கோவிட்… பூஸ்டர் தடுப்பூசி மீண்டும் தேவையா? சௌமியா சுவாமிநாதன் தகவல்!

“இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறது” என் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கொரோனா வைரஸ் பரவலை இப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார். WHO former chief scientist Dr.Sowmya Swaminathan எதிர்கால கொரோனா எப்படி இருக்கும்? இந்திய மருத்துவ சங்கத்தின் விரிவான பாடப் புத்தகம்! … Read more

தமிழக மீனவர்களின் 8மீன்பிடி படகுகளை அரசுடைமையாக்கியது இலங்கை அரசு…

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 8மீன்பிடி படகுகளை  இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் அரசுடைமையாக்கி உத்தரவிட்டு உள்ளது. இது தமிழ்நாடு மீனவர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்கும்போது, எல்லைதாண்டி மீன்பிடிக்க வருவதாக இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டுவதும், அவர்களை கைது செய்வதுடன் தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், … Read more

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தென்மலையில் இடம் வாங்கி விற்பது தொடர்பான தகராறில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தென்மலையில் இடம் வாங்கி விற்பது தொடர்பான தகராறில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விவசாயி தனபால் துப்பாக்கியால் சுட்டதில் ராஜ்கண்ணு, கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடன் சுமையில் பல நாடுகள்: மோடி கவலை| “Global Governance Has Failed”: PM Modi At G20 Foreign Ministers’ Meet

புதுடில்லி:உலகளவில் பல நாடுகள் பங்கேற்கும் தன்மை ஆபத்தில் உள்ளது எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, ஒரே மாதிரியான நடைமுறை தோல்வியடைந்துள்ளது எனக்கூறியுள்ளார். ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பல நாடுகள் பங்கேற்பது பிரச்னையில் உள்ளதை நாம் அனைவரும் ஒப்பு கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளான அனுபவங்களில் நிதி பிரச்னை, பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, பயங்கரவாதம் மற்றும் போர்கள் ஆகியவை, உலகம் … Read more

டிரெண்டிங்கில் வரலைன்னா பதவி இருக்காது முதல் சென்னையைக் கைப்பற்ற புது பிளான் வரை – கழுகார் அப்டேட்ஸ்

தி.மு.க-வினருக்குக் கொடுக்கப்பட்ட டார்க்கெட்!“டிரெண்டிங்கில் வரலைன்னா பதவி இருக்காது!” தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிவருகிறார்கள் தி.மு.க தொண்டர்கள். `ஆடம்பரம் வேண்டாம்’ எனச் சொல்லியும் வழக்கம்போல தி.மு.க-வினர் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. சீர்வரிசை எடுத்துச்செல்வது, ஆட்டம், பாட்டம் என அண்ணாசாலையையே கலங்கடித்துவிட்டார்கள். இதன் ஒரு பகுதியாக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்துக்குப் போனது. என்றைக்கும் இல்லாத அளவுக்கு தி.மு.க ஐடி விங் தீயாக வேலை … Read more

புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணம்: இதுவரை வெளிவராத இரகசியம்

புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணமடைந்துள்ளார். புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் சுவிஸ் மருத்துவரான Dr நட்டாலியா (Dr Natalia Thiebaud Kondratieva), சோவியத் யூனியனில் பிறந்தவர். புடினுடைய இரகசிய காதலி என்றும், அவரது பிள்ளைகளின் தாய் என்றும் அழைக்கப்படும் அலீனா (Alina Kabaeva)வுக்கு பிரசவம் பார்த்தவர் இந்த Dr நட்டாலியாதான். Dr நட்டாலியா, அலீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவுக்கு தலைமை வகிக்க, அவருடன், குழந்தைகள் நல … Read more

ஈவிகேஎஸ் 20ஆயிரம் ஓட்டு முன்னிலை: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை 4வது சுற்று விவரம்…

ஈரோடு:  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை 4 சுற்று எண்ணப்பட்ட நிலையில், சுமார் 21ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 397 … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தனர்.