இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் நடக்காத அவலம்! முன்னாள் ஜனாதிபதியின் அறிவிப்பு

 இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் நடக்காத ஒரு அவலம் நாட்டில் இடம்பெற்று வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பொன்றின் மூலம் அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.  நாட்டை முற்றாக அழிக்கும் செயற்பாடு அதிகாரத்தின் முன் கிறுக்குத்தனமான சிறு கும்பல் இந்த நாட்டை முற்றாக அழிக்க செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி மற்றும் செயற்குழு ஜனாதிபதியின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் போது இருமுறை சிந்திக்குமாறு அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். Source link

சட்டவிரோதமாக கடவுச்சீட்டு தயாரிக்க இலஞ்சம் பெற்ற மூவர் கைது

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கண்டி கிளை அலுவலகத்திற்கு கடவுச்சீட்டு பெற வரும் இளைஞர்களுக்கு ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்து 6,000 முதல் 50,000 ரூபா வரை பணம் பெற்றதாகக் கூறப்படும் அந்த அலுவலகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் மற்றும் மேலும் இருவரை அங்கு இருந்த இளைஞர்கள் குழுவொன்று பிடித்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கு கண்டி … Read more

ஆதிவாசிகள் பிரச்சினைகள், நுண்நுதி செயற்பாடு மூலம் மாவட்ட பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் ஆதிவாசிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் நுண்நுதி செயற்பாடு மூலம் மாவட்ட பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்று (12) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது. மூதூர் பிரதேச செயலகத்தின் நல்லூர், சந்தோசபுரம் உள்ளிட்ட கரையோரம் சார்ந்த சில கிராமங்களிலும் வெருகல் பிரதேசத்தின் சில கரையோரம்சார் கிராமங்களிலும் ஆதிவாசிகள் வசித்து வருகின்றனர். யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்த போது தமது பூர்வீக இடங்கள் இன்னொரு தரப்பினர் … Read more

மாலைதீவை விட்டு வெளியேறுமாறு கோட்டாபயவுக்கு கடும் அழுத்தம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.  மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். கோட்டாபயவை வெளியேற்றுமாறு கோரிக்கை #Maldivas Not to provide Refuge or Asylum to GR. The people of Maldives 🇲🇻 stands with the people of #Srilanka 🇱🇰 — Thayyib #Maldives (@thayyib) July … Read more

இந்திய உரத்தை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இல்லை

இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட யூரியா உரமானது இலங்கையின் நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்றது என தேசிய உர செயலகம், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட யூரியா உரம் தொடர்பில் தேசிய உர செயலகம் இலங்கையில் தரநிலை அறிக்கையை பெற்று, அதன் பிரகாரம் உர மாதிரிகளை இலங்கையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் உள்ள பையூரேட் சதவீதம் குறித்த அறிக்கையை பெற்றுக்கொண்டது. இந்த யூரியா உரத்தின் பையூரேட் சதவீதம் 0.9% எனவும், … Read more

ரயில் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் – 1971

ரயில் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கும், முறைப்பாடு செய்வதற்கு ஏற்ற விதத்தில் 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கம் இன்று காலை 7 மணி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரயில் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். ரயில் புறப்படும் நேரம், ஆசனங்களை ஒதுக்குதல், ரயில் கட்டணம் தொடர்பான தகவல்கள், பாதுகாப்பு சேவை, ரயில் குறுக்குப் பாதையில் இடம்பெறும் சிக்கல்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் குறைபாடுகளையும் இதன்மூலம் முன்வைக்க முடியும். மும்மொழிகளிலும் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

உலகம் முழுவதும் விமானப் பயணங்கள் முடங்கும் வாய்ப்புகள் அதிகம்

சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட்டுக்களின் விலை கணிசமான அளவு உயர்வடையும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராமையும் இதற்கு ஒரு காரணம் என்று சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் விலீ வொல்ஷ் Willie Walsh  சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் சில மாதங்களில் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் வருவதால், விமான டிக்கெட்டுக்களின் விலை கணிசமான அளவு உயர்வடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலகின் பல நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் அதிகளவான … Read more

பசில் ராஜபக்சவும் இலங்கையிலிருந்து வெளியேறினார்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் இராணுவ விமானம் ஒன்றின் மூலம் மாலைத்தீவு நோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பசில் … Read more