30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கம்

நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கப்படவுள்ளது. இதேபோன்று மசகு எண்ணெய்யுடனான மற்றுமொரு கப்பல் நேற்று (23) நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஒட்டோ டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ளது. ஒக்ரைன் 92 வகை பெற்றோலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக அமைச்சர் கூறினார். இதேவேளை,  மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் … Read more

300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை

சொக்லேட், கொக்கோ மற்றும் அமுக்கப்பட்ட பால், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (23) முதல் அமுலுக்குவரும்வகையில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தவிர, வெண்ணெய், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர், சுவையூட்டப்பட்ட பழங்கள், பருப்புவகைகள் , சொக்லேட் மற்றும் கோகோ பொருட்கள் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், முக சவரத்திற்கு பயன்படுத்தப்படும் பொருள் (ஷேவிங்கிற்கு பயன்படுத்தப்படும் ஆஃப்டர் … Read more

கடற்பரப்புகளில், அவ்வப்போது ஓரளவுகொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஓகஸ்ட் 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்புமற்றும்காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுமேற்கு முதல் தென்மேற்குவரையான திசைகளிலிருந்துதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் … Read more

அரச ஊழியர்களை பகுதி அளவில் சேவைக்கு அழைக்கும் நடவடிக்கை இன்று(24)டன் முடிவு

அரச ஊழியர்களை பகுதி அளவில் சேவைக்கு அழைக்கும் நடவடிக்கை இன்று(24)டன் முடிவுக்கு வருகிறது. இதற்கு அமைய நாளை தொடக்கம் சகல அரச ஊழியர்களும் வாராந்த ஐந்து நாள் சேவைக்கு சமூகமளிப்பது கட்டயமானதாகும் என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். அரச ஊயழிர்களை பகுதி அளவில் சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்றுடன் ரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் அரச சேவை நாளை தொடக்கம் வழமையான போன்று இயங்கும்.கொரோனா வைரஸ் பரவல், நாட்டில் நிலவிய அரசியல் … Read more

சந்தையில் முட்டையின் விலை, கட்டம் கட்டமாக குறைவடையும்

முட்டை விலையை குறைப்பதற்கு, கோழி பண்ணையாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் , சந்தையில் முட்டையின் விலை, கட்டம் கட்டமாக குறைவடையும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோழிகளுக்கான தீவனம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் அதிக செலவுகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி, தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் இந்த பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இதற்கமைவாக விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு. இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபா. ஒரு கிலோ பருப்பு 460 ரூபா. ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபா. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபா. ஒரு … Read more

பெரும்போகத்திற்கு தேவையான பசளையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை

பெரும்போகத்திற்கு தேவையான பசளையை பெற்றுக்கொள்வதற்கான கேள்விப்பத்திரத்தை தயாரிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைத்த இரண்டாவது தொகுதி பசளையை பொறுப்பேற்ற நிகழ்வுக்குப் பின்னர் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த பசளை நேற்று இலங்கையை வந்தடைந்தது. இவற்றை குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு ஏற்றும் நடவடிக்கை நேற்றே ஆரம்பமானது. இந்த உரத்தை பகிர்ந்தளிக்கும் போது தேயிலை மற்றும் சோளச் செய்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். பசளையை இலங்கைக்கு கையளிக்கும் … Read more

ஜனாதிபதி-   பொலிஸ்மா அதிபர் சந்திப்பு 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கும்   இடையிலான சந்திப்பொன்று இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்  பதவியேற்றதன் பின்னர்  மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு  இடம்பெற்றது.இதன் போது    நினைவு பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஜனாதிபதி ஊடக பிரிவு 2022-08-23

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேலும் 4 பேர் கைது

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவரது பணப்பையை திருடி அவரை பேற வாவியில் தள்ளிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் … Read more