மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை இன்றே விடுவிக்கப்படும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை இன்றே விடுவிக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பின் ஒன்றிய நிதியமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும். ஒன்றிய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து நிலுவை தொகையை விடுவிக்க முடிவெடுத்துள்ளது. தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.

குஜராத் சோம்நாத் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடை| Gujarat Somnath Temple Mukesh Ambani Rs. 1.51 crore donation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காந்திநகர்: குஜராத் சோம்நாத் கோயிலுக்கு ரூ. 1.51 கோடி நன்கொடை வழங்கினார் . தொழிலதிபர் முகேஷ் அம்பானி. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி , சிவராத்திரியை முன்னிட்டு குஜராத் சென்றார். அங்குள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலுக்கு மகன் ஆகாஷ் அம்பானியும் சென்றார். இருவரும் அங்கு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு ரூ. 1.51 கோடி நன்கொடை வழங்கினார். காந்திநகர்: குஜராத் சோம்நாத் கோயிலுக்கு ரூ. 1.51 … Read more

`பள்ளிக் கல்லூரி மாணவர்களே டார்கெட்!' – நரிக்குடி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்… 8 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே நேர்த்தியாயிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக அ.முக்குளம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அ.முக்குளம் காவல் நிலைய போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அ.முக்குளம் அருகேயுள்ள நேர்த்தியாயிருப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 24) என்பவர் காரில் சுமார் 30 கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், மனோகரனை காவல் நிலையம் … Read more

தேனியில் மார்ச் 3ம் தேதி முதல் 12ம் தேதி புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி: தேனியில் முதலாவது புத்தகத் திருவிழா மார்ச் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தனியார் திடலில் அரங்குகள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளா: ஆதிவாசி இளைஞர் மர்ம மரண வழக்கு; ஆறு பேரிடம் போலீஸ் விசாரணை!

வயநாடு அட்டப்பாடி ஆதிவாசி இளைஞர் மது கொலை வழக்கைப் போன்றே, கோழிக்கோட்டில் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மரண வழக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வயநாடு மாவட்டம், கல்பற்ற வெள்ளாரம்குந்நு அருகே அட்லஸ் பாறவயல் காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (46). இவருக்குத் திருமணம் நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்துக்காக அவர் மனைவி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தை பிறந்த மறுநாள் விஸ்வநாதன் மருத்துவமனைக்குச் சென்றபோது, காவலாளி உள்ளிட்ட சிலர் அவரைத் … Read more

பிசுபிசுக்கும் பிரான்ஸ் வேலைநிறுத்தம்?: மார்ச் 7ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்பு

எதிர்பார்த்ததைவிட வேலைநிறுத்தம் தொடர்பான பேரணிகளில் குறைவான பணியாளர்களே கலந்துகொண்டதால் பிரான்ஸ் வேலைநிறுத்தம் பிசுபிசுத்துப்போனதாக கருதப்படுகிறது எதிர்பார்த்ததைவிட குறைவான பணியாளர்கள் பிரான்ஸ் முழுவதும் ஓய்வூதிய வயதை உயர்த்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அரசின் திட்டத்தை எதித்து பேரணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ஊழியர்கள். ஆனால், வேலைநிறுத்தத்தின் ஐந்தாவது நாளில் (பிப்ரவரி 16) எதிர்பார்த்ததைவிட குறைவான பணியாளர்களே பேரணிகளில் பங்கேற்றார்கள். மார்ச் 7ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்பு ஆனால், அடுத்த மாதம், அதாவது மார்ச் 7ஆம் திகதியை இலக்காக வைத்துள்ள தொழிலாளர் … Read more

தமிழக மீனவர் மரணம் தொடர்பாக கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: மார்க். கம்யூ. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர் மரணம் தொடர்பாக கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராஜாவின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.50 லட்சம் தர தமிழ்நாடு அரசு நிர்பந்திக்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

"ChatGPT-ஐ லாப நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது ஆபத்தானது!"- எலான் மஸ்க் இப்படிச் சொல்ல என்ன காரணம்?

`Open AI’ என்ற நிறுவனம் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன், கிரெக் ப்ரோக்மேன், ரீட் ஹாஃப்மேன் உள்ளிட்ட சில பெரும் டெக் ஜாம்பவான்களால் 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. லாப நோக்கம் ஏதுமின்றி ஓப்பன் சோர்ஸாக பல செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அந்த வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த அதிதிறன் கொண்ட ‘ChatGPT’ சர்ச் இன்ஜின். இந்த ‘ChatGPT’ அறிமுகமான சில மாதங்களிலேயே பல கோடி பயன்பாட்டாளர்களைப் பெற்று டெக் … Read more

நிகழ்ச்சி ஒன்றில் பல பெண்களின் குழந்தைகள் ஒரே மாதிரி இருந்ததால் ஏற்பட்ட சந்தேகம்: தாய்மார்களுக்கு தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை

அவுஸ்திரேலியாவில், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தாய்மார்கள் பலர், தங்கள் குழந்தைகள் எல்லாரும் ஒரே மாதிரி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். புதிய தாய்மார்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி புதிதாக தாயான பல பெண்கள், தங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்கள். அப்போது, பலரது குழந்தைகள் ஒரே மாதிரி இருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த தாய்மார்கள், உயிரணு தானம் மூலம் குழந்தை பெற்றவர்கள். ஆகவே, ஏதோ தவறு நடந்துள்ளதை அறிந்த அவர்கள், செயற்கை கருவூட்டல் மையத்தில் … Read more

ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது ஜனநாயக படுகொலை! உத்தவ் தாக்கரே

மும்பை: ஷிண்டே அணியை சிவசேனா என  தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது ஜனநாயகத்துக்கு ஆபத்தான செயல் என சிவசேனா கட்சி தலைவரான  உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ்தாக்கரே தனது கொள்கைளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை நடத்தியதால், சொந்த கட்சி எம்எல்ஏக்களால், ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைத்தனர். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வழக்குகள் உள்ளன. சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் … Read more