காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு

திருமணத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகிவிட்டார் ஹன்சிகா. தமிழில் பார்ட்னர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், ரவுடி பேபி, கார்டியன், அரண்மணை 4ம் பாகம் படத்தில் நடிக்கிறார். இதுதவிர இகோர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி படத்தில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு காந்தாரி படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த ஹன்சிகா ஒரே கட்டமாக படத்தை நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு … Read more

ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா!

தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் சரித்திர காலகட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை முடித்ததும் மார்ச் மாதத்திற்கு பிறகு வெற்றிமாறன் இருக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்ற பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு சில … Read more

திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா!

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் இயக்குனர் ஆனவர் அவரது இளைய மகள் சவுந்தர்யா. அதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருந்தார். மேலும் இரண்டாவதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்து வரும் சவுந்தர்யா, நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்ணா ஆகியோருடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர்களுக்கு அந்த கோவிலில் உள்ள சண்முகா விலாசத்தில் பூரண … Read more

விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்!

மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் முதல்கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. என்றாலும் அது குறித்த தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்கள். அந்த வகையில் விஜய் 67வது படத்தில் … Read more

சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம்

பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் பாண்டிராஜ். அதன் பிறகு வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கதகளி உள்பட பல படங்களை இயக்கினார். கடைகுட்டி சிங்கம்தான் அவர் கடைசியாக கொடுத்த வெற்றிப் படம். அதன் பிறகு அவர் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது கையில் படம் எதுவும் இல்லாத பாண்டிராஜ் தனது சொந்த ஊரான திருமயத்தில் முழுநேர விவசாயி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் … Read more

சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா!

சமந்தா கதையின் நாயகியாக நடித்து வெளியான யசோதா படம் வெற்றி பெற்றதை அடுத்து வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி மீண்டும் அவர் கதாநாயகியாக நடித்துள்ள இன்னொரு படமான சாகுந்தலம் திரைக்கு வருகிறது. புராண கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் சமந்தாவுடன் தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த … Read more

தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம்

விஞ்ஞானத்தை ஒட்டிய கற்பனை கதைகளை சயின்ஸ் பிக்சன் படம் என்பார்கள். அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் என்றால் விஞ்ஞானத்துக்கும் அப்பாற்பட்ட கற்பனை கதை, உதாரணமாக வேற்று கிரகத்தில் இருந்து மனிதர்கள் வருவது, மனிதர்கள் வேற்று கிரகத்தில் செல்வது மாதிரியான கதை. அதற்கு உதாரணம் அவதார். இந்த வகையான படங்கள் தமிழில் வரவில்லை. முதன் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் இந்த வகை படம் என்கிறார்கள். இதே போன்று மற்றொரு படம் தயாராக இருக்கிறது. அதன் டைட்டில் ‛சண்டே'. இதனை … Read more

“அதே மும்பை.. அதே டான்.. அதே கதை.. ஹீரோ மட்டும் வேற.’ – ‘மைக்கேல்’ திரைப்பார்வை

பாம்பேக்கு கிளம்பிய சிறாருக்கு இந்திய சினிமாவில் இதற்கு முன்னர் என்னவெல்லாம் நடந்ததோ அதெல்லாம் மைக்கேலுக்கும் நடப்பதே ‘மைக்கேல்’ படத்தின் ஒன்லைன். ஒருவரைக் கட்டிவைத்து ஊரே அடிக்கிறது. அடித்து முடித்ததும், இப்ப சொல்லு அவன் எங்க இருக்கான்னு என கேள்வி கேட்ட மறுகணம், ‘ஆ… தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே’ பேக்கிரவுண்டில் ஒருவர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். சிறுவன் ஒருவன் பாம்பேவுக்குள் காலடி எடுத்து வைக்கிறான். அங்கே ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்க சோட்டா பையன் கட்டையால் … Read more

நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி

காமெடியனாகவும், காமெடி ஹீரோவாகவும் நடித்து வந்த ஆர்ஜே.பாலாஜி முதன் முறையாக சீரியசான கதை நாயகனாக நடித்துள்ள ரன் பேபி ரன் படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை மலையாள இயக்குனர் இயக்கி உள்ளார். இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி அளித்துள்ள பேட்டி வருமாறு: நான் எல்.கே.ஜி படம் ஆரம்பிக்கும்போது முதலில் அரசியல், அடுத்து ஆன்மீகம், அடுத்து பொருளாதாரம், கல்வி இப்படி போகலாம் என்று தான் தோன்றியது. எனக்கும் அப்படித்தான் பிடிக்கும். யூகிக்கும் வகையிலான படங்கள் இனிமேல் பண்ணக் கூடாது. … Read more

Leo: இதுக்காகவே லோகேஷை பாராட்டலாம்: உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்.!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி இணைந்துள்ளனர். தளபதி 67 என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப்படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என நேற்றைய தினம் படக்குழுவினர் அறிவித்தனர். இதனையடுத்து ‘தளபதி 67’ தலைப்பு இதுவா இருக்கும். அதுவா இருக்கும் என ஏகப்பட்ட யூகங்கள் இணையத்தை கலக்கி வந்தது. கோலிவுட் சினிமா அதிகம் எதிர்பார்க்கும் படமாக ‘தளபதி 67’ உருவாகி வருகிறது. இந்தப்படம் லோகேஷ் கனகராஜின் LCU எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் … Read more