பட்ஜெட் விலையில் ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி 2027ல் அறிமுகம் | Automobile Tamilan

ஹூண்டாய் குழுமத்தின் 2025 CEO முதலீட்டாளர்கள் தினத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புளை வெளியிட்டுள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டு இந்திய சந்தைக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டு, உதிரிபாகங்கள் என அனைத்தும் உள்நாட்டிலே பெறப்பட்ட மாடலை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இது அனேகமாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்டர் மாடலை விட பிரீமியம் மற்றும் வெனியூ என இரண்டுக்கும் இடையிலான புதிய டிசைனை பெற்ற மின் வாகனமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதனால், இதற்கான பேட்டரியை எக்ஸைட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு … Read more

பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி… வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!

பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் விளக்கம் பெற்று வெளியிட்டோம். இந்த செய்தி நேற்று புதன்கிழமை ஜூனியர் விகடன் இதழில் வெளியானது. பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநில பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரையிடம் கலந்தலோசித்தார். இதனடிப்படையில் உடனே பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரை மண் … Read more

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா  படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, … Read more

காதலனுக்கு பிடிக்காததால் 3 வயது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற தாய்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கான்ஸ்டபிள் கோவிந்த் சர்மா என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆணும், பெண்ணும் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களை நிறுத்தி விசாரித்தார். அந்த பெண், தன்னுடைய குழந்தை காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சோதனை செய்தனர். இதற்கிடையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த … Read more

12.5 கோடி இரு சக்கர வாகனங்களை விற்ற ஹீரோ மோட்டோகார்ப் | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாட்டின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக உள்ள நிலையில் 125 மில்லியன் அல்லது 12.5 கோடி விற்பனை எண்ணிக்கையை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ஸ்பிளெண்டர்+, பேஷன்+ மற்றும் விடா VX2 என மூன்று மாடல்களிலும் சிறப்பு எடிசைனை வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக கிரே நிறத்தை பெற்று புதிய பாடி கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டு 125 மில்லியன் பேட்ஜிங் பெற்றிருக்கும், மற்றபடி அடிப்படையான மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. … Read more

Robo Shankar: உடல்நலக் குறைவால் காலமானார் ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தியிருக்கிறார். அவருக்கு வயது 46 ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் நேற்று காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர், அடுத்தடுத்து கிடைத்த சினிமா வாய்ப்புகளை இறுக்கமாகப் பிடித்து, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காமெடியன்களில் ஒருவரானார். இவர் செய்யும் மிமிக்ரிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் … Read more

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு! தெற்கு ரயில்வே

மதுரை :  ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ்  மதுரை உள்பட தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. மத்தியஅரசின்  அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலும், மதுரை … Read more

சவுதி அரேபியா -பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்: இந்தியா சொல்வது என்ன?

புதுடெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் – சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்படும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு … Read more

அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர விசாரணையில் காவல்துறை!

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற 71 வயது பெண் இந்தியாவுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த நிலையில், எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் அமெரிக்கா குடியுரிமைப் பெற்று அங்கு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், இவருக்கும் பாஞ்சாபிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த சரஞ்சித் சிங் கிரேவால் 74 என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அது காலப்போக்கில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவு செய்திருக்கின்றனர். ருபிந்தர் கவுர் … Read more

விண்வெளிக்கு பறக்க தயாராகிறார் ‘வயோமித்ரா’! இஸ்ரோ தலைவர் தகவல்…

கோவை: விண்வெளிக்கு பறக்க  ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன்  தயாராக உள்ளதாக  இஸ்ரோ தலைவர்  நாராயணன் தெரிவித்துள்ளார்.  இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் வகையில் ககன்யான் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட நிலையில்,  இந்த திட்டம் இஸ்ரோவின்  கனவுத் திட்டமாகும்.  இந்ததிட்டத்தின்படி, விண்வெளிக்கு மனிதர்களை … Read more