பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு  

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபிவிருத்தியடைந்து வரும் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடியதுடன், பல துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார். இரு வழி உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானித்தனர். … Read more

ஜனாதிபதி ரணில் பதவி விலகும் நாளை கணித்த பிரபல ஜோதிடர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகப்படி ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பின்னர் அவர் ஜனாதிபதி பதவியை துறக்க நேரிடும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார ஸ்திரமின்மையும் நிலவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தான் இவை அனைத்தையும் கூறுவதாகவும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்து … Read more

இலங்கை திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச – வெளியாகியுள்ள தகவல்கள்

 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்பவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறி சிக்கப்பூரில் தங்கியுள்ளார். கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய அவர் இலங்கைக்கு சேவை செய்ய காத்திருப்பதாக தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி … Read more

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் – 2021 யூன்

வரலாற்றில் உயர்ந்தளவிலான மாதாந்த ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சி என்பவற்றின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வணிகப்பொருள் வர்த்தக மீதி 2002 ஓகத்திலிருந்து முதற்தடவையாக 2022 யூனில் மிகையொன்றினை பதிவூசெய்துள்ளது. பயண ஆலோசனைகள் மற்றும் தற்போதைய எhpபொருள் பற்றாக்குறை மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள் என்பவற்றுடன் தொடர்புடைய எதிர்மறையான எண்ணங்களிற்கு மத்தியில் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் தாழ்ந்த மட்டத்திலிருந்து 2022 யூனில் அதிகரிப்பொன்றை (ஆண்டிற்காண்டு) பதிவூசெய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 மேயூடன் ஒப்பிடுகையில் … Read more

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு…

ஜப்பானின் தய்சே நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் கோரப்பட்டதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. விசாரணைக் குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி குசலா … Read more

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் ரஷ்யத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டரி புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரியின் நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் மேட்டரி, புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கான ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் வாழ்த்துச் செய்தியைக் கையளித்தார். இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாரம்பரியமான வலுவான பங்காளித்துவத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து ரஷ்யத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் … Read more

பிரதமர் பொதுமக்களிடம் கோரிக்கை

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  ஒரு நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் சட்டம் ஒழுங்கு மிக அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.  இன்று (31) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் அங்கு மஹாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காக சர்வதேச ரீதியில் எமக்கு ஆதரவுகள் கிடைக்கின்றன. சட்டம், … Read more

இலங்கையை நோக்கி விரையும் சீன கப்பல் தொடர்பில் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்

இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சீன கப்பலின் நடமாட்டத்தை அவதானித்து கொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் பிரின்டிற்கு தெரிவித்துள்ளன. இது தொடர்பில் பிரின்ட் வெளியிட்டுள்ள தகவலில்,“இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் சீன கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணிக்கின்றது. சீன கப்பல் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையும் என அறியமுடிகின்றது. யுவான் வாங்-5 என்ற சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விண்வெளி மற்றும் செய்மதி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட கப்பலின் வருகையை முதலில் மறுத்த இலங்கையின் … Read more