நாமக்கல்: "எம்.எல்.ஏ, அமைச்சர் என்பதையெல்லாம் தாண்டி, உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை நான்!" – உதயநிதி

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டதோடு, ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.351.12 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “நாமக்கல் என்றாலே உடனே நினைவுக்கு வருவது லாரிகள்தான். லாரி இல்லாத வீடே இல்லை, … Read more

காதலியின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய ரொனால்டோ! வெளியிட்ட புகைப்படம்

தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படத்தை ரொனால்டோவின் காதலி வெளியிட்டுள்ளார். காதலியின் பிறந்தநாள் போர்த்துக்கலின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2016ஆம் ஆண்டில் இருந்து ஜியார்ஜினா ரோட்ரிகஸுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அல் நஸர் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து சவுதி அரேபிய தலைநகருக்கு தன் குடும்பத்துடன் சென்ற ரொனால்டோ அங்கு மகிழ்ச்சியாக பொழுதினை கழித்தார். இந்த நிலையில் தனது காதலி ஜியார்ஜினாவின் 29வது பிறந்தநாளை ரொனால்டோ கொண்டாடினார். View this post … Read more

உலகளவில் 67.46 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.57 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.68 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.இந்த போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்க்க முடிவு எடுக்கவில்லை – சரத்பவார்

மராட்டியத்தில் பா.ஜனதா – சிவசேனா கட்சிகள் 25 ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்தன. மகா விகாஸ் அகாடி 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறில் அந்த கூட்டணி உடைந்தது. இதைதொடர்ந்து சிவசேனா, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி மகாவிகாஸ் அகாடி கூட்டணி என அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: “மாற்று கட்சியில் இணைகிறேனா?!" – தேமுதிக வேட்பாளர் விளக்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளராக, அந்தக் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தை கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சில நாள்களான நிலையில், வெள்ளிக்கிழமை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார் ஆனந்த். தாமதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கும் அவர், “இந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளுடன் வெற்றி பெறுவேன்” என்று கூறி வருகிறார். இந்த நிலையில், தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த், ஆளுங்கட்சியான தி.மு.க-வில் இணையப் போவதாகவும், இது தொடர்பாக ஆளுங்கட்சி தரப்பில் அவருக்கு விலைபேசி … Read more

இன்று தொடங்குகிறது தைப்பூசத் திருவிழா

பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவார்கள். இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பழனிக்கு முருகப்பெருமானைத் தரிசனம் செய்ய வருவார்கள். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பழனி பெரிய நாயகி அம்மன் … Read more

இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி

சென்னை: சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணை தொடும் இந்தியா | Scientist Venkatraman surprises India as it touches the sky in space research

ஆங்கிலேயரிடம் ஒரு காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா இன்று அந்த நாட்டின் செயற்கைகோள்களை தன் ராக்கெட் மூலம் ஏவும் அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மங்கள்யான், சந்திரயான் என பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அதன் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரும் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இணை இயக்குனருமான முனைவர் வெங்கட்ராமன் மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தக்குளத்தை சேர்ந்தவர். பயின்ற திருமங்கலம் பி.கே.என்., பள்ளி விழாவில் பங்கேற்க வந்தவர் … Read more

மராட்டியத்தில் நைகாவ் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மீது கிரேன் மோதல்; மோட்டார் மேன் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்தது மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நைகாவ் ரெயில் நிலையம் பிளாட்பாரம் நம்பர் 1-ல் லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக ஹைட்ரா கிரேன் பயன்படுத்தப்பட்டது. கிரேனை கமலேஷ் யாதவ் என்பவர் இயக்கினார். நள்ளிரவு 12.55 மணி அளவில் ரெயில் நிலையத்திற்கு வந்த திருநங்கை ஒருவர் கமலேஷ் யாதவ் மீது கல் வீசி தாக்கியதாக தெரிகிறது. அந்த கல் கமலேஷ் யாதவின் கைவிரலில் பட்டு காயமடைந்தார். இதனால் கிரேன் கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரம் … Read more