P 627 கப்பல் “விஜயபாகு” என்ற பெயரில் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி கையளித்தார்.

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு” என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது. கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.   விசேட கடற்படை வாகனத் … Read more

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுதலை! வெளியான புகைப்படங்கள்

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வெளியேறிய சில புகைப்படங்களை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். கடுமையான நிபந்தனைகளுடன் பிணை இந்த நிலையில் கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்க குணதிலக்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பிணை வழங்கியது. இதற்கமைய, … Read more

சமுர்த்தி பயனாளிகளுக்கு குறைந்த வட்டியில் 5 இலட்சம் ரூபா கடனுதவி

தற்பொழுது மாதாந்த கடன் வட்டி வீதம் சுமார் 24% ஆக இருந்தாலும், சமுர்த்தி வங்கியின் கீழ் வழங்கப்படும் கடன் வட்டி விகிதங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன, இதனால் வாழ்வாதார மேம்பாட்டு கடன் வட்டி விகிதம் 10% – 15% க்கு இடையில் மட்டுமே என்று சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி பந்துல திலகசிறி தெரிவித்தார். சமுர்த்தி , சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு, விஷேட தேவைக்குட்பட்டோர் கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் தொடர்பில் … Read more

முன்னாள் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம்  நேற்று காலை (22) நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 79  நுவரெலியா மாவட்டத்தின் உடபுஸ்ஸல்லாவ டலோஸ் தோட்டத்தில் முத்துகருப்பன் வீராயி தம்பதிகளின் நான்காவது பிள்ளையாவார்..தனது ஆரம்ப கல்வியை டலோஸ் தமிழ் வித்தியாலயத்திலும் பின்பு உயர் கல்வியை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் கற்றவர். 1959 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் … Read more

எரிபொருள் இறக்குமதி செலவில் மாற்றம் – எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் 600 மில்லியன் டொலர்களாக இருந்த மாதாந்த எரிபொருள் விலை தற்போது 200-250 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். எரிசக்தி துறையை மறுசீரமைக்க கோரிக்கை தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது சிறந்து விளங்குவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், இலங்கையின் எரிசக்தி துறையை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். … Read more

மெய்நிகர் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்புக இலங்கை , ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றப் பிரதிநிதிகள் மீளாய்வு

இலங்கை பாராளுமன்றத்தின் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான பிரதிநிதிகள் குழுவும் 2022 நவம்பர் 17, வியாழனன்று ஆக்கபூர்வமான மெய்நிகர் உரையாடலை நடாத்தினர். இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தூதுக்குழுவின் தலைவருமான நிக்கோலா ப்ரோகாசினி ஆகியோர் இந்த சந்திப்பில் தத்தமது பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கினர். கடந்த 2017 நவம்பரில் கொழும்பில் நடைபெற்ற தனிப்பட்ட … Read more

3 மாத இலங்கை குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை

இலங்கையைச் சேர்ந்த மூன்று மாதக் குழந்தைக்கு தமிழகம் கோவையில் அண்மையில் சிக்கலான இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.  அறுவை சிகிச்சை சுவாசிப்பதில் சிரமம், குறைந்த எடை, அதிக வியர்வை மற்றும் பிறவியிலேயே இதய குறைபாடுகள் காரணமாக குழந்தை நீல நிறமாக மாறியிருந்தது. சிசுவின் இதயத்தின் 3டி பிரதியைப் பயன்படுத்தி நிலைமையை ஆய்வு செய்த பின்னர், மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை கடந்த அக்டோபர் 31ஆம் திகதி மேற்கொண்டுள்ளனர். வீடு செல்ல அனுமதி அறுவை … Read more

அமெரிக்கா, வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து தொடரில் நடைபெற்ற குழு பி பிரிவுக்கான லீக் போட்டியில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய அமெரிக்க அணி. முதல் பாதியின் 36ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது. இதேவேளை ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பேலே … Read more