மீண்டும் இடுக்கியில் ஜீப் சவாரிக்கு அனுமதீ

இடுக்கி கட்டுப்பாடுஅக்ளுடன் மீண்டும் இடுக்கியில் ஜீப் ச்வாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, மறையூர், வாகமன் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களை கண்டுகளிப்பதுடன் மலைப்பாங்கான பகுதிகளுக்கு ஜீப்களில் சாகச பயணம் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகச ஜீப் சவாரி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் ஜீப்களில் சாகச பயணம் செய்யும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் கிடைத்தது. இதைத்தொடர்ந்து … Read more

டிஜிட்டல் கைது; ரூ.11 லட்சத்தை இழந்த மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவடம் கிழகிரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் பெங்களூரு மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இதனிடையே, குமாருக்கு கடந்த சில நாட்களுக்குமுன் செல்போனில் மர்ம நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தன்னை சிபிஐ அதிகாரி விக்ரம் கோஸ்வாமி என்று அறிமுகப்படுத்திய அந்த நபர் பணமோசடி வழக்கில் உங்களை கைது செய்ய வாரண்ட் உள்ளதாக குமாரை மிரட்டியுள்ளார். மேலும், வழக்கில் உங்களை டிஜிட்டல் கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். வழக்கில் இருந்து தப்பிக்க … Read more

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு அறிமுகமானது | Automobile Tamilan

ரூ.2.40 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் துவங்குகின்ற ஸ்போர்ட்டிவ் 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 மோட்டார்சைகிளில் கூடுதலான வசதிகளுடன் புதிய நிறம் என சில முக்கிய மாற்றங்களை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக, கீலெஸ் இக்னிஷன், லான்ச் கண்ட்ரோல் வசதியுடன் க்ரூஸ் கண்ட்ரோல், பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர், வெளிப்படையான கிளட்ச் கவர், நக்கிள் கார்டுகள் மற்றும் தொடர்ச்சியான டர்ன் இன்டிகேட்டர், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சிவப்பு நிறம் போன்றவை 2025 அப்பாச்சி ஆர்டிஆர் 310ல் கவனிக்க வேண்டியவை … Read more

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அதிசயம்!

விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது வழக்கமான நீர்வீழ்ச்சி போன்றில்லாமல் கடலின் அடியில் பாய்கிறது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு இடையேயான கடலுக்கு அடியில் அமைந்த இந்த நீர்வீழ்ச்சி நேரடியாக பார்க்கமுடியாத வண்ணம் உள்ளது. கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சி இந்த நீர்வீழ்ச்சி, டென்மார்க் நீரிணைப் பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகிறது. வழக்கமான நீர்வீழ்ச்சிகள் பாறைகளில் இருந்து நீர் விழுவதைப் போலல்லாமல், இது வெவ்வேறு அடர்த்தி, வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை கொண்ட கடல் நீரோட்டங்கள் ஒன்றிணைவதால் … Read more

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடி பூர விழா கொண்டாடப்பட உள்ளதை அடுத்து அன்றைய தினம் அனைத்து தமிழக அரசின் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அவசர பணிகள் மற்றும் கருவூலங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நிச்சயம் ஜெயிலுக்கு போவீர்கள் – ராகுல் காந்தி; நீங்களே பெயிலில் வெளியே இருக்கிறீர்கள் – பிஸ்வா சர்மா

கவுகாத்தி, அசாமில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி தலைவர் கார்கே உள்ளிட்ட கட்சியினர் இன்று காலை அசாமுக்கு வருகை தந்தனர். இதன்பின்னர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகார கமிட்டியின் கூட்டம் உள்ளரங்கில் நடந்தது. இந்த நிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், எழுதி வைத்து கொள்ளுங்கள். நிச்சயம் பிஸ்வா சர்மா ஜெயிலுக்கு போவார் என … Read more

'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!’ என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இன்று சிதம்பரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசியவர் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். Edappadi Palanisamy அவர் பேசியதாவது, ‘திமுக-வின் ஆட்சியை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அற்புதமான ஆட்சி என விதந்தோதியிருக்கிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களே உஷாராக இருங்கள். உங்களுக்கு சீட்டை எல்லாம் குறைத்து விடுவார்கள். நீங்கள் வேறு எங்கு செல்ல முடியும்? 4 ஆண்டுகளாக இந்த நாட்டிலே … Read more

பின்ராயி விஜயன் அமெரிக்க சிகிச்சை முடிந்த நாடு திரும்பினார்

திருவனந்தபுர,, அமெரிக்க நாட்டுக்கு சிகிச்சைக்காக சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் நாடு திரும்பியுள்ளார். கடந்த 5 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் உயர் சிகிச்சைக்காக அமரிக்கா சென்றிருந்தார்.  அவருக்கு 10 நாட்கள் அமெரிக்காவில் உள்ள  மினசோட்டாவில்  மாயோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின் தனது மனைவி கமலா விஜயனுடன்  கேரளா திரும்பினார். அவரை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்த்தில்கேரளா  தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர் ஆகியோர் … Read more

கழிவறை பற்றாக்குறை விவகாரம்; ஐகோர்ட்டுகளை கடிந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, நாட்டில் பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் கோர்ட்டுகளுக்கு நாள்தோறும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் என பலர் வந்து செல்வார்கள். ஆனால், அவர்களுக்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததுபற்றி வழக்கறிஞரான ரஜீப் கலிதா, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி கடந்த ஜனவரி 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மேற்கொண்டது. அப்போது, முறையான தூய்மை என்பது அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ன் கீழ் … Read more

ப வடிவ பள்ளி இருக்கைகள்: "மருத்துவர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கணும்" – ஓபிஎஸ் வலியுறுத்தல்

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைகள் குறித்து மருத்துவர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி, முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓபிஎஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ, மாணவியரை நல்லவராகவும், வல்லவராகவும், புகழ் மிக்கவராகவும் வாழ வைக்க கல்வி மிகவும் அவசியம் என்பதன் அடிப்படையில் கட்டணமில்லாக் கல்வி தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு … Read more