ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பிவைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி…

உத்திரபிரதேச மாநிலம் சுல்தானப்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பியுள்ளார். ஜூலை 26ம் தேதி சுல்தானப்பூருக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ராம்சேட் என்பவரைச் சந்தித்தார். தொழிலில் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி அவரது அன்றாட வருமானத்தை அதிகரிக்க என்ன வழி என்று கேட்டறிந்தார். மறுநாள் தனது உதவியாளர்கள் மூலம் … Read more

வயநாடு சோகம்! மனித உயிர்களை மண்ணோடு மூடிய நிலச்சரிவு! விஐடி பல்கலைக்கழகம் ரூ.1 கோடி நிதி உதவி

திருவனந்தபுரம்: கேரள வயநாடு நிலச்சரிவில் 300க்கும் அதிகமான உயிர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு Source Link

Paris Olympics 2024 – Lakshya Sen: வெண்கலப் பதக்கத்தை இழந்த லக்சயா சென்! – எப்படி வீழ்ந்தார்?

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் லக்சயா சென் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வியை அடைந்திருக்கிறார். Lakshya Sen | லக்சயா சென் பேட்மிண்டனில் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி, பி.வி.சிந்து ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களெல்லாம் சீக்கிரமே வெளியேற சர்ப்ரைஸாக லக்சயா சென் கலக்கியிருந்தார். இந்த ஒலிம்பிக்ஸில் தொடக்கத்திலிருந்தே லக்சயா சிறப்பாக ஆடியிருந்தார். … Read more

பங்களாதேஷ் கலவரம்… ஆட்சி மாற்றம்… டாக்கா-வுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் சென்றுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியர்களை பத்திரமாக இருக்க அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு தலைநகர் டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் இந்தியாவில் இருந்து டாக்காவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நீச்சல் குளம், சோஃபா எதையும் விடல! ஷேக் ஹசீனா அரண்மனையில் பொருட்களை அள்ளிய போராட்டக்காரர்கள்

டாக்கா: வங்க தேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் அவரது அரண்மனைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அவரது படுக்கை அறை, நீச்சல் குளம், என அனைத்தையும் பயன்படுத்தினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் போட்டி போட்டு அள்ளி சென்றனர். அங்கே இருந்த உணவு பொருட்களையும் ஒரு கை பார்த்தனர். இந்தியாவின் அண்டை நாடான வங்க Source Link

பெசன்ட் நகர்: கடற்கரையில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றம் – மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் மெரினா கடற்கரையைத் தொடர்ந்து அதிக அளவு மக்கள் கூடும் இடமாக இருப்பது பெசன்ட் நகர் கடற்கரை. இங்கு 2013-ல் சுமார் 245 கடைகள் இருந்த நிலையில், 2021-க்கு பிறகு இதன் எண்ணிக்கை 1,200 கடைகளாக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் நிம்மதியாக வந்து அமர்ந்து பேசவோ அல்லது இயற்கையை ரசிக்கவோ இடமில்லாமல் கடைகள் போடப்பட்டிருப்பதாகவும், கடல் நீருக்கு மிக அருகில் கடைகள் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதாலும் மாநகராட்சி நிர்வாகம் … Read more

பங்களாதேஷில் ராணுவ ஆட்சி… இந்தியா கூர்ந்து கவனிக்கிறது…

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து அங்கு இதுவரை 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரிபுரா வந்துள்ள ஷேக் ஹசீனா பாதுகாப்புடன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இடைக்கால அரசை அமைக்க பங்களாதேஷ் ஜனாதிபதியிடம் ராணுவம் உரிமை கோர உள்ளது. தேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்ள இருப்பதாகவும் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் நிறைவேற்றும் என்றும் … Read more

வங்கதேசத்தை விட்டு தப்பிய ஹசீனா! கண்ட்ரோலை கையில் எடுத்த ராணுவ தளபதி! போராட்டக்காரர்களுக்கு மெசேஜ்

டாக்கா: வங்கதேசத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றி அந்நாட்டின் ராணுவ தளபதி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். வங்கதேசத்தின் அரசு அமைப்பு முறையானது இந்திய அரசு அமைப்பு முறையின் சாயலை கொண்டிருக்கிறது. அரசமைப்பு மட்டுமல்லாது பல்வேறு அம்சங்களை Source Link

Graham Thorpe: பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் மரணம் – கிரிக்கெட் உலகம் இரங்கல்

இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கிரஹாம் தோர்ப் காலமாகி இருக்கிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தவர் கிரஹாம் தோர்ப். இங்கிலாந்திற்காக 100 டெஸ்ட் போட்டிகளிலும், 82 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,744 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 2,380 ரன்களையும் குவித்திருக்கிறார். 1996 மற்றும் 1999 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் கிரஹாம் தோர்ப் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். கிரஹாம் தோர்ப் கடையாக 2005 இல் இங்கிலாந்திற்காக டெஸ்ட் … Read more

பங்களாதேஷில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா… இந்தியாவில் தஞ்சம் ?

பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக மொத்தம் 20 ஆண்டுகள் பதவி வகித்த ஷேக் ஹசீனா 2009 முதல் தற்போது வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் பிரதமராக இருந்து வந்தார். இந்த நிலையில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் தலைமையில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் கலவரத்தில் முடிந்ததை அடுத்து ஊரடங்கு … Read more