11 -12ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் வரும் 28ம் தேதி வெளியாகிறது

சென்னை: 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும்28ம் தேதி வெளியாகிறது என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.  

நடுக்கடலில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; இலங்கை கடற்படைமீது வழக்கு பதிய ஆட்சியர் பரிந்துரை!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் வேல்முருகன். நேற்றைய தினம் வேல்முருகன் தன்னுடைய ஃபைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் உள்ளிட்டோருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார். மீனவர்கள் இந்த நிலையில், இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் அனைத்து மீன்பிடி உபகரணங்களையும் பறித்துக் கொண்டதுடன், இரும்பு பைப்பால் கொடூரமாகத் தாக்கியிருக்கின்றனர். இதில் 6 மீனவர்களும் … Read more

உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! PSG வெளியிட்ட பதிவு

ஸ்பெயின் அணியின் ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செர்ஜியோ ராமோஸ் ஸ்பெயின் அணியின் 36 வயது ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ். தனது அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள ராமோஸ் 23 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் ஸ்பெயினுக்கு உலகக்கோப்பை மற்றும் இரண்டு ஐரோப்பிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு 469 போட்டிகளில் 72 கோல்கள் அடித்த ராமோஸ், 2021ஆம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் … Read more

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 20கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம், குடும்பத்தலைவிக்கு ரூ.2000! டி.கே.சிவகுமார்

பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 20கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்  டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத்தலைவி களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 தொடர்பான அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் … Read more

சென்னை வருகிறார் தோனி; மார்ச் 2-ம் தேதி சென்னை வரும் தோனி, மார்ச் 3-ல் பயிற்சியை தொடங்க திட்டம்!

சென்னை: சென்னை வருகிறார் தோனி; மார்ச் 2-ம் தேதி சென்னை வரும் தோனி, மார்ச் 3-ல் பயிற்சியை தொடங்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

`ஒரு தேங்காய், ஒரு ரூபாய் போதும்!’ – ரூ.11.50 லட்ச வரதட்சணையை திருப்பிக் கொடுத்த மணமகன்

திருமணம் என்றாலே வரதட்சணை இல்லாமல் இல்லை என்ற நிலைதான் இன்று வரை உள்ளது. இந்த வரதட்சணையால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தன் திருமணத்தில், அனைவருக்கும் முன்மாதிரியாக நடந்துகொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டம் ஹுடில் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் சிங் ஷெகாவத். இவர் தனது மகளை ராணுவ வீரர் அமர்சிங்கிற்கு திருமணம் செய்ய கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தன. மணமகனிடம் … Read more

சினிமாவை விட்டு விலகும் நயன்தாரா? இவர்கள் தான் காரணமாம்..வெளியான தகவல்

பிரபல நடிகை நயன்தாரா சினிமாவை விட்டே விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை குழந்தைகள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா தாயானார். இதுகுறித்து சர்ச்சை ஒருபுறம் எழுந்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவுக்கு முழுக்கு போடும் நயன்தாரா இந்த நிலையில் தனது குழந்தைகளை நல்ல … Read more

காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம்! கார்கே தமிழில் டிவிட்..

ராய்ப்பூர்: காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கி ராய்ப்பூரில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை கட்சி தலைவர் கார்கே தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார்.  இன்றைய கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை. சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு  இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிராக … Read more

ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் ரூ.305 கோடி சொத்துக்களை முடக்கியது: அமலாக்கத்துறை

சென்னை: ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் ரூ.305 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் வர்கீஸ்-ன் ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜாய் அலுக்காஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.