கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வரலெட்சுமி விரதம்

வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வரலெட்சுமி விரத பூசை வழிபாடுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றன. விஷேட சிறப்பு பூசையில் கலந்து பலர் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலையை குறைத்தது லிட்ரோ

எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது.  விலை விபரங்கள் இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்கான எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.  அத்துடன், 5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது.  மேலும், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை … Read more

ஜனாதிபதி ரணில் மீது சுமந்திரன் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொய் சொல்கிறார். டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாகத் தீர்மானித்தது. ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்தபோது இந்த விடயத்தையும் இதேபோன்ற … Read more

ஐஓசி எரிபொருள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இலங்கையில் மேலும் பல எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐஓசி   நிறுவனத்திற்கு (LIOC) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளதாக LIOC நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்தார். ஐஓசியின் வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி லங்கா ஐஓசியின் புதிய எரிபொருள் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், லங்கா ஐஓசி பிஎல்சி 2022 ஜூன் 30  இல் முடிவடைந்த … Read more

இந்திய – இலங்கை உடன்படிக்கையை இலங்கை மதிக்க வேண்டும்! தமிழக கட்சி வலியுறுத்தல்

1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன் இந்த உடன்படிக்கை, நடைமுறைப்படுத்தப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வரவேற்கப்படும் இலங்கை அரசாங்கத்தின் முடிவு இதேவேளை சீனாவின் யுவான் … Read more

அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும்

இன்று முதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிசார் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவிக்கையில், வாகனங்களை மட்டுப்படுத்துதல், அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில் வாகன ஓட்டுனர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். நாடு தற்சமயம் வழமையான நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்றில் இருந்து பெருமளவிலான வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கையும் இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

QR எரிபொருள் ஒதுக்கீடு புதுப்பிக்கப்படும்

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர நடைமுறையின் கீழ் ஒவ்வொரு வாகனத்திற்கும் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு நேற்று நள்ளிரவு முதல் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக ,கடந்த வாரம் வழங்கப்பட்ட அதே அளவிலான எரிபொருள் ஒதுக்கீடு ஒவ்வொரு வாகன வகைக்கும் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்து இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ,தேசிய எரிபொருள் அனுமதி பத்திர நடைமுறையின தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வெளியிட்டுள்ள … Read more

ஹட்டனில், சிறுத்தைப்புலி: உயிரிழப்பு

ஹட்டனில் சிறுத்தைப்புலி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது. அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்ததாக.நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (07.08.2022) காலையில் சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது. நான்கு அடி நீளம் கொண்ட சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், அட்டன் … Read more