'மாமன் மச்சான்னு பொறுப்பு கொடுக்க கூடாது' – மா.செ.க்களுக்கு பாடமெடுத்த எடப்பாடி!

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற்ற ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உடல்நலன் காரணமாக செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஆலோசனை கூட்டம் மாற்றி வைக்கப்பட்டது. அதன்படி, செப்.10-ம் தேதி காலை 9.30 மணிக்கு மதுரை மாநாடு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார் எடப்பாடி. மதுரை மாநாடு இந்த ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிவரை நீடித்தது. … Read more

டெங்கு பரவல் எதிரொலி: சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் என மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கி உள்ள நிலையில்,  சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை தடுக்கும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலையொட்டி, அதை கட்டுப்படுத்த சென்னை  மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மாநகராட்சி … Read more

பேரழிவின் தொடக்கம்? புரட்டிப் போட்ட வெள்ளம்.. லிபியாவில் 2000 பேர் பலி! பல ஆயிரம் பேர் மாயம்

திரிபோலி: லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே Source Link

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு : தெலுங்கு தேசம் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது

விஜயவாடா, ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை, சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா கோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, அவரை கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் ராஜமுந்திரியில் (ராஜமகேந்திரவரம்) உள்ள மத்திய சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக விஜயவாடாவில் இருந்து 200 கி.மீ. தூரம் சாலைமார்க்கமாக சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் … Read more

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர் விற்பனைக்கு அறிமுகம்

ரூ. 75.90 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரீஸ்மோ M ஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வந்து நிலையில், ஆன்லைனில் தனது இணையதளத்தில் முன்பதிவு துவங்கியுள்ளது. 630i M ஸ்போர்ட் வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு சில கூடுதலான டிசைன் மாற்றங்களை பெற்றதாகவும், சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டதாகவும் வந்துள்ளது. BMW 6 Series GT M Sport Signature 6 சீரிஸ் ஜிடி எம் சிக்னேச்சர் எடிசனில் … Read more

Euro Tech – The Braille: எந்தக் குத்தூசி பார்வையைப் பறித்ததோ, அதை வைத்தே சாதித்த பிரெய்லியின் கதை!

ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் இந்த வாரம் The Braille (பிரெய்லி முறை). அன்று கண் பார்வை இல்லாதவர்கள் என்றாலே பொதுவாக ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பார்கள், இல்லை கோயில் வாசலில் அமர்ந்து கையேந்துவார்கள் என்ற பொதுவான எண்ணம் ஒரு காலத்திலிருந்தது. … Read more

சனாதனம் சர்ச்சை: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: சனாதனம்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம், அவர்கள் பதவி விலகக்கோரி சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை உள்பட  800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தின் சிறப்பான சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி பேசியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. … Read more

ம.பியில் திடீர் திருப்பம்! பாஜகவுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் மாஜி 'பங்காளி'கள் கட்சி 200 இடங்களில் போட்டி!

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக 230 தொகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.- பாஜக: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாட்டின் தீவிர Source Link

5 மாநில தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு – முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரம்

புதுடெல்லி, மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வருகிற மாதங்களில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. பொதுவாக தேர்தலுக்காக தயாராகி வரும் மாநிலங்களில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் கமிஷனர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி இந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷனர்கள் ஏற்கனவே நேரில் சென்று முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், … Read more

ரூ.1.18 கோடியில் ஆடி க்யூ8 லிமிடேட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஆடி நிறுவனம் சிறப்பு லிமிடேட் எடிசன் Q8 எஸ்யூவி மாடலை 1.18 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில், கருப்பு, வெள்ளை மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கின்றது. கிரில் அமைப்பில் புதிய செருகல்கள் கொண்டு எல்இடி ஹெட்லைட் பெற்று பகல்நேர ரன்னிங் விளக்குகள் கொண்டுள்ளன. Audi Q8 3.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பெற்று 48V மைல்ட் ஹைப்ரிட் அமைப்பு கொண்டுள்ளது. அதிகபட்சமாக 340hp பவர் மற்றும் 500Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. எட்டு வேக … Read more