இன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு இன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர   திருவிழா கொண்டாடப்படுகிறது. எனவே இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு   உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தனது செய்திக் குறிப்பில் இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேல்மருவத்தூரில் கோலாகலம்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேல்மருத்துவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். இங்கு ஆடிப்பூரம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் இங்கு ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி … Read more

9 people were tragically killed when a car rammed into the crowd watching the accident | விபத்தை வேடிக்கை பார்த்த கூட்டத்தில் கார் புகுந்ததில் 9 பேர் பரிதாப பலி

ஆமதாபாத், குஜராத்தில் விபத்து நடந்த பாலத்தில் திரண்டிருந்த கூட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் புகுந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் சர்கேஜ் – காந்திநகர் நெடுஞ்சாலையில் இஸ்கான் பாலம் உள்ளது. இதில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு சென்ற கார், அந்த வழியே சென்ற லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள், பாலத்தின் மீது ஏறி வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு கார், … Read more

I.N.D.I.A Vs NDA… இரு அணிகளிலும் சேராத 11 கட்சிகளால் யாருக்கு சாதகம்?!

எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும் ‘இந்தியா’ அணியில் 26 கட்சிகளும், ஆளும் பா.ஜ.க தலைமையில் என்.டி.ஏ-வில் 38 கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இரு அணிகளிலும் மொத்தம் 64 கட்சிகள் இருக்கின்றன. எதிர்க் கட்சிகளின் அணியில் பெரும்பாலும் பலம் வாய்ந்த கட்சிகளும், பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், என்.டி.ஏ-வில் பலம்வாய்ந்த கட்சி பா.ஜ.க மட்டும்தான். பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய கட்சி அ.தி.மு.க-தான். அதற்கடுத்து, சிறிய கட்சிகளும், உதிரி கட்சிகளும், லெட்டர்பேடு கட்சிகளுமே இருக்கின்றன. பாட்னாவில் … Read more

ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

சென்னை ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்துக்கு வர உள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் வரும் ஆகஸ்ட் 6-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு … Read more

Engine test success for Kaganyan project | ககன்யான் திட்டத்துக்கான இன்ஜின் சோதனை வெற்றி

பெங்களூரு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின்கள் பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘சந்திரயான் – 3’ நிலவுக்கு, ‘சந்திரயான் -3’ விண்கலத்தை இஸ்ரோ சமீபத்தில் வெற்றிகரமாக அனுப்பிஉள்ளது. இதைத் தொடர்ந்து, ககன்யான் எனப்படும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ., தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் … Read more

நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த மோடி

டில்லி நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். வருடா வருடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் தலைவர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம்  ஆயினும், இன்று சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி உரையாடியது நாடாளுமன்றத்தில் கவனம் பெற்றுள்ளது.  சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து அப்போது பிரதமர் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18ஆம் தேதி இரவு சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சென்ற விமானம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான … Read more

அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற இஸ்லாமிய நடிகையால் பரபரப்பு

ஜம்மு அமர்நாத் யாத்திரையில் நடிகை சாரா அலி கான் பங்கேற்றதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இவர் நடிகர் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக நடித்து உள்ளார் சாரா அலி கான் நடிகர் சைப் அலி கானின் … Read more

50 percent women in Rajya Sabha | ராஜ்யசபா குழுவில் பெண்களுக்கு 50 சதவீதம்

புதுடில்லி, ராஜ்யசபா துணைத் தலைவர்கள் குழுவில், 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டு உள்ளார். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ராஜ்ய சபாவில், அதன் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியுள்ளதாவது: தலைவர் அல்லது துணை தலைவர் சபையில் இல்லாத நேரத்தில், ராஜ்யசபாவை வழிநடத்துவதற்கான துணை தலைவர்கள் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தக் குழுவில் உள்ள எட்டு பேரில், … Read more