நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. உலகெங்கும்  நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது காலை 8 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 முதல் 8 மணி மற்றும் பகல் 11 முதல் … Read more

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 ஆம் தேதி இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. கடந்த 4-ந் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும், 67 பேர் முழு மதிப்பெண் பெற்றதும் பலத்த சந்தேகத்தை எழுப்பியது. … Read more

அதிமுகவை தொடர்ந்து தேமுத்கவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு

சென்னை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிபதாக தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம் எல் ஏ புகழேந்தி மரணத்தையொட்டி விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  நேற்று அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார். இன்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் … Read more

வரும் 21 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளில் போக்கிரி திரைப்படம் ரி ரிலீஸ்

சென்னை வரும் 21 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. போக்கிரி திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கலன்று விஜய் நடிப்பில் வெளியானது. இதில் நடிகர் வடிவேலு, அசின், நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.  வரும் 21-ம் தேதி … Read more

பிரதமர் பதவியை பறிக்கும் காசா போர்? மக்கள் போராட்டத்தால் இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு நெருக்கடி

டெல் அவிவ்: பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. மட்டுமல்லாது நெதன்யாகுவை பதவி விலகவும் அந்நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட Source Link

3 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 16.06.2024 முதல் 18.06.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19.06.2024 முதல் 22.06.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு … Read more

மயிலாடுதுறை நிவேதா.. டூவீலரில் வரும்போதே ரவுண்டு கட்டிய \"பைக் ஷோரூம்\".. அதுக்குன்னு இப்படியா? கொடுமை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நிவேதா என்பவர் யார்? அவருக்கு என்ன நடந்தது? இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வர என்ன காரணம்?தவணை பணம் கேட்டு மிரட்டும் போக்கு, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது. கர்நாடகாவில் 10 நாட்களுக்கு முன்புகூட, சித்தவ்வா பையனவரா என்ற பெண், ராஜு என்பவருக்கு தவணைக்கு பணம் தந்துள்ளார். தவணை பணம்: ஆனால், விவசாயியான Source Link

Sunil Gavaskar: “தயவு செஞ்சு பணம் இல்லைன்னு சொல்லாதீங்க!"- ஐ.சி.சி யை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக நிறைய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மழையின் காரணமாக இந்தியா மற்றும் கனடா விளையாடவிருந்த போட்டி அவுட் ஃபீல்டு பகுதியில் மழைநீர் தேங்கியிருந்ததால் கைவிடப்பட்டது. அதேபோல பாகிஸ்தானின் அடுத்தச்சுற்று வாய்ப்பை நிர்ணயிக்க இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழை நீர் தேங்கியிருந்த காரணத்தால் கைவிடப்பட்டது. இந்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில் நடைபெற இருந்தது. அங்கு கடுமையான மழை … Read more

ஜாதித் தலைவர்களாக சித்தரிக்கப்படும் சுத்ந்திரப் போராட்ட தியாகிகள் : தமிழக ஆளுநர்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சுதந்திர போராட்ட தியாகிகளை ஜாதித்தலைவர்களாக சித்தரிப்பதாக கூறி உள்ளார். இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் என்று சொல்லப்படும் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழைல் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த அறியப்படாதவர்கள் பற்றிய 89 புத்தகங்களை ஆய்வு செய்து எழுதிய 88 பேர் … Read more