சுகாதார அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் எஸ்.ஐ! ஒடிசாவில் பரபரப்பு
ஒடிசா மாநில சுகாதார அமைச்சரை பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே காந்தி சௌக் பகுதியில் உதவி சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்டார். அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் இரண்டு முறை அமைச்சரின் … Read more