சிபிஐ அதிகாரிபோல் நடித்து ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளியை கைது செய்த போலீசார்

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த ராகேஷிடம் சிபிஐ அதிகாரி என ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மேலும், ராகேஷிடம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் தொடர்பாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ராகேசை மிரட்டியுள்ளார். மேலும், … Read more

80-ல் நுழைந்த‌ ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரிசு!

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் இருவரும் 80 வயதை தொட்டிருப்பதையடுத்து, அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இன்று சென்னையில் மதிய விருந்தளிக்கப் பட்டது. ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் இருவருக்குமே தற்போது 79 முடிந்து 80 வது வயது தொடங்குகிறது. இதையொட்டி இவர்களது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் இதை செலிபிரேட் செய்யும்விதமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப … Read more

சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் ரூ.269 கோடியில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த மெட்ரோ நிலையம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் ரூ.269 கோடியில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த மெட்ரோ நிலையம் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுபோல  மந்தைவெளி பேருந்து பணிமனையில் ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டிற்காக ரூ.167.08 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கி உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ நிலையங்களில், வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது மேலும், மந்தைவெளி பேருந்து பணிமனையில் ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டிற்காக ரூ.167.08 கோடி … Read more

உ.பி: பைக் மீது லாரி மோதி விபத்து – பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் பஜ்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இம்ரான் (வயது 13), வாசீம் (வயது 16), சமத் (வயது 14). சிறுவர்கள் 3 பேரும் நேற்று மாலை பைக்கில் சென்றுள்ளனர். சைதுபூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப சிறுவர்கள் பைக்கில் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது சாலையில் வேகமாக வந்த லாரி பள்ளி மாணவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி … Read more

Sreenivasan: "ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்!" – மோகன்லால் உருக்கம்!

mமலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு வயது 69. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ஶ்ரீனிவாசன் நடிகர் மோகன்லாலும் நடிகர் ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “ஸ்ரீனி திரும்பிச் … Read more

சென்னையில் விரைவில் டபுள் டக்கர் மின்சார பேருந்து சேவை….

சென்னை:  சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான  டபுள் டக்கர் (மாடி பேருந்து) மின்சார பேருந்து சேவை  விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில்  அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்  காரணமாக,  சுமார் 17  ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட,  டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 20 புதிய மின்சார மாடிப் பேருந்துகள் வாங்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாதம் இறுதியில் அல்லது 2026 ஜனவரியில் சேவை  … Read more

வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற்றும் பல உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடர் வட இந்தியாவின் “பச்சைக் கவசம்” என அழைக்கப்படுவதற்குக் காரணம், அதன் இயற்கை பாதுகாப்பு பண்புகளே ஆகும். ஆரவல்லி 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்வைத்த புதிய வரையறையை … Read more

பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை – மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்! சென்னை மாநகராட்சி

சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய  பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் டிசம்பர் 19ந்தேதிஅன்று நடைபெற்றது. இந்த   கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல் மற்றும் ராட்வீலர் ஆகிய இன நாய்களை வளர்க்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த … Read more

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை – பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என இரண்டு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கணேசனுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் சென்னையில் தனியார் நிறுவனத்திலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் 22- ம் … Read more

சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்..

சென்னை: சென்னையில் வரும் 22ந்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,  வடசென்னையின் மணலி, திருவொற்றியூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து  சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடசென்னை வளர்ச்சி திட்டப்பணியின் கீழ், மணலி காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் 1 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.  இதற்காக, அந்நிலையத்தின் … Read more