இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்? நிபுணர் தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் பயங்கர நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த திங்கட்கிழமை பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுக்குமாடி கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அங்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் இந்தியாவில் தடுக்கப்படுகின்றன. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள்தான் இத்தகைய பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். … Read more

"அடக்கம் செய்யகூட பணமில்லை" – கணவர், தாயாரின் சடலங்களுடன் ஒரு வாரம் வசித்த தாய், மகன்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், வண்டிப்பேட்டை, குமணன் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் காலமாகி விட்ட நிலையில், இவரின் மனைவி கனகாம்பாள் (80), மகள் சாந்தி (60)யுடன் வசித்து வந்தார். சாந்தியின் கணவர் மோகனசுந்தரம் (74) இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு சரவணகுமார் (33) என்ற மகனும், சசிரேகா (35) என்ற மகளும் இருக்கின்றனர். சசிரேகாவுக்கு திருமணமாகி திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் வசித்து வருகிறார். சரவணகுமார் சற்று மனநலம் சரியில்லாதவர். ஏற்கெனவே சாந்தியின் கணவரான மோகனசுந்தரம் நைட் … Read more

சென்னையில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

சென்னை: சென்னையில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள், நடைபயிற்சி செல்வோர், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

புதுச்சேரி கடல்சார் திட்டமிடல் சாப்ட்வேர் தயார்: நாட்டில் முதன்முறையாக இன்று வெளியீடு| Puducherry Maritime Planning software ready: First in the country launched today

புதுச்சேரி: நாட்டிலேயே முன்னோடி திட்டமாக, புதுச்சேரி கடல் தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய ‘கடல்சார் திட்டமிடல்’ சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது. கடல் சார்ந்த திட்டமிடல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், இதில் கூட்டாக பணியாற்றவும் இந்தியா – நார்வே இடையே, கடந்த 2019ம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கடல் போக்குவரத்து, எரிசக்தி, மீன் வளம், கடல்வாழ் உயிரினங்கள், சுற்றுலா, சுற்றுச்சூழல் போன்றவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.கடலோர பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், … Read more

பனிப்பொழிவால் ஆஸ்பத்திரி செல்ல முடியாத நிலை:'வீடியோ கால்' மூலம் கர்ப்பிணியின் சுக பிரசவத்துக்கு உதவிய டாக்டர் காஷ்மீரில் நெகிழ்ச…

ஸ்ரீநகர், காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருந்ததால், பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது. எனவே கிரால்போராவில் உள்ள மாவட்ட துணை மருத்துவனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமோ அங்கு செல்ல முடியாத … Read more

Doctor Vikatan: ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கும் கொழுப்பு இருக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும் என்பது உண்மையா? உடல் பருமனுக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பில்லையா? ஒல்லியாக உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவது எப்படி? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி மருத்துவர் சஃபி | நாகர்கோவில் முதலில் கொலஸ்ட்ரால் என்பது என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் என்பது மிக முக்கியம். கொலஸ்ட்ரால் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் உடலிலும் குறிப்பிட்ட அளவு … Read more

பிப்ரவரி 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 268-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 268-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் திறப்பு!

மதுரை: இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தின் கீழ் இது திறக்கப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்திய அரசின் ‘நிதி’ குறைப்பு சரியா? – இது ஏற்படுத்தும் விளைவுகள் என்ன?

கடந்த 1-ம் தேதி மத்திய பட்ஜெட்- 2023 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, அதன்மீதான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, `இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்’ என பல தலைவர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாகப் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “இந்த பட்ஜெட் ஏழைகள்மீது அமைதியாக தொடுக்கப்பட்ட போர்” எனக் கூறினார். அதில் அவர் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மத்திய பட்ஜெட் … Read more

ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை இன்று தொடக்கம்

பெங்களுரூ: பெங்களூருவில் இன்று நடைபெறும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா என்ற பெயரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி நடைபெற … Read more