Kamal: "திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?"- கமல் சொன்ன பதில்

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலரும் பல கட்சிகளுக்குத் தவினர். இத்தகைய சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் பல நிகழ்ச்சிகளில், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்று மாநிலங்களவையில் … Read more

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை! இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு…

டெல்லி: ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை  என இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலந்து பைல்ஸ்  என்ற பெயரில் கர்நாடகாவில் ஒரு தொகுதியில்,  6018 வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ராகுல்கந்தி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவரது குற்றச்சாட்டு, தவறானவை மற்றும் … Read more

உத்தரகாண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்

ராஞ்சி, உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங் கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 15க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் .சாமோலி மாவட்டத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 6 வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்பட்டபோது ஏழு பேர் வீடுகளுக்குள் … Read more

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.! | Automobile Tamilan

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய ஜிஎஸ்டி 2.0 வரி விலை குறைப்பு பட்டியலை வெளியிட்டு ஒவ்வொரு மாடல்களின் ஆரம்ப விலையை உறுதிப்படுத்தியுள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்பே அறிவித்த விட்ட நிலையில், தற்பொழுது மாருதி சுசூகியும் இணைந்துள்ளது. சிறிய கார்களுக்கு 18 % மற்றும் மற்ற ஆடம்பர வாகனங்களுக்கு 40 % என மாற்றப்பட்டுள்ளதால், மாருதி நிறுவனம் ரூ.46,400 முதல் அதிகபட்சமாக எஸ்-பிரெஸ்ஸோ ரூ.1,29,600 வரை குறைந்துள்ளது. பிரசத்தி … Read more

தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் – ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!

காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்படி உருவானது என்பது குறித்த பரிணாம ரீதியான விளக்கத்தையும் இந்த ஆய்வு வழங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, உகாண்டா மற்றும் ஐவரி கோஸ்ட் காடுகளில் இந்த ஆய்வை நடத்தியது. அங்குள்ள சிம்பன்சிகள் விரும்பி உண்ணும் அத்திப்பழங்கள், பிளம்ஸ் போன்ற … Read more

தனியார் வளாகங்களை விட மலிவான வாடகையில் அமைக்கப்படும் TNHB வணிக வளாகங்கள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), சென்னை முழுவதும் அதன் புதிய வணிக வளாகங்களை மிகவும் வசதியான மையங்களாக அமைத்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சதுர அடி ரூ. 88 முதல் ரூ. 118 வரை வாடகைக்கு வழங்கிவருகிறது. இது தனியார் வளாகங்களுக்கு கொடுக்கும் வாடகையை விட 20% குறைவாக உள்ளதை அடுத்து EPFO ​​(ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) மற்றும் GST உள்ளிட்ட துறைகள் தங்கள் அலுவலகங்களை TNHB வணிக வளாகங்களுக்கு … Read more

“அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா'' – எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களையே ஆளும் கட்சியான உடன் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றனர். திமுக ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு. நான் முகத்தை துடைத்ததை… மறைத்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா … Read more

விரைவில் ஹைட்ரஜன் குண்டு: கர்நாடகத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்  ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் அரசியலமைப்பை அழித்து ஜனநாயகத்தைக் கொலை செய்பவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்” என்று கூறினார்.   பீகார் தீவிர வாக்காளர் சீர்திருத்தத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் சீர்திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு … Read more

நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 59 வயதான காந்திராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் தனது வீட்டில் இருந்து தினமும் சொந்த காரில் பணிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, நேற்று இரவு அவர் பணிமுடிந்து நெல்லை நகரம் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு … Read more

21ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள்  பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் வசதிக்காக, விடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, பண்டிகை காலங்கள்,  வார விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்​பாக அரசு … Read more