தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளோம் : டி கே சிவகுமார்

பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டில்லியில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை கர்நாடகாவில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.   இதற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு … Read more

போலீஸ்காரரை கத்தியால் குத்திய இருவர் கைது| Two arrested for stabbing a policeman

மூணாறு:மூணாறு அருகே சூரியநல்லி பாப்பாத்திசோலை பகுதியில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய சம்பவத்தில் தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர். கேரளா ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தைச் சேர்ந்த புரோஸ் கான் 36, முகம்மதுமுனீர் 36, ஷெமீர்பாபு 35, ஹாசிம் 36, கொச்சுமோன் 38, சஜீர் 33 பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நிலையில் காயங்குளம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரை கடத்தினர். அதன்பிறகு மூணாறுக்கு தப்பி வந்தவர்களை தேடி காயங்குளம், கரியிலகுளங்கரா போலீஸ் ஸ்டேஷன்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை … Read more

ஒன் பை டூ: “சி.ஏ.ஜி அறிக்கையை வைத்து ஊழல் நடந்ததாகக் கூறிவிட முடியாது" என்ற எடப்பாடியின் கருத்து?

“கொத்தடிமையாகவே இருந்து பழகிப்போனவர் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். வங்கித்துறைகள் தொடங்கி ரஃபேல் வரை பல முறைகேடுகளைச் செய்திருந்தாலும், ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஊர் ஊராகப் புளுகிக்கொண்டிருந்தது பா.ஜ.க. ஆனால், மருத்துவக் காப்பீடு தொடங்கி, சாலை அமைப்பது வரை ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதைப் போட்டு உடைத்துவிட்டது சி.ஏ.ஜி அறிக்கை. இந்த சி.ஏ.ஜி அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் ஒரே … Read more

டில்லி முன்னாள் அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

டில்லி டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செப்டம்பர் 12 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். டில்லி அமைச்சரவையில் சத்யேநிதிர ஜெயின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த அண்டு மே மாதம் இவர் சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில்  அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் அப்போது இருந்து டில்லி திகார் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் ஊழல் ஒழியும்.. “அவசியம் மட்டுமல்ல அவசரம்”.. பாயிண்ட்களை அடுக்கும் பாஜக!

சென்னை: தேர்தல் செலவுகளே ஊழலுக்கு மூல காரணம் என்பதால் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்ற கருத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பாஜக நாராயணன் விளக்கம்: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி Source Link

இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா – எல்1 | Aditya-L1 launched today

சென்னை,;’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், முதல்முறையாக சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா – எல்1’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது.மொத்தம், 1,480.70 கிலோ எடை உடைய அந்த விண்கலத்தை சுமந்தபடி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘பி.எஸ்.எல்.வி., – சி57’ ராக்கெட் இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, 23 மணி நேரம், 40 நிமிட, ‘கவுன்ட் டவுன்’ நேற்று மதியம் 12:10 மணிக்கு துவங்கியது. சென்னை,;’இஸ்ரோ’ … Read more

I.N.D.I.A: 14 பேர்கொண்ட கமிட்டி அமைப்பு; டெல்லியில் அடுத்த கூட்டம்… மும்பை கூட்டத்தில் நடந்ததென்ன?

மும்பையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் இன்று நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் இன்று மாலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டணிக்கு புதிய அமைப்பாளர் மற்றும் லோகோ அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டுமே நடக்கவில்லை. காலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்பட அறிமுகத்துக்குப் பிறகு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் … Read more

பாஜக தேசியத் தலைவர்  – முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திப்பு

டில்லி இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவ ராம்நாத் கோவிந்த் ஆகியோர் சந்தித்துள்ளனர். மத்திய அரசு நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவுள்ளது. இன்று பாஜக … Read more

ரூ.2,000 நோட்டுகள் 93 சதவீதம் வாபஸ்: ரிசர்வ் வங்கி தகவல்| 93 percent withdrawal of Rs 2,000 notes: RBI information

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரூ. 2000 நோட்டுகள் 93 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது . 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அனைத்து வங்கி கிளைகளில், மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் டெபாசிட் செய்து வருகின்றனர். திரும்ப … Read more

'இந்தியா கூட்டணி' 140 கோடி மக்களின் கூட்டணி – அரவிந்த் கெஜ்ரிவால்

மும்பை, இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்றது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது, இது வெறும் 28 கட்சிகளின் கூட்டணி அல்ல, 140 கோடி மக்களின் கூட்டணி. … Read more