கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மற்றுமொரு அபிவிருத்தி திட்டம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த மற்றுமொரு ஜப்பானிய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.  ஏற்கனவே ஜெய்க்கா நிறுவனம் தனது திட்டங்களை நிறுத்தியுள்ள நிலையில், Taisei நிறுவனமும்  பணிகளை நிறுத்த தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளது. குறித்த திட்டத்துக்கான நிதியுதவியை இடைநிறுத்தியமையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம் மற்றும் வீதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் 2020 இல் பெற்றுள்ளது, … Read more

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்தது யுவான் வாங் 5 (Photos)

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.  யுவான் வாங் 5 சீன கப்பல் இலங்கை வருவது தொடர்பில் பலத்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்த சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. வட்டமிடும் யுத்த – உளவு கப்பல்கள்! இலங்கையை கதிகலங்கச் செய்துள்ள சீனா  இந்த … Read more

இந்திய அரசாங்கம் நேற்று (15)  வழங்கிய முதலாவது கடல்சார் ரோந்து (டோனியர் 228) விமானத்தை,  இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆற்றிய முழுமையான உரை

காலங்காலமாக எங்களுக்கு உதவி செய்து வரும் இந்திய அரசுக்கும் இந்திய கடற்படைக்கும் முதலில் நன்றி கூற வேண்டும். எனக்கு 6 அல்லது 7 வயதாக இருக்கும் போது, ​​நான் முதன்முதலில் ஒரு போர்க்கப்பலில் ஏறியது எனக்கு நினைவிருக்கிறது. அது இந்திய கடற்படைக்கு சொந்தமானது. அப்போது பிரிட்டிஷ் அரச கடற்படை அந்த இந்தியக் கப்பலை இந்நாட்டுக்கு வழங்கியிருந்தது. விமானப்படைத் தளபதியும் இந்திய உயர்ஸ்தானிகரும் இந்த விமானம் பற்றி நீண்ட விளக்கம் அளித்துள்ளதால், இன்று இந்தியாவின் 75 வது சுதந்திர … Read more

அரச நிறுவனங்களின் தலைவர்கள் தொடர்பான புதிய நியமனங்களுக்கு நியாயமான காரணங்கள் தேவை

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ ஆகியோர் செயற்படுவார்கள். இந்தக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச … Read more

ராஜபக்சவின் குப்பை வண்டியில் பயணிக்க தயாராக இல்லை – சஜித் ஆதங்கம்

ராஜபக்சவின் குப்பை வண்டியாக இருக்கும் அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எவரும் அங்கம் வகிக்க மாட்டார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உண்மையான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆதரவளிப்பார்கள் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அதைச் செய்வார்கள் எனவும் கூறினார். நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அமைச்சுப் பதவிகள் தேவையில்லை என … Read more

பாரத மக்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் 75வது சுதந்திரதின வாழ்த்துக்கள் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, உப கண்ட நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் பாரத தேசத்தின் 75 ஆவது சுதந்திரதினமான இன்று பாரத மக்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் இனிய 75வது சுதந்திரதின வாழ்த்துக்களை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கலை, கலாச்சார, மத, பண்பாட்டு ரீதியான இருநாட்டுத் தொடர்புகளை கொண்டுள்ள நாம், பாரத தேசத்தின் இந்த பொன்னான நாளில் பாரத மக்களுக்களோடு … Read more

ஜனாதிபதியின்  தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் – புலம்பெயர் உறவுகளிடம் கடற்றொழில் அமைச்சர்  வேண்டுகோள்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினை நல்லெண்ணச் சமிக்கையாக புலம் பெயர் உறவுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவினை எந்தவிதமான சஞ்சலமும் இன்றி துணிச்சலாக வெளிப்படுத்திய எம்மால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைுவேற்றும் வகையில் சுமார் 10 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்றாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் … Read more

இத்தாலிக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடி

இலங்கை இத்தாலிய தூதரக அதிகாரி ஒருவர் போல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, பெண் ஒருவரிடம் நான்கு இலட்சத்து ஏழாயிரம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் நேற்று (14) கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து, இத்தாலிய தூதரகத்தால் வெளியிடப்படும் விசேட ஸ்டிக்கரைப் போன்ற 27 ஸ்டிக்கர்கள், போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் 42 வயதான ஒருவர் … Read more

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்துங்கள்

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும்.இதனால்  விசேடமாக அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ;தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் … Read more