கடலுணவுகளை Online மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஆரம்பம்

பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை Online மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன் விற்பனை நிலையத்தில் இன்று (15) சம்பிரதாயபூர்வமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வாழ்கை முறை மாற்றமடைந்து வருகின்ற நிலையில், வீடுகளில் இருந்தவாறே கடலுணவுகளை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான இணைய வழிச் சேவையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் … Read more

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

நாளாந்த மின்வெட்டு நாளை (16) முதல் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அலகு 01 இல் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்வெட்டு நீடிக்கப்படவுள்ளதாக PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய மின்வெட்டு 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்றும், அதற்கு ஏற்றாற்போல் நாளை முதல் நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நுரோச்சோலையத்தின் முதலாம் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஏ‌ற்ப‌ட்ட சிறிய … Read more

இலங்கைப் பத்திரங்கள் மீதான மதிப்பீட்டை D ஆக குறைத்தது S&P குளோபல்

குளோபல் ரேட்டிங் முகவரமான S&P குளோபல், வட்டி மற்றும் அசல் கொடுப்பனவுகளைத் செலுத்தத் தவறியதை தொடர்ந்து, இலங்கைப் பத்திரங்கள் மீதான மதிப்பீட்டை D ஆகக் குறைத்துள்ளது. இலங்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடன் பத்திரத்தை செலுத்தத் தவறியதுடன், தனியார் கடனாளிகளிடம் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைக் கொண்டிருந்தது. மேலும், சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது. இலங்கையின் வெளிநாட்டுப் பொதுக் கடன் முடக்கம் அரசாங்கத்தின் சர்வதேச … Read more

கடற்படையின் விசேட அறிவிப்பு

இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையில் இராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. வெளிநாட்டு கடற்படைகளுடன் தொடர்பு மற்றும் நட்புறவை வளர்ப்பதற்கும், இலங்கை கடற்படை வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்குடனும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வந்து மீண்டும் திரும்பும் போது, அதே கடற்படையினருடனான உடன்படிக்கையுடன் இலங்கை கடற்படையால் நட்புரீதியான கடற்படை பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த நட்புரீதியான கடற்படை பயிற்சியில் … Read more

பொறி வைத்து யானைகளை கொல்லுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள்

மனித நடவடிக்கைகளினால் காட்டு யானைகள் இறக்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று விவசாய மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக புதிய சட்ட விதிகளை, உரிய சட்டத்தில் விரைவில் உள்ளடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மிஹிந்தலை, புதுக்குளமா கிராமத்தில் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போதே அமைச்சர் இதனைத் … Read more

மிகச் சிறப்பாக இடம்பெற்ற மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இன்று (15) காலை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இன்று (15)  காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான … Read more

டோனியர் 228 முதலாவது கடல்சார் ரோந்து விமானத்தை இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டோனியர் 228 முதலாவது கடல்சார் ரோந்து விமானத்தை இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டோனியர் 228 முதலாவது கடல்சார் ரோந்து விமானத்தை இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று (15) காலை நடைபெற்றது.  

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்! பாதுகாப்பு அமைச்சிடம் விமலின் வலியுறுத்தல்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான தெளிவான விளக்கத்தைப் பாதுகாப்பு அமைச்சு கூற வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.  6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே விமல் வீரவன்ச குறித்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை எதற்காக நீக்கப்பட்டது. தடை … Read more

இந்திய சுதந்திரத்தின் மகிமைமிகு 75 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்கள்  

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவானது இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் 2022 ஆகஸ்ட் 15ஆம் திகதி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சுயசார்பு இந்தியாவையும் 75 ஆண்டுகால முன்னேற்றத்தையும் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோற்சவ்’ நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்தக் கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன.2.  கொழும்பில் பிரதான நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தன. இந்திய தேசியக்கொடியினை ஏற்றிவைத்த உயர் … Read more

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திறைசேரியின் செயலாளரின் சுற்றறிக்கையின் விதிகளை நடைமுறைப்படுத்துவது கட்டாயமாகும்

“அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட 26-04-2022 தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும்  சபைகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க அவர்கள் … Read more