வாணி ஜெயராம் இறந்தது எப்படி? – வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்

சென்னை: பின்னணி பாடகி வாணி ஜெயராம், வீட்டில் தனியாக வசித்து வந்ததார். பல முறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தேன் என அவரது வீட்டில் பணிபுரிந்தவர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 19மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் இன்று(பிப்., 4) காலமானார். தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக தவவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்கொடி நிருபர்களிடம் … Read more

Vani Jairam: பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம்: போலீசார் பரபரப்பு வழக்கு.!

இந்திய சினிமாவில் நீண்ட காலமாக பிரபல பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். தமிழ் சினிமாவில் முதன் முறையாக தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஒடியா உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்பட்டு வந்த வாணி ஜெயராம், சிறந்த … Read more

”சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்துங்கள்”-இயக்குநர் வெற்றிமாறன் பேச்சால் சூடுபிடித்த விவாதம்!

இயக்குநர் வெற்றிமாறன் பள்ளிக் கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது சரியா என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் தமிழ் … Read more

வாணி ஜெயராம் : ஏழு ஸ்வரங்களின் நாயகி ; 7 கோடி தமிழரின் பாடகி

சென்னை : ‛மீரா ஆப் மாடர்ன் இந்தியா' என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இந்த சாதனை பெண்மணியின் சினிமா பயணத்தை பார்க்கலாம். இசைப்பயணம்கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட பின்னணி பாடகி வாணி ஜெயராம் தமிழகத்தில் வேலூரை பிறப்பிடமாக கொண்டவர். 1945ல் நவம்பர் 30ம் தேதி பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள், மூன்று சகோதரர்கள். … Read more

Maaveeran: திரைத்துறையில் சிவகார்த்திகேயன் செய்த சாதனை: கொண்டாடிய 'மாவீரன்' படக்குழு.!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ‘டான்’ படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான ‘டான்’ படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்தார். இந்தப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவான ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார். அனுதீப் இயக்கிய … Read more

”நித்தம் நித்தம் நெல்லு சோறு.. மல்லிகை என் மன்னன்” – வசீகர குரலால் தாலாட்டிய வாணி ஜெயராம்!

பல்வேறு மொழிகளில் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார். அவருக்கு வயது 78. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்துள்ளார். காலையில் வீட்டுப் பணிப்பெண் கதவை தட்டியும் திறக்கவில்லை என்றும், அவரதுதொலைபேசி எண்ணுக்கும் பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் அழைப்பை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வாணி ஜெயராமின் உறவினருக்கு தகவல்  அளித்ததையடுத்து, அவர் வீட்டை திறந்து பார்த்தபோது, படுக்கையறையில் கீழே விழுந்த நிலையில் வாணி ஜெயராம் உயிரிழந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராமின் தலையில் காயம் இருந்ததாகவும், வீட்டுப் பணிப்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குபதிவு செய்து காவல்துறையினர் … Read more

சாக்ஷி அகர்வாலுக்கு முத்தமழை : கூல் சுரேஷ் அட்ராசிட்டி

சினிமா நடிகர் கூல் சுரேஷுக்கு புதுப்படம் ரிலீஸ் ஆகிவிட்டால் போதும், இறங்கி செய்வார் புரோமோஷனை. இதற்காகவே சில யூ-டியூப் சேனல்கள் அவர் முன் மைக்கை போட்டு கண்டெண்டுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் நடிப்பில் 'நான் கடவுள் இல்லை' திரைப்படமானது நேற்றைய தினம் ரிலீஸாகியுள்ளது. இதன் ப்ரீமியர் ஷோவை நடிகை சாக்ஷி அகர்வாலுடன் இணைந்து பார்த்த கூல் சுரேஷ் பத்திரிகையாளரிடம் படம் குறித்து வழக்கம் போல் புகழ்ந்து தள்ளினார். அப்போது நடிகை சாக்ஷி அகர்வால் அருகில் நின்றதால் … Read more

பிரபல தமிழ் திரைப்பட பாடகி மரணம்!!

பிரபல பின்னணி திரைப்படப்பாடகி வாணி ஜெயராம் காலமானார். அவருக்கு வயது 78. வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கலைவாணி. இவர், 1971இல் இந்தியில் வெளியான ‘குட்டி’ என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 19 மொழிகளில் பாடியுள்ளார். இவர் தனியாக ஆல்பம், பக்தி பாடல்களும் பாடி வந்துள்ளார். தமிழில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், கவிஞர் வாலி … Read more

Vijay: மருமகள் அனுமதி இல்லாமல் அது நடக்காது: அப்பா எஸ்.ஏ.சி. ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர். பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். விஜய் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசிக்கொள்வதில்லை என கூறப்படுகிறது. எஸ்.ஏ. சி தற்போது ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். … Read more

20 நாட்கள் இடைவெளியில் வெளியாகும் மம்முட்டியின் கிறிஸ்டோபர்

வித்தியாசமான படங்களுக்கு பெயர் போன பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. அப்போதே தமிழிலும் வெளியாக வேண்டிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களால் தாமதமானது. மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் என்று சொல்லப்படாவிட்டாலும் மம்முட்டியின் நடிப்பிற்கும் வித்தியாசமான கோணத்தில் கதையை யோசித்த இயக்குனருக்கும் என ரசிகர்களிடம் இந்த படம் பாராட்டு பெற்று … Read more