மே.வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு| Miscreants pelted stones on Vande Bharat train in Bengal

கோல்கட்டா: மே.வங்க மாநிலம் ஹவுரா-நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் இன்று(ஜன.,03) கல்வீச்சு நடத்தினர். மே.வங்க மாநிலம் ஹவுரா-நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 30ம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த ரயில் சேவை துவங்கி நான்கு நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் இன்று(ஜன.,03) வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதில் ரயிலின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதல் மல்டா … Read more

“எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக-வில் இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லை!” – வைத்திலிங்கம் காட்டம்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள வைத்திலிங்கம், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருப்பி அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் துவக்கிய காலத்தில் கொண்டுவந்த சட்ட விதிப்படி தொண்டர்களால்தான் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் மீற முடியாது. வைத்திலிங்கம் அதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தப் பதவிகளின் காலம் ஆறு … Read more

எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் ஜேர்மனி அரசு எடுக்கவிருக்கும் நல்ல முடிவு

எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் ஜேர்மனி அரசு எடுக்கவிருக்கும் நல்ல முடிவு  வெளிநாட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேர்மன் அரசு கடந்த மாத துவக்கத்தில் அறிவித்திருந்தது. ஜேர்மனியில் நீண்டகாலமாக இரட்டைக் குடியுரிமைக்காக காத்திருந்த வெளிநாட்டவர்களுக்கு அந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட ஏமாற்றம் ஆனால், இரட்டைக் குடியுரிமை வழங்கும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு உருவானது. CDU கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Ariturel Hack, இரட்டைக் … Read more

பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள், 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை; பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகை ஜனவரி  15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது. முன்னதாக 14-ந்தேதி போகிப் பண்டிகையும், 16ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள்  கொண்டாடப்பட உள்ளது. மொத்தம் 4 நாட்கள் விடுமுறை … Read more

அண்ணா பல்கலை முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், பி.எச்.டி மாணவர்களுக்கான மே 2022 செமஸ்டர் தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்றன.

மறைந்த மனைவியின் சிலிக்கான் சிலையுடன் வாழும் கணவர் – கொல்கத்தா அரசு அதிகாரியின் காதல் கதை!

கொல்கத்தாவைச் சேர்ந்த 65 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தபஸ் சாண்டில்யாவின் மனைவி இந்திராணி. கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது மே 4, 2021 அன்று இந்திராணி இறந்துவிட்டார். அவர் பிரிவைத் தாங்க முடியாத தபஸ் சாண்டில்யா, தனது மனைவியின் நினைவாக 2.5 லட்சம் செலவில் 30 கிலோ எடை கொண்ட சிலிக்கான் சிலை ஒன்றைச் செய்து வீட்டில் வைத்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தன் மனைவியின் சிலையை தன்னுடனே வீட்டில் வைத்துத் தங்க நகைகளை … Read more

அழகிய இளம்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி… செய்தி ஏஜன்சிகளுக்கும் உத்தரவு

ரஷ்யாவைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். இளம்பெண் அன்னா (Anna Linnikova, 22) என்ற அழகிய இளம்பெண், ரஷ்யா சார்பில் இம்மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறும் பிரபஞ்ச அழகிப்போட்டியில் பங்கேற்கிறார். அன்னாவுக்கு புடின் வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், புடின் ஆதரவு செய்தி ஏஜன்சிகள் அனைத்தும் அவருக்கு ஆதரவளிக்க கிரெம்ளின் வட்டாரம் உத்தரவிட்டுள்ளதாம். image: @ann_lnnn/EAST2WEST NEWS கோபத்தில் உக்ரைன் ஆனால், பல நாடுகள் ரஷ்யா மீது … Read more

ராகுல் காந்தி ஒரு போர்வீரன், அரசின் பலத்திற்கு பயப்படுவதில்லை! பிரியங்கா

லக்னோ: ராகுல் காந்தி ஒரு போர்வீரன், அரசின் பலத்திற்கு பயப்படுவதில்லை என உ.பி.யில் ராகுல்காந்தியுடன் பாதயாத்திரையில் மீண்டும் இணைந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா தெரிவித்தார். ராகுலின் பாரத்ஜோடோ யாத்திரை இன்று காலை டெல்லியில் தொடங்கிய நிலையில், பிற்பகல் உ.பி. மாநிலம் காஜியாபாத்தில் நுழைந்துள்ளது.  அங்குள்ள  லோனி எல்லையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் ராகுலுக்க  பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா,  கன்னியாகுமரியில் இருந்து 3,000 கி.மீ தூரம் கடந்து … Read more

"பெண் காவலருக்கே பாதுகாப்பில்ல; திமுக-வில் உள்ள ரெளடிகளுக்கு தைரியம் வந்துவிட்டது"- வானதி சீனிவாசன்

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உட்பட பலர் கலந்துகொண்ட பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெண் காவலருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் தி.மு.க-வுக்கெதிராக கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளைக் கைதுசெய்யவிடாமல் தடுத்தவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். வானதி சீனிவாசன் இது குறித்து வானதி சீனிவாசன் … Read more