மின்சார சபை ஊழியர்களுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம்

எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க  இதனை தெரிவித்துள்ளார். வருடத்திற்கு மூன்று போனஸ் எண்ணெய் கூட்டுத்தாபனம் உட்பட நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் வருடத்துக்கு மூன்று போனஸ் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டடார். எரிபொருள், எரிவாயு கிடைக்காதது அரசாங்கத்தின் தவறே தவிர மக்களின் தவறல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை … Read more

ஆகஸ்ட் 19 முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம் – எரிசக்தி அமைச்சர்

ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகர இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   மேலும், கடந்த நான்கு வாரங்களாக மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை விநியோகிக்க முடியவில்லை. இருப்பினும், தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.   கடந்த காலங்களில் சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டில் இல்லாததனால் மண்ணெண்ணையை … Read more

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் மறைக்கப்படும் உண்மைகள் – வாசுதேவ நாணயக்கார

பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோலிய அமைச்சரும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகளை மறைக்கின்றனர் என்பது அவர்களின் நடத்தையில் இருந்து தெளிவாகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்ற போதிலும் அதனை வழங்க முடியுமா இல்லையா என்பதை அமைச்சர் ஆராயாமல் இருப்பது பிரச்சினையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்தில் உண்மை உள்ளதா என்பதைக் … Read more

சீஷெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா ,எத்தியோப்பியா அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து  

சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள சீஷெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன் (Wavel Ramkalawan), அவர்கள், இலங்கை தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அனைத்து சவால்களையும் வென்று பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை அடையும் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு டென்மார்க் பிரதமர் மெட் பிரடெரிக்சன் (Mette Frederiksen) தனது … Read more

லங்கா பிரிமியர் லீக் எதிர்வரும் டிசம்பர் மாதம்

லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடர் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. ஐந்து அணிகள் இந்த சுற்றுத்தொடரில் பங்கேற்கவிருக்கின்றன. இறுதிப் போட்டி டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சுற்றுத்தொடரின் ஏற்பாட்டாளர் சமந்த தொடன்வெல தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவையாகவும் லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. 

இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! மின் அலகுகளுக்கான கட்டணம் தொடர்பில் தெளிவான விபரம்

நாட்டில் இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அலகுகளுக்கான கட்டணங்கள் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் உள்ளிட்ட விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறுகையில், இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. நாட்டில் 78 இலட்சம் வாடிக்கையாளர்கள், மின்சாரத்தை பெறுகின்றனர். அவர்களில் 67 இலட்சம் பேர் வீட்டுப்பாவணைக்காகவும், … Read more

விரைவில் லாஃப்ஸ் கேஸ் விலையும் குறைக்கப்படும்

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின்  விலையை குறைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். விலைத் திருத்தம்  நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையானது விலைத் திருத்தத்தை மேற்கொள்வதாகவும், லாஃப்ஸ் கேஸின் விலை மற்றும் விநியோக முறை தொடர்பில் ஏதேனும் வாடிக்கையாளர் முறைப்பாடுகள் … Read more

மேலும் பலர் கைது

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கிக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜுலை … Read more

 ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேகநபர், கடுவெல பிரதேசத்தில் உள்ள கிரானைட் கற்சுரங்கம் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை கிரானைட் கற்சுரங்கப்பகுதிக்கு  அழைத்துச் சென்ற பொழுது மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 34 வயதான “துவான்” என அடையாளம் காணப்பட்ட அவர், குற்றக் கும்பல் தலைவரான “அங்கொட லொக்காவின்” நெருங்கிய … Read more

பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு

இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாட்டுக்கு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகவும், பின்னர் அவற்றை வேலை விசாவாக மாற்றலாம் என்றும் கூறிவருகின்றனர். இதனால் இத்தொழிலாளர்கள் ஆட்கடத்தலுக்கு பலியாகி வருவதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குறிப்பாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை சோதனை செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாக, நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாத வெளிநாட்டு குடியேற்றவாசிகள் வாராந்தம் சுமார் 20 பேர் என்ற … Read more