இலங்கையில் சிறுவர்கள் என ஏற்றுக்கொள்ளப்படுபவர்களின் வயது எல்லை 16 இலிருந்து 18 ஆக உயர்கிறது

பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடல் இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை பதினாறிலிருந்து எதினெட்டாக உயர்த்தப்பட வேண்டும் என, சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் கூடியபோது (22) இதுபற்றி … Read more

முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி : இந்தியா- தென்னாப்பிரிக்கா  இன்று பலப்பரீட்சை  

இந்தியா-  தென்னாப்பிரிக்கா  அணிகள் மோதும் முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.   முதல் ரி20 போட்டி இன்று (28) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.   இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 20 ரி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் … Read more

அரச ஊழியர்களின் அலுவலக உடை அலுவலக உடை

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் சென்று கடமைகளை நிறைவேற்றும் போது ,அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொருத்தமான அலுவலக உடைகளை அணிவதற்கு அனுமதிக்குமாறு ,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நிறுவன பிரதானிகளுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள. மற்றுமொரு சுற்றறிக்கை பின்வருமாறு:

அபுதாபி T10 லீக்கில் ஏழு இலங்கை அணி வீரர்கள்

2022 ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். அபுதாபி T10 லீக் தொடரானது இந்த ஆண்டு ஆறாவது முறையாக நவம்பர் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இந்நிலையில் அணிகளுக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் நேற்று (26) நடைபெற்றது. இவ் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான சாமிக கருணாரட்னவும், துஷ்மன்த சமீரவும் இரு வெவ்வேறு … Read more

22.3 மில்லியன் ரூபாவை கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது!

வங்கியில் பணத்தை வைப்பிலிட வந்த நபரிடம் இருந்து 22.3 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இரு கொள்ளையர்களை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொள்ளையர்கள் 48 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும் , சந்தேக நபர்கள் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் அந்த பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் சந்தேக நபர்களை மடக்கி பிடித்து உள்ளதாக … Read more

ICTA நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் உலக தொழில் முயற்சியாளர் வாரம்

இம்முறை உலக தொழில் முயற்சியாளர் வாரத்தை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் இலங்கையில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அதாவது 2024 வரை முன்னெடுக்கின்றது.  உலக தொழில் முயற்சியாளர் வாரம் (GEW) என்பது தொழில் முயற்சியாளர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களை வலுவூட்டுவதற்கான சர்வதேச செயற்பாடாகும். இவ் செயற்பாடு 180 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய தொழில் முயற்சியாளர்களின் வலைப்பின்னலில் (GEN) அனைத்து நாடுளிலும் உள்ள புதிய தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு,  எதிர்வரும் 3 வருடங்களுக்கு (2024) இந்த வர்த்தகர்களை சிறப்பான … Read more

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) நேற்று டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார். சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் … Read more

கொழும்பில் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து (Live)

கொழும்பு -தொட்லாங்க கஜீமா குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தினால் ஏராளமான வீடுகள் பாதிப்படைந்துள்ளன.  தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  பொதுமக்கள்  தீ விபத்து காரணமாக குறித்த குடியிருப்பு பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  அத்துடன் காற்று காரணமான தீ வேகமாக அங்குள்ள ஏனைய குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  இந்நிலையில், இளைஞர்கள், பொதுமக்கள் … Read more

அதிகரிக்கும் அழுத்தம் – வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெற தயாராகும் அரசாங்கம்

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராக உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவது அல்லது மீள்திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதன்படி, பல பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாற்றுத் திட்டம் அறிமுகம் உயர்பாதுகாப்பு வலயங்களால் வர்த்தகம் பாதிக்கப்படலாம் … Read more

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் • ஜனாதிபதியிடம் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் உறுதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ,ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான … Read more