இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் – மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் … Read more

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று  இலங்கை அருகே கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில்  பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை, 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, … Read more

ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கொதுமுடி தொழிலாளர்களைத் தங்கவைக்க தோட்ட உரிமையாளர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் பழங்கால கட்டடங்களில் தங்கியபடியே அந்தந்த உரிமையாளர்களின் தோட்டங்களில் கூலி வேலை செய்து வாழ்வைக் கழித்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் கழிவறை இல்லை என்பதால் பெண்களும், ஆண்களும் சுமார் … Read more

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மதுரை: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அதுகுறித்து   3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சந்தன கூடு விழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு சொந்தமான மரத்தில் கொடி கட்டிய நபர்கள் மீது அதிகாரி களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில் தல விருச்சமரமான கல்லத்தி … Read more

ராஜஸ்தானுக்கு இன்று வருகை தந்த அமித்ஷா; விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா நேரில் சென்று, பூங்கொத்து கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர் நகரில் உள்ள போலீஸ் அகாடெமியில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு சர்மா, நிகழ்ச்சி நடைபெற உள்ள பகுதிக்கு தனிப்பட்ட … Read more

சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் – சிக்கியது எப்படி?

சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 07.01.2026-ம் தேதி மாலத்திரி வேலைக்கு சென்ற பிறகு சுஜாதா வீட்டிலிருந்து துணிகளை தைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஜாக்கெட் தைக்க சுஜாதாவுக்கு ஏற்கெனவே அறிமுகமான திருவல்லிக்கேணியைச் சேர்ந் ஆர்னிப்பள்ளி ரவணம்மா என்பவர் சுஜாதா வீட்டுக்கு வந்தார். கைது இதையடுத்து போலீஸார், சம்பவம் நடக்கும் போது அங்கிருந்த … Read more

வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட் 2026! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக  பிப்ரவரி 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுகிறது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார் என நாடாளுமன்ற  செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 அன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது ஒரு காலண்டர் ஆண்டில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆகும். இது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன்  கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதைத் … Read more

இமாசல பிரதேசம்: பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி

சிம்லா, இமாசல பிரதேசத்தின் சிர்மாவுர் மாவட்டத்தில் சிம்லா நகரில் இருந்து குப்வி நகர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று நேற்று 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் பலர் பலியானார்கள். பயணிகள் 30-க்கும் மேற்பட்டோருக்கு காயமும் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், இழப்பீடும் அறிவித்து உள்ளார். … Read more

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் – சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்பித்து ஏராளமானோர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர். அதாவது குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் சன்மானம் அல்லது சம்பளம் வழங்கப்படும் என்று இக்கும்பல் விளம்பரம் செய்து வருகிறது. அப்படியே சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாகாவிட்டாலும் பாதி பணம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை … Read more

நாளை நடைபெறுகிறது போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம்….

சென்னை:   சென்னை போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் ஜனவரி 11ந்தேதி (நாளை) நடைபெறும் என சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில்  நேற்று (டிசம்பர் 9ங்தேதி)  அன்று சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால்  நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த வழித்தடத்தில் மேல்நிலை மின்மயமாக்கல் பணிகள் … Read more