கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோயில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். கோயில் நிலத்தை மூன்றாவது நபருக்கு மனுதாரர் கிரயம் செய்துள்ளார் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூர்: ஆறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை; ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புடைய இருவர் கைது- பின்னணி பகிரும் போலீஸ்

கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, அனைத்து கோயில்கள், முக்கிய இடங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களை, உளவுத்துறையும், என்.ஐ.ஏ-வும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று பெங்களூர் மட்டுமின்றி, தக்‌ஷின கன்னடா, சிவமோகா, தவகிரியில் உள்ள, ஆறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் பகுதியைச் சேர்ந்த ரெஷான் தஜ்ஜுதின் ஷேக், … Read more

சோனியா காந்தி உடல்நிலை முன்னேற்றம்! கங்காராம் மருத்துவமனை தகவல்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் கங்காராம் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில்,  அவரின்  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில்  நேற்று முன்தினம் (6ந்தேதி) அனுமதிக்கப்பட்டார்.  தொடக்கத்தில், அவர் வழக்கமாக நடைபெறும் மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக … Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீர் பாட்டில்கள், கற்களை வீசி கல்லூரி மாணவர்கள் ரகளை..!!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீர் பாட்டில்கள் கற்களை வீசி கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுடாத சூரியன் – பாகம் 2| Science Fiction சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சுடாத சூரியன்! – சிறுகதை | My Vikatan “நேத்து நீ கூட்டத்துல சொன்னதெல்லாம் நெசமாவே நெசமாடா, கதிரு?” “ஊர்க்கூட்டத்துல போயி யாராச்சும் பொய் சொல்லுவாங்களா, காவேரி? அதுவும் இப்பிடி ஒரு விஷயத்துல?” “அப்ப இன்னும் ஒரு வாரத்துல நீ போனா அப்புறம் … Read more

கனடா எல்லையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்: மனதை உருக்கும் மற்றொரு சம்பவம்

கனடாவுக்கு புலம்பெயரும் ஆசையில் நடந்தே கனடாவுக்குள் நுழையமுயன்ற சிறுபிள்ளைகள் உட்பட இந்தியர்கள் நான்கு பேர் பனியில் உறைந்து பரிதாபமாக பலியாகிக் கிடந்த சம்பவம் நினைவிருக்கலாம். கனடா அமெரிக்க எல்லையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியர்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் அவரது மனைவி வைஷாலி (33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விருப்பம்! கமல்ஹாசன்

சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூறும் வகையில், மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற “பாரத் ஜோடோ யாத்திரையில்” கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக சென்னை அடையாறில் மக்கள் நீதி மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம் கிராமிய இசை நிகழ்ச்சிகளுடன்நடைபெற்றது.  இந்த  நிகழ்வில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.  நிகழ்ச்சியில்  பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. … Read more

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக 12 கிராம மீனவர்களிடையே பிரச்சனை இருந்து வந்தது. ஏற்கனவே பிரச்சனை தொடர்பாக பல கட்ட பேச்சு நடத்தி ஆட்சியர் கடந்த மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

மகரவிளக்கு பூஜைக்குத் தயாராகும் சபரிமலை; பந்தளத்திலிருந்து 12-ம் தேதி புறப்படும் திருவாபரணம்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதற்காகக் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டலபூஜை நிறைவடைந்து இரண்டு நாள்கள் சபரிமலை நடை சார்த்தப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை வரும் 14-ம் தேதிவரை நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான சுத்தி கிரியைகள் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 12-ம் தேதி … Read more

இலங்கை சிங்கள கவர்ச்சி நடிகை செய்த நெகிழ்ச்சி சம்பவம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

இலங்கை மக்களால், குறிப்பாக இளைஞர்களால் அதிகளவில் பேசப்படும் அதேவேளை தேடிபார்க்கப்படும் ஒரு நபர் தான் பியூமி ஹன்சமாலி. கவர்ச்சியான சித்தரிப்புக்கும் பல சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்ட அவரது சமூக பணி பலராலும் ஈர்க்கப்பட்டுள்ளதோடு அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் அவர் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகின்றார். என்ன காரணத்திற்க்காக இவர் இப்படி பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார் என்று தேடி பார்த்தால் , தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு அவர் வீடு கட்டி கொடுக்க முன்வந்துள்ளார். … Read more