கொள்கையை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: “கொள்கையை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம், எதையும் இழக்கலாம். ஆனால், பதவியைக் காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சியில் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்வது பெருமை, சென்னையில் டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

செஃப் தாமு பாடிய பாடல் ~ நடுவராக 10க்கு 10 மதிப்பெண் கொடுத்த ஷிவாங்கி! 

சாதனைப் பெண்களைச் சிறப்பிக்கும் அவள் விகடனின் 5-ம் ஆண்டு ‘அவள் விருதுகள்’  விழா, கடந்த 18-ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ‘அவள் ஐகான் விருது’ திரைப்பட நடிகை பிரியா பவானிஷங்கருக்கு வழங்கப்பட்டது. திறமையைக் கொண்டு, தன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்லலாம் என்பதற்கு பிரியா பவானிஷங்கர் நல்ல உதாரணம். செய்தி வாசிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர், அடுத்ததாக தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். `மேயாத மான்’  மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ச்சியாக `கடைக்குட்டி சிங்கம்’, … Read more

FIFA உலகக்கோப்பையில் சொந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்த சுவிஸ் வீரர்! மைதானத்தில் செய்த செயல்

சுவிஸ் வீரர் கோல் அடித்ததும் கொண்டாடாமல் அமைதியாக நின்றது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வெற்றிக்கான கோல் கத்தார் உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து – கேமரூன் அணிகள் மோதின. அல் ஜனோப் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் 48வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோ கோல் அடித்தார். @AFP ஆனால் கோல் அடித்ததற்காக கொண்டாடாமல் அமைதியாக அவர் நின்று விட்டார். இதற்கு காரணம் அவர் பிறந்தது கேமரூன் நாட்டில் தான். தனது சொந்த நாட்டிற்கு எதிராக … Read more

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு ‘கம்யூனிஸ்டு’ வாசுகி தலைமையில் மாதர் சங்கத்தினர் போராட்டம் – டிஜிபி அலுவலம் முற்றுகை!

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு. மூத்த கம்யூனிஸ்டு கட்சியின் பெண் உறுப்பினர் வாசுகி தலைமையில்  மாதர் சங்கம் போராட்டம் நடத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில், காவல்துறையினரின் மெத்தனம் காரணமாக, கடும் … Read more

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 இரு அணிகளும் 0-0 என்ற சமநிலையில் முடிந்தது

அல் ரய்யான் : உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 14-வது போட்டியில் குரூப் H பிரிவில் உருகுவே மற்றும்  சவுத் கொரியா அணிகள் மோதின. அல் ரய்யான் பகுதியில் எடுகேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் உருகுவே – சவுத் கொரியா 0-0 என்ற சமநிலையில் முடிந்தது.

HIV பாதிப்பு; பிரசவத்துக்கு சிகிச்சையளிக்க முன்வராத மருத்துவர்கள் – கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையொன்றில், மருத்துவர்கள் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய கர்ப்பிணிக்கு சிகிச்சையளிக்க தயக்கம் காட்டி, நெருங்க மறுத்ததால், அவர் 6 மணிநேரம் வலியில் துடித்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மருத்துவரின் அலட்சியத்தால் பிறந்த ஆண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக கர்ப்பிணியை அவரின் தந்தை, தனியார் மருத்துவமனையொன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு பிரசவத்துக்கு 20,000 ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. HIV தொற்று கர்ப்பிணியை நெருங்க மறுத்த அரசு … Read more

இனி தேங்காய் மட்டையை தூக்கி வீசாதீங்க! இதில் பல நன்மைகள் ஒளிந்துள்ளதாம்.. கட்டாயம் தெரிஞ்சிகோங்க

தென்னை மரத்தை கற்பக விருட்சம் என்று கூறுவர். ஏனெனில் தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. அதிலும் தேங்காய் மட்டையின் பண்புகள் சிலருக்கு மட்டுமே தெரியிருக்கும். தேங்காயை சாப்பிட்ட பிறகு, மக்கள் அதன் மட்டையை தூக்கி எறிந்துவிடுவதை நாம் அடிக்கடி காணலாம். உண்மையில் இது பல நன்மைகளை தருகின்றது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். எனவே தேங்காய் மட்டையை எப்படி பயன்படுத்தினால் நன்மையை பெறலாம் என்பதை பார்ப்போம்.   தேங்காய் மட்டையால் காயத்தின் வீக்கத்தையும் நீக்கலாம். … Read more

என்னை நீக்க தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது! ரூபி மனோகரன்…

களக்காடு:  என்னை நீக்க தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது. நான் கட்சியின் பொருளாளர். என்னை தமிழக காங்கிரஸ் எப்படி சஸ்பெண்ட் செய்யும்? என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்து உள்ளார். கடந்த 15 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தின்போது, நெல்லை மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் தர்ணா நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு கோஷ்டி மோதலில் … Read more

பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்: டெய்சி, சூர்யா சிவா இருவரும் கூட்டாக பேட்டி!

சென்னை: ‘ஆடியோ விவகாரம்; பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்’ தம்பி போலதான் சூர்யா சிவா எனக்கு; பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்; இதனை ஊடகங்கள் பெரிதுப்படுத்த வேண்டாம் என டெய்சி தெரிவித்துள்ளார். மாநில தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இதை பரப்பி வருகின்றனர், தவறு எனும் பட்சத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று சூர்யா சிவா தெரிவித்துள்ளார். ஆடியோ விவகாரம் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் டெய்சி, சூர்யா சிவா இருவரும் கூட்டாக பேட்டி கொடுத்துள்ளார்.

ரெயில்வேயில் அதிரடி நடவடிக்கை: கடந்த 16 மாதங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட 177 ஊழியர்கள் பணி நீக்கம்!

புதுடெல்லி, இந்திய ரெயில்வேயில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, ஜூலை 2021 முதல், ஒரு நாளைக்கு மூன்று பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு 38 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இரண்டு மூத்த அதிகாரிகளும் புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் … Read more