"16-ம் நாள் காரியம் முடிந்ததும் உண்மைகளைச் சொல்வோம்"- டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய ஆதவ் அர்ஜுனா

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின்போதே சென்னை கிளம்பிய விஜய் செப்டம்பர் 30-ம் தேதி எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு வேதனையில் இருப்பதாகத் தெரிவித்தார். அடுத்த நாள், அக்கட்சியின் தேர்தல் பிரசார நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா … Read more

அக்டோபர் 11-ம் தேதி(நாளை) கிராமசபை கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும்  அக்டோபர் 11-ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம்  முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார் என அரசின் மக்கள் செய்தி தொடர்களில் ஒருவரான  ககன்தீப் சிக் பேடி  தெரிவித்துள்ளார். அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளையொட்டி,  நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் நாளை அக்.11-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 11ந்தேதி (நாளை) கிராமசபை கூட்டங்கள்  உள்ளன. இதுதொடர்பாக இன்று … Read more

Nobel Peace Prize: "நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன்" – மரியா கொரினா மச்சாடோ

வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ட்ரம்ப்பின் கனவு பழிக்காமல் போனது. எனினும் நோபல் வெற்றியாளரான மரியா, ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், பரிசை அவருக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார். வெனிசுலா மக்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக ஜனநாயக நாடுகளை நம்பியிருப்பதாகக் கூறியுள்ளார். Trump வெனிசுலாவில் துன்பப்படும் மக்களுடன் இருப்பதில் … Read more

கிட்னி திருட்டு வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

டெல்லி: நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது. சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்  என்று கூறி உள்ளது. இது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாக சிறுநீரகம் தானம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அங்கு கிட்னி, கல்லீரல் … Read more

சரியாக நள்ளிரவு 11.59க்கு கிடைத்த புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்! – 70களில் நடந்த ஒரு ஆச்சர்யம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் ஒரு முறையாவது புரட்டாசி சனிக்கிழமை ஏழுமலையானை தரிசித்து விட வேண்டும் என்ற ஆசையில் நானும் என் நண்பனும்  கிளம்பிச் சென்று பட்ட அவஸ்தை வாழ்நாளில் மறக்க முடியாதது.  கல்லூரி மாணவர்களாக இருந்த போது, நானும் என் நண்பனும் வருடம் ஒரு முறையாவது திருப்பதிக்கு செல்வதை … Read more

NO சிக்கந்தர் மலை: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் – ஆடு, கோழி பலியிட தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், அது சிங்கர்மலை கிடையாது என உறுதி செய்ததுடன், மலைமீது ஆடு, கோழி பலியிட தடை விதித்தும்  உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி மதுரை திருப்பரங்குன்றத்தில்  உள்ளது. மேலும்,  மலையில்  மேல் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. இதே போல இந்த மலையின் … Read more

அவன் ஏழை இல்லை! – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இன்று காலை கிச்சனில் எனது சிற்றுண்டியை முடித்துவிட்டு, இரண்டாவது தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனைச் சேர்ந்த சக ஊழியன் ஜோஷ்வா வந்தான். முகமன்களைத் தெரிவித்தபடி தான் கொண்டு வந்த தடித்த, வழவழப்பான, வெண்மார்பில் நிற காகிதப் பையிலிருந்த … Read more

ஃபெராரி : நான்கு இருக்கைகள் கொண்ட மின்சார கார்களை அறிமுகம் செய்கிறது

ஃபெராரி நிறுவனம், பேட்டரி மூலம் இயங்கும் நான்கு இருக்கைகள் கொண்ட கூபே கார்களை 2026 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. போர்ஷே, லம்போர்கினி, லோட்டஸ் மற்றும் ரிமாக் ஆகியவை மின்சார கார்களை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்பத்திய போதிலும் ஃபெராரி நிறுவனம் தற்போது ஹைப்ரிட் வேரியண்ட்டுகளையும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் உள்ள தொழிற்சாலையில் முதலீட்டாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ள அதன் முதல் மின்சார ஸ்போர்ட்ஸ் காரின் … Read more

Bigg Boss Tamil 9: எவிக்ஷனுக்கு முன்பே அதிரடி; முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

விஜய் டிவியில் கடந்த வாரம் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வாட்டர்மெலன் திவாகர், இயக்குநர் பிரவீன் காந்தி, வி.ஜே. பாரு உள்ளிட்ட இருபது பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இந்த வாரம் அதாவது நாளை முதல் வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. சில சீசன்களில் முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி என எவிக்ஷன் இல்லை என அறிவித்ததெல்லாம் நடந்திருக்கிறது. அந்த வகையில் முதல் வாரம் எவிக்ஷன் இருக்குமா என்பது நாளை … Read more

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது…

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு அறிவித்தது. மச்சாடோ, வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சி அரசியலை எதிர்த்து ஜனநாயக இயக்கத்தை அர்ப்பணிப்புடன் செயல்படுத்திவரும் அமைப்பான சுமேட்டின் நிறுவன தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காகவும் நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை … Read more