ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கூட்டம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் சீனா பயணம்

பீஜிங், சீனாவின் தியான்ஜின் நகரில் வருகிற 15-ந்தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அந்த அமைப்பிலுள்ள சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி … Read more

"கடைசி பெஞ்ச் இல்லை..”- இனி பள்ளிகளில் 'ப' வடிவில் அமர வேண்டும்- கல்வித்துறை உத்தரவு… என்ன காரணம்?

பள்ளிகளில் இனி “கடைசி பெஞ்ச்” என்ற கருத்தே இல்லாததாகிவிடும். பள்ளிக் கல்வித்துறை வழங்கிய புதிய உத்தரவின் படி, இனி வகுப்பறைகளில் மாணவர்கள் ‘ப’ வடிவில் அமர்ந்து கல்வி பயில வேண்டிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய அமர்வு முறையின் முக்கிய நோக்கமே ‘Last bench student’ என்ற எண்ணத்தை விதைக்காமல் இருப்பதாகும். எல்லா மாணவர்களும் ஆசிரியரை நேரடியாக பார்க்கக்கூடிய வகையில் அமர்ந்தால், கல்வியில் தெளிவும் கவனமும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு … Read more

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நடிகை எல்லி அவ்ரம் பிரபல யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி உடன் நிச்சயதார்த்தம்

பிரபல இந்திய யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஷிஷ் சஞ்சலானி தனது சமூக ஊடகங்களில் எல்லியை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “இறுதியாக” என்று எழுதியுள்ளார். இதன் மூலம், அவர் நடிகையுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். ஆஷிஷ் சஞ்சலானிக்கு யூடியூப்பில் 3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 70 லட்சம் பின்தொடர்பவர்களும் உள்ளனர். அவர் … Read more

ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் – மத்திய அரசு

புதுடெல்லி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஏர் இந்தியா விமான விபத்து விமான விபத்து புலனாய்வு அமைப்பான ஏஏஐபி விசாரணை நடத்தி வருகிறது. தமது விசாரணையின் முக்கிய கட்டமாக விபத்து எப்படி நிகழ்ந்திருக்கிறது என்பது தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கையை அந்த அமைப்பு தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விமான எரிபொருள் விநியோகிக்கும் பொத்தான்கள், இன்ஜின்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு, அவை பின்னர் செயலிழந்து போயிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு … Read more

TVK : 'அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்கள் கூடாது!' – தொண்டர்களுக்கு விஜய்யின் 12 கட்டளைகள்!

சிவகங்கை காவல் மரணத்தைக் கண்டித்து தவெக சார்பில் சிவானந்தம் சாலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள். இதில் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு கட்சி சார்பில் 12 அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. TVK Vijay அவை, ‘1.ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10.00 மணிக்கு தொடங்க இருப்பதால், அதற்குத் தகுந்தார்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நாம் ஒன்றுகூட வேண்டும். எனவே, அனைவரும் தங்களது வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா … Read more

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

“கிழக்கின் ட்ராய்” என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செஞ்சி கோட்டை தமிழ்நாட்டில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டை. இது விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மூன்று மலைகளை உள்ளடக்கிய இந்த கோட்டை, முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ராஜகிரி மற்றும் சஹ்லிதுர்க் … Read more

ஆட்டோவில் கடத்தல்.. துணிச்சலுடன் செயல்பட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்த பள்ளி மாணவி

மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில், 16 வயது பள்ளி மாணவி ஒருவர், பள்ளிக்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினார். அப்போது அந்த ஆட்டோவில் ஏற்கெனவே ஒருவர் இருந்துள்ளார். பள்ளி வந்ததும், ஆட்டோவை நிறுத்துமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் பள்ளி மாணவி கூறினார். ஆனால் ஆட்டோ ஓட்டுநரோ ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இறங்க முற்பட்டும், அருகில் இருந்த நபர் மாணவியை இறங்க விடவில்லை. தான் கடத்தப்படுவதை அறிந்த மாணவி, நிலைமையை உணர்ந்து துணிச்சலுடன் செயல்பட்டார். … Read more

தெலுங்கானா: இறந்தவரின் உடலை உயிருள்ளவரின் பெயரில் மாற்றி அனுப்பிய மருத்துவமனை… தகனத்திற்கு முன் உண்மை வெளியானது…

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவரை இறந்ததாகக் கருதி இறந்துபோன ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கொடுத்தனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 9 ஆம் தேதி, வாரங்கல்-கம்மம் நெடுஞ்சாலையில் விபத்தில் அடிபட்டு குமார சுவாமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதே நாளில், ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் கிடந்த ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதில் ரயிலில் அடிப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமையன்று இறந்த நிலையில் கட்டுமானத் … Read more

இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது: பி.ஆர். கவாய் பேச்சு

ஐதராபாத், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று கலந்து கொண்டார். தெலுங்கானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியான (பொறுப்பு) நீதிபதி சுஜோய் பால் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேசும்போது, உதவி தொகையை கொண்டு வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும்படி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய … Read more