அலரி மாளிகை சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக ஒருவர் நபர் கைது

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட ஆதிமலை தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 53 வயதுடைய கொழும்பு-03 பகுதியைச் சேர்ந்தவர். சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் … Read more

கொட்டாஞ்சேனை வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளை…

கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டுக்குள் கைவிலங்குடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவர், வீட்டில் வசிக்கும் யுவதியின் கையை துணியால் கட்டி, கணவன் மற்றும் மனைவியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் துப்பாக்கி இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் தங்கம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில், வீட்டு உரிமையாளர்களை அறையில் … Read more

வாகன விபத்துடன் தொடர்புடைய சாரதியை தேடும் பொலிஸார்

சீனிகமவில் நேற்று(8) 52 வயதுடைய நபரொருவர் உயிரிழந்த சம்பவத்தில் . தொடர்புடைய இனந்தெரியாத வாகனம் மற்றும் அதன் சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர். நேற்று அதிகாலை (8) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மீட்டியாகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ,சடலம் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூடு பிடிக்கும் கப்பல் விவகாரம் – இலங்கையின் விளம்பரத்தை தடை செய்த சீன சமூக ஊடகங்கள்

சீனக் கப்பலின் வருகையை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்காக இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விளம்பரப் பிரச்சாரத்தை சீன சமூக ஊடகத் தளம் இடைநிறுத்தியுள்ளதாக உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகள் இந்த பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை ‘Douyin’ இல் தொடங்க ஏற்பாடு செய்தனர். எனினும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பலின் துறைமுக அழைப்பை இலங்கை ஒத்திவைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது நடந்ததாக இலங்கை … Read more

சோளம் ,உருளைக்கிழங்கு, தேயிலைக்கு யூரியா பசளை

சோளம் ,உருளைக்கிழங்கு, மற்றும் தேயிலைக்காக வழங்கப்படும் 50 கிலோகிராம் யூரியா பசளையை 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் வழங்கிய யூரியா பசளையில் 30 ஆயிரம் மெற்றிக் தொன் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலான அளவு வட மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் அளவு சுமார் பத்தாயிரம் மெற்றிக் தொன்களாகும். விவசாயிகள் அனைத்து செய்கைகளுக்கும் பசளையை கோரி நிற்பதாக தெரிவித்த விவசாய அமைச்சர், தற்போது கையிருப்பில் பசளை இருப்பதால் … Read more

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, 12 அரை கிலோ கிராம் கேஸ் சிலிண்டரின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டரின் புதிய விலை நான்காயிரத்து 664 ரூபாவாகும். ஐந்து கிலோகிராம் கேஸ் சிலிண்டரின் விலை 99 ரூபாவால் குறைக்கப்பட்டுள்து. இதன் புதிய விலை ஆயிரத்து 872 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 859 ரூபாவாகும். இது 45 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கணவர் மரணத்திற்கு பின் மீனா யாரை சந்தித்திருக்கிறார் பாருங்க

நடிகை மீனா கணவர் மரணத்திற்கு பின் முதல்முறையாக வெளியில் வந்திருக்கிறார். சங்கவி, ரம்பா உள்ளிட்ட அவரது தோழிகளை சந்தித்து இருக்கிறார். Source link

பேருந்து ,முச்சக்கர வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

பேருந்துகள் மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு, அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான எரிபொருள் தேவைகளை கண்டறியும் கலந்துரையாடல் இன்று காலை (9) போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது போக்குவரத்து ஆணைக்குழுவின் மூலம் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்குமான எரிபொருள் தேவைகளை அடையாளம் காண தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். … Read more