வீட்டுமனை பட்டா கேட்டு நடந்த மறியலில் டிஎஸ்பி சட்டையை பிடித்து இழுத்து வழக்கு; 9 பேர் சிறையிலடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். காந்தி ஜயந்தி தினமான நேற்று கறுப்புக்கொடியேற்றும் போராட்டம் நடத்துவதாக திராவிடர் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்த நிலையில், திடீரென திருவனந்தபுரம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. … Read more

காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகூர் சீமானுக்குச் சரமாரி கேள்வி

விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சீமானுக்குச் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார். இன்று விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் ஒரு நிகழ்வில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம்,  ”ஒப்பந்த பணியாளர்களை அரசு அலுவலகங்களில் நியமிக்காமல் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். சில மாநிலங்களில்  காங்கிரஸ் கட்சி குறித்து சில கட்சிகள் ஓலமிடுவதைப் போல சீமான் ஓலமிடுகிறார். அவருக்கு தேசிய கட்சிகளை முன்னுக்குப் பின் … Read more

வைட்டமின் டானிக்கிற்கு பதிலாக பினாயில் கொடுத்த நர்ஸ்.. 11 மாத குழந்தை உயிரிழப்பு.. குஜராத்தில் ஷாக்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 11 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது. வைட்டமின் டானிக் கொடுப்பதற்கு பதிலாக பினாயிலை நர்ஸ் தவறுதலாக கொடுத்ததால் குழந்தை உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ளது அகமதாபாத். அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் அகமபாத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும் வணிக Source Link

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவின் ஆட்டம் மழையால் ரத்து| World Cup practice match: Indias match canceled due to rain

திருவனந்தபுரம்: இந்தியாவில் வரும் 5ம் தேதி முதல் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் மற்ற பிரிவை சேர்ந்த 2 அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன. அந்த வகையில் இந்திய அணி கடந்த அக்.,1ல் இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது. ஆனால், மழை குறுக்கிட்டதால் ‘டாஸ்’ போடாமலேயே அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (அக்.,3) திருவனந்தபுரத்தில் நெதர்லாந்து அணியுடனான பயிற்சி போட்டிக்காக … Read more

தொடரும் துயரம்: மகாராஷ்டிராவில் மேலும் ஒரு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் இருந்து வருகின்றன. இதனால் நேற்று நாண்டெட் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த எண்ணிக்கை இன்று 31-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க முதல்வர் கமிட்டி அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், புதிய திருப்பமாக மேலும் ஒரு மருத்துவமனையில் 18 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்திருக்கின்றனர். ஒளரங்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிதாக … Read more

டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம்… நேபாளத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவு…

டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று மதியம் 2:25 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. அரை மணி நேர இடைவெளியில் இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, 2:25 மணிக்கு முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆகவும் இரண்டாவதாக 2:51 மணிக்கு 6.2 ஆகவும் பதிவானது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் உணரப்பட்டதை அடுத்து மக்கள் வீடுகள் … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2023: அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டோக்ஹோம்: நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் Source Link

டில்லி சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு: மக்கள் அச்சம்| Strong Tremors In Delhi After 4.6 Magnitude Earthquake In Nepal

புதுடில்லி: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டில்லியில் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நமது அண்டை நாடான நேபாளத்தில் இன்று( அக்.,03) பிற்பகல் 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வானது நேபாள எல்லையில் உள்ள உ.பி., உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் டில்லியின் சுற்று வட்டார … Read more

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன்; மரப்பலகையில் திக்.. திக் 24 மணி நேரம்- மீட்கப்பட்ட அதிசயம்

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். கடல் இருக்கும் ஊர்களில் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள். அது போன்ற ஒரு நிகழ்வு குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் நடந்திருக்கிறது. விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, அது கரைக்கப்படுவதைப் பார்ப்பதற்கு லகான் தேவிபூஜக் என்ற 13 வயது சிறுவன் சென்றிருக்கிறான். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எல்லோரும் ஆர்ப்பாட்டமாக அரபிக்கடலில் விநாயகர் … Read more

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் மரணம்… விசாரணைக்கு உத்தரவு…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை காரணமாக 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் ஒரேநாளில் மரணமடைந்துள்ளனர். செப். 30 – அக். 1க்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் 24 பேர் மரணடைந்தனர். இதில் 12 குழந்தைகள் 12 பெரியவர்கள் அடக்கம். இந்த நிலையில் இன்று மேலும் 7 பேர் இறந்திருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட பெரியவர்கள் உட்பட கைக்குழந்தைகள் மற்றும் … Read more