நாளை நெல்லையில் மின் தடை

நெல்லை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை திருநெல்வேலியில் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளதுட் தமிழக மின் வாரியம், ”திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணைமின் நிலையங்களில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் … Read more

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சில தினங்களில் செயல்பட இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணி தொடங்கப்பட்டபோது, அதை வைத்து பணம் சம்பாதிக்க மோசடிக் கும்பல் திட்டமிட்டது. அதன்படி, `ஜிப்மர் மருத்துவமனைக்கு செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். மத்திய அரசு நிறுவனம் என்பதால் கை நிறைய சம்பாதிக்கலாம். மத்திய … Read more

ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல! உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அகதிகளாக வந்த ரோகிங்யாக்கள், வங்கதேசத்தினர் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த அகதிகளின் வாக்காளர் உரிமையை நீக்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றும் நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. பீகாரில் வசிக்கும்,  … Read more

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய் | Automobile Tamilan

2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து 10 ஆண்டுகளாக சிறப்பான வரவேற்பினை தக்கவைத்துக் கொண்டு தற்பொழுது இரண்டாம் தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா, க்ரெட்டா என்-லைன், க்ரெட்டா எலக்ட்ரிக் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. iX25 என அறியப்பட்டு பயணத்தை துவங்கிய க்ரெட்டா அமோகமான வரவேற்பினை நடுத்தர எஸ்யூவி சந்தையில் பெற்று ஒட்டுமொத்தமாக 12.68 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ள நிலையில், இந்தியா தவிர இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சுமார் 13 நாடுகளுக்கு க்ரெட்டா … Read more

ஜகதீப் தன்கர் ராஜினாமா: "நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்" – பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் – இதுதான் இந்திய அரசியல் களத்தின் தற்போதைய ‘பரபர’ டாப்பிக். ஜகதீப் தன்கர் ராஜினாவும், சந்தேகங்களும்! உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக ஜகதீப் தன்கர் கூறியிருக்கிறார். ஆனால், இவரது ராஜினாமாவிற்குப் பின்னால், ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஜகதீப் தன்கர் மோடி பதிவு இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு … Read more

‘திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’! எடப்பாடியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்…

மன்னார்குடி: திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’  என்று கூறியுள்ள விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்,  திருவாரூர்  பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசார எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் சென்ற இபிஎஸ், கொல்லுமாங்குடியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்து … Read more

இந்தியாவில் காரன்ஸ் கிளாவிஸ்.இவிக்கு முன்பதிவை துவங்கிய கியா | Automobile Tamilan

ஜூலை 22 ஆம் தேதி இன்று முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள காரன்ஸ் கிளாவிஸ்.EV காருக்கு புக்கிங் கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படும் நிலையில் விரைவில் டெலிவரியை துவங்க கியா நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. 7 இருக்கை கொண்ட எம்பிவி ரக காரன்ஸ் கிளாவிஸ் அடிப்படையில் தயரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார பேட்டரி காரில் 51.4 kwh மற்றும் 42 Kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது. 51.4 kWh பேட்டரி பேக், ARAI-சான்றளிக்கப்பட்ட 490 கிமீ ரேஞ்ச் … Read more

`விமான அவசரம்' – பயணத்தில் மனைவியை மறந்துவிட்டு சென்ற அமைச்சர் சிவராஜ் சிங்.. என்ன நடந்தது?

பயண அவசரத்தில் டிக்கெட்டை எடுக்காமல் சென்றுவிடுவதைப்பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் பயண அவசரத்தில் தனது மனைவியையே மறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் தனது மனைவி சாதனா சிங்குடன் குஜராத்திற்கு அரசு மற்றும் ஆன்மிக சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர்கள் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில், கிர் வன விலங்குகள் சரணாலயம் போன்ற இடத்திற்கு சென்றுவந்தனர். சோம்நாத் கோயிலில் சிவ்ராஜ் சிங் செளகான் தியானம் இருந்து … Read more

டிஎன்பிஎஸ்பி வினாத்தாள், விடைத்தாள் அனுப்பும் முறையில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்பி குரூப்4  விடைத்தாள் பிரிக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வுக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்,  வினாத்தாள், விடைத்தாள் அனுப்பும்  நடைமுறை மாற்றம் செய்யப்படுவதாகவும்,   டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு தொடர்பான சர்ச்சை குறித்து டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். “சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள் இல்லை. குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14 ஆம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்ட‌து. டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாள்களை தேர்வு … Read more

சீட் பெல்ட் கோளாறால் திரும்ப அழைக்கப்படும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்கள் | Automobile Tamilan

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள SAVWIPL நிறுவன ஸ்கோடா கைலாக், குஷாக், ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், டைகன் ஆகியவற்றில் 1821 கார்களை பின்புற சீட்பெல்ட் கோளாறினால் இரண்டாவது முறையாக நடப்பு ஆண்டில் திரும்ப அழைக்கப்படுகின்றது. குறிப்பாக இரு நிறுவனத்தின் மாடல்களில் உள்ள பின்புற இருக்கை பெல்ட் அசெம்பிளியின் உலோகத் தளத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தால் டிசம்பர் 2021 முதல் மே 2025 வரை தயாரிக்கப்பட்டுள்ள 961 ஃபோக்ஸ்வேகன் நிறுவன விர்டஸ் மற்றும் டைகன் மாடலிலும், ஸ்கோடாவின் கைலாக், … Read more