பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் பதவியேற்றதன் பின்னர் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன. பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்ற), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வான்படைத் தளபதி எயார் … Read more

இலங்கையிலுள்ள 'சேவ் தி சைல்ட்' பிரதிநிதிகள் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவுடன் (NAHTTF) சந்திப்பு

ஆட்கடத்தளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக தாக்கத்தை உருவாக்குவதற்கும் நோக்கத்துடன் அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ‘சேவ் தி சைல்ட்’ அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் (Nயுர்வுவுகு) கூட்டம்  (ஆகஸ்ட் 17) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட புதிய கட்டிடம் திறப்பு

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம்நேற்றைய தினம் (18) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி – அறிவியல் நகரில் அமைந்துள்ள இந்த புதிய தொழில்நுட்ப பீடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 … Read more

யாழ்ப்பாண மாவட்ட கல்வி பிரச்சினைகளுக்கு நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.இவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் கல்வி பிரச்சினைகளை ஆராயும் வகையில் ,கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார் .இதன் போது  இவை தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டன. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட … Read more

யாழ் இந்துக்கல்லூரிக்கு கல்வி அமைச்சர்  விஜயம்

யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று (19) விஜயம் செய்துள்ளார். இதேவேளை  யாழ்ப்பாணம் திறந்த பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழகத்தின் பிராந்திய கற்கை நிலைய கட்டடத்தையும் திறந்துவைத்தார் இந்த கட்டடம், அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும், மாணவர்களின் நிதி பங்களிப்போடும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் … Read more

இலங்கையில் சில பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் சில பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட தகவலில், அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும். அடிக்கடி அதிகரிக்கப்படும் பொருட்களின் விலைகள் தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பொதி … Read more

கடுமையான காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை

கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன குறித்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடன் வைத்தியரை நாடவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது … Read more

இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதத்திற்கு 12,444 ரூபா தேவை

இலங்கையில் ஒருவருக்கு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 12,444 ரூபாவாகும் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூன் 2022 மாதத்துடன் தொடர்புடைய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக் கோடு விளக்கப்படத்தின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெறுமதி ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்ப தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு தனது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 13421 ரூபா … Read more

பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். இச்சோதனையின் போது சந்தேகநபரிடம் இருந்து 710 மில்லிகிராம் கேரளா கஞ்சாஇ இலத்திரனியல் தராசு மற்றும் 13500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக … Read more

பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் காய்ச்சல் நீடித்தால்….

ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால்இ உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள். இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனை அல்லது டெங்கு ஆன்டிஜென் பரிசோதனை … Read more