தமிழ்நாட்டில் 22 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 அரசியல் கட்சிகள் நீக்கம்..!

டெல்லி: நாடு முழுவதும் முழுமையான  அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 22 அரசியல் கட்சிகளும் அடங்கி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகள் தேர்தல் களத்தில் பங்கு பெறாத, மற்றும் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் போது வழங்கிய அலுவகத்தில் இயங்காத அரசியல் கட்சியை அடையாளம் கண்டு அதன் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  தேர்தலில் … Read more

காஷ்மீரில் 10-வது நாளாக தேடுதல் வேட்டை; பயங்கரவாதி பலி

ஜம்மு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகால் குல்சன் வன பகுதிகளில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த புலனாய்வு தகவலை தொடர்ந்து அவர்களை தேடும் தீவிர பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஆபரேஷன் அகால் என்ற பெயரிலான இந்த ராணுவ நடவடிக்கை பணியானது, கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. அப்போது, ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். சமீப ஆண்டுகளில் மிக நீண்டகால ராணுவ தேடுதல் நடவடிக்கையாக … Read more

கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்' – என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை கவின்குமாரின் ஆணவக் கொலை சம்பவம் நிகழ்ந்தும், தமிழக காவல்துறை ‘பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்’ என அலட்சியம் காட்டுவதாகக் குமுறுகின்றனர் கிராம மக்கள். சமீபத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்குமார் கல்பட்டி கிராமத்தில் மொத்தமுள்ள 300 குடும்பங்களில், 20-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகக் … Read more

போலி வாக்காளர்களைச் சேர்த்ததற்காக மேற்கு வங்க அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

கொல்கத்தா: போலி வாக்காளர்களைச் சேர்த்ததற்காக மேற்கு வங்க அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட  நான்கு மேற்கு வங்க சிவில் சர்வீஸ் (WBCS) அதிகாரிகள் மீது இந்திய தேர்தல் ஆணையம் (EC) கடுமையான நடவடிக்கை  எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் 4 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் உள்பட கள்ள … Read more

டிரம்பின் வரிவிதிப்பு அழுத்தம்: ‘மோடி அரசுக்கு மக்களின் ஆதரவு அவசியம்’- சரத் பவார்

மும்பை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) தலைவர் சரத்பவார், “இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பது ஒரு அழுத்தம் தரும் தந்திரம். நாட்டின் நலன்களை பாதுகாக்க இந்திய மக்களாகிய நாம் அரசை ஆதரிக்க வேண்டும். பிரதமர் மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துவிட்டதா என்று யூகிக்க விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் … Read more

ரோலெக்ஸ் நிறுவனர் ஹான்ஸ், ஹிட்லரின் உளவாளியா? – வெளியானஅறிக்கை; இங்கிலாந்தில் அதிர்ச்சி!

பிரபல ரோலக்ஸ் கடிகார பிராண்டின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப், ஹிட்லரின் ஆட்சிக்கு ஆதரவு கொண்டிருந்ததாகவும் நாஜி உளவாளியாக இருந்ததாகவும் தி டெலிகிராஃப் அறிக்கை கூறுகிறது. பிரபலங்கள் தொடங்கி பணக்காரர்கள் என அனைவரும் விரும்பும் ஒரு ஆடம்பர கடிகார பிராண்டாக ரோலக்ஸ் உள்ளது. இந்த கடிகாரத்தின் தனித்தன்மை காரணமாக பலரும் இதனை வாங்க விரும்புகின்றனர். இந்த ரோலக்ஸ் பிராண்டை ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் என்பவர் உருவாக்கினார். ரோலக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக நீர்ப்புகா தன்மைக்கொண்ட வாட்ச்கள் இடம்பெறுகின்றன. ரோலக்ஸ் … Read more

Blue Flag வசதிகள்: ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சென்னையின் அடையாளமான மெரினா பீச்….! எப்படி இருக்கு….?

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அடையாளமான மெரினா பீச் புளு ஃபிளக் எனப்படும் நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில், ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக மெரினா பீச் முழுவதும்  வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. கடல் காற்றையும் சென்னையின் அடையாளச் சின்னமான மெரினாவின் புதிய தோற்றம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள இதய வடிவிலான மற்றும் முத்து வடிவிலான  செஃபி பாயிண்டில் காதலர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மெரினா கடற்கரைப் பகுதியில் நீலக்கொடி சான்றிற்காக சர்வதேச தரத்தில் … Read more

Rashmika: “எனக்கு எதிரா ட்ரோல் செய்ய பணம் கொடுக்குறாங்க'' – வருத்தமாக பேசிய ராஷ்மிகா

2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது. ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் இவரது நடிப்பில் ‘குபேரா’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ‘MYSAA’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘நேஷ்னல் க்ரஷ்’ என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்களிடையே ஈர்ப்பு இருக்கிறதோ, … Read more

நீர் நிலைகளில் கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரியவில்லையா? இந்து முன்னணி…

சென்னை: நீர் நிலைகளில் கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் நீர்​நிலைகளில் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரியவில்லையா?  விநாயகர் சிலை கரைப்பது மட்டும்தான் தெரிகிறதா என இந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து  இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கண்​டனம் தெரி​வித்​து வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:  தீபாவளி, பொங்​கல், விநாயகர் சதுர்த்தி வந்​தால்​தான் தமிழகத்​தில் மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் ஒன்று இருப்​பது வெளி​யில் தெரி​கிறது. பொங்​கலின்​போது புகை​யில்​லாத பண்​டிகை என விளம்​பரம் செய்​வது … Read more

`சிறை பிடித்த இலங்கை' -கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் இடையே ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட மீனவர்கள்

ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றனர். இதனை கண்ட ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். மீனவர்கள் சாலை மறியல் இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த இருதய டிக்சன் என்பவருக்கு சொந்தமான … Read more