நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்துகாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில்அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது 10 நாட்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதற்கமைய தமிழகத்தில் நேற்று 538 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 110 பேர், செங்கல்பட்டில் 51 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 446 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. எனினும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 395 … Read more

ஸ்டேர்லிங் பவுண் மதிப்பில் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகராக பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண் 1.6 டொலர் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த பெறுமதி இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தியமையே பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுணின் பெறுமதி குறைவடைவதற்கான காரணமாகும். இதற்கு முன்னர் ஆசிய சந்தையில், ஸ்டேர்லிங் பவுணின் பெறுமதி 4% குறைந்து 1.3 டொலராக பதிவாகியுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் தொழில் புரியும் இலங்கையர்கள், தனது நாட்டிற்கு பொருட்களை அனுப்பும் போது, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, அவற்றினூடாக மாத்திரம் பொருட்களை அனுப்புமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், இவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக பொருட்கள் அனுப்புவதை தவிர்க்குமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. பொருட்கள், பயணப்பொதிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என்பவற்றை இலங்கைக்கு அனுப்பும்போது, அவை காணாமல் போகின்றன மற்றும் சேதமடைகின்றன என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை … Read more

ஜனாதிபதிக்கு எதிரான மனுக்களை விசாரணை செய்ய வேண்டாம் – உச்சநீதிமன்றம் தெரிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை தொடர வேண்டாம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ ஆஜராகி இருந்தார். தனது கட்சிக்காரர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதால்,அரசியலமைப்பின்  35ஆவது சரத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.   மேலும் இத் தாக்குதல் தொடர்பாக பிரதிவாதியாக குறிப்பிட்ட ரணில் … Read more

விசர் நாய்க்கடி (ரேபிஸ்) நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு

வாரியபொல கனத்தேவெவ பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை விசர் நாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி விசர்நாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரது வீட்டு நாயையும் கடித்துள்ளது. அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர் நாய்க்கடி தடுப்பூசி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது … Read more

வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம்

வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 18 முதல் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘மனுசவி’ என்ற ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுசவி ஓய்வூதியத் திட்டத்தில் பயனடைவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுத் தொழிலிலுக்காக சென்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி கடற்றொழில் சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

மன்னார், ஜோசப் வாஸ் நகர் பிரதேசத்தில் இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக இருக்கும் காணியை குத்தகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடற்றொழில் சங்கத்திற்கு வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறித்த காணி உத்தியோகபூர்வமாக நேற்று (25) ஜோசப் வாஸ் நகர் கடற்றொழில் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம் காரணமாக விடத்தல்தீவில் இருந்து 1990 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் தீவில் ஜோசப் நகர் எனும் இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். எனினும், குறித்த … Read more