April month movies: ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகும் படங்கள்.. அட ஜிவி பிரகாஷ் படங்கள் 2 ரிலீசாகுதா!

சென்னை: 2024ம் ஆண்டு துவங்கி அதற்குள் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று மாதங்களில் ஏறக்குறைய 70க்கும் மேற்ப்பட்ட படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளன. இந்தப் படங்களில் சில படங்களே அதிகமான கவனத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியிலேயே பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய்யின்

கவுதம் மேனனின் கனவுப்படம் 'துப்பறியும் ஆனந்த்'

காதல் படங்களாகட்டும் ஆக்ஷன் படங்களாகட்டும் தனக்கென ஒரு ஸ்டைலிஷான பாணியல் படங்களை இயக்கி வருபவர் கவுதம் மேனன். அதனால் இவரது படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் வட்டம் உண்டு. அந்த வகையில் இவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாக காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படமும் அப்படி ஒரு ஸ்டைலிசான ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. விரைவில் அந்த படம் வெளியாகவும் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் வெற்றிகரமாக நடந்த பிறகு தான் … Read more

பொண்டாட்டி கால்ல பட்டுனு விழுந்துடுவேன்.. விஜய் ஆண்டனியின் கலகல பேட்டி!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத ரொமாண்டிக் காமெடி ஜானர் திரைப்படமான ரோமியோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி தனது மனைவி குறித்து பல விஷயத்தை

30 வருடங்களுக்குப் பிறகு சந்திப்பு – மதுபாலா மகிழ்ச்சி

தமிழ் சினிமா உலகம் மட்டுமல்லாது இந்திய சினிமா உலகமும் திரும்பிப் பார்க்க வைக்கும் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தமிழில் 'இந்தியன் 2', தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' என இரண்டு பிரம்மாண்டப் படங்களை இயக்கி வருகிறார். இந்த ஆண்டில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி இந்தியத் திரையுலகத்தில் வசூல் சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்குனராக அறிமுகமான 'ஜென்டில்மேன்' படம் 1993ம் ஆண்டு வெளியானது. அப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். அவரது அப்பாவித்தனமான … Read more

Actor Mohanlal: ஆடு ஜீவிதம் படத்திற்காக காத்திருந்தேன்.. நடிகர் மோகன்லால் வெறித்தனம்!

சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகியுள்ள ஆடு ஜீவிதம் படத்தை 16 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிளெஸ்ஸி. இந்தப் படத்திற்கான அவரது தொடர் முயற்சிகளுக்கு உறுதுணையாக பிரித்விராஜூம் இருந்துள்ளார். இந்தப் படத்திற்காக உடல் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அவர்

தனியொருத்தியாக ஒரு படத்தை உருவாக்கிய சாதனை பெண்

சினிமாவின் அனைத்து பணிகளையும் ஒருவரே செய்து ஒரு படத்தை உருவாக்கும் சாதனை முயற்சிகள் அவ்வப்போது நடந்துள்ளது. கணேஷ் பாபு என்ற நடிகர் மற்றும் இயக்குனர் காட்டு புறா, நானே வருவன் உள்ளிட்ட சில படங்களில் 24 துறைகளில் பணியாற்றி சாதனை படைத்தார். 'வெங்காயம்' படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் தற்போது 'தி ஒன்' என்ற படத்தின் அனைத்து பணிகளையும் அவரே செய்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவின் 31 துறைகளை கையாண்டு பல விருதுகளை பெற்று சாதனை … Read more

கண்ணீரில் கரையவைத்த காதல் கதை.. ஒரு தலைராகம் பட நடிகை ரூபா எப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஒருதலை ராகம். இப்படம் தமிழகத்தில் அந்த காலத்தில் 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் நடித்த நடிகை ரூபா, இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா? 1980 ம் ஆண்டு டி ராஜேந்திரன் எழுதி,இயக்கிய திரைப்படம் ஒரு தலை ராகம்,

சத்தமின்றி அடுத்த படத்தை முடித்த மணிகண்டன்

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மணிகண்டன், 'ஜெய் பீம்' படத்தின் மூலம் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். அதன்பிறகு அவர் நடித்த 'குட் நைட்' படம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியது. கடைசியாக வெளிவந்த 'லவ்வர்' படம் அவரது வணிக பரப்பை விரிவுபடுத்தியது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சத்தமின்றி நடித்து முடித்திருக்கிறார் மணிகண்டன். சினிமாக்காரன் என்ற நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி உள்ளார். … Read more

Neeya naana: 5 லட்சம் சம்பளத்துக்கு இருமடங்கு வேலை வாங்குவார்கள்.. நீயா நானா ஷோவில் ஐடி ஊழியர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பல ஆண்டுகளைக் கடந்து மாஸ் காட்டி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷன்களில் முக்கியமானது ஆங்கர் கோபிநாத். இந்த நிகழ்ச்சி துவக்கத்திலிருந்து அவர் தன்னுடைய சிறப்பான ஆங்கரிங்கால் நிகழ்ச்சியை சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி

கொலை மிரட்டல் : நடிகை சரண்யா மீது போலீஸில் புகார்

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர். பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சரண்யா – ஸ்ரீதேவி … Read more