகளுடன் இலங்கை முன்னேற முடியும்.

உலகில் வளர்ந்த நாடுகளுடன் இலங்கை முன்னேற முடியும். • யாரும் நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை • நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க பங்களிப்பதே உண்மையான திறமை. • இளைஞர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறை விரைவாக செயல்படுத்தப்படும். -ஜனாதிபதி உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தாய் நாட்டை … Read more

பழமையான பொருளாதார முறைமைக்குப் பதிலாக 2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பழமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாடிதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தேவைப்படுவது வெளிநாட்டு அந்நியச்செலாவணியே என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார். … Read more

விமான சேவைகள் உயர் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய எயார் பஸ் நிறுவனம் :நிமல் சிறிபால டி சில்வா

இலங்கை விமான சேவையின் உயர் அதிகாரியொருவருக்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் பெரும்தொகையொன்றை லஞ்சமாக கொடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலல டி சில்வா தெரிவித்துள்ளார்.  துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.  ஆதாரங்கள் எயார் பஸ் நிறுவனம் இலங்கை விமான சேவையின் உயர் அதிகாரியொருவருக்கு லஞ்சம் வழங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் … Read more

பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியம் – சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவற்றின் பிரதிநிதிகளே மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளனர். கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இன்று (06) நடந்த நீண்ட, வட்டமேசை கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இந்த … Read more

மேலதிகமாகவுள்ள உணவு பொருட்களை சேமித்து உணவு வங்கியை உருவாக்குவது தொடர்பாக யாழ் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் ஆராய்வு

மேலதிகமாகவுள்ள உணவு பொருட்களை சேமித்து உணவு வங்கியை உருவாக்குவது தொடர்பாக யாழ் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இதனூடாக நலிந்த மற்றும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு உணவு வழங்குதல், வங்கிகள் ஊடாக விவசாயிகளுக்கு கடன் உதவிகளை வழங்குதல் போன்ற விடயங்களிலும் இதன்போது  கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் … Read more