அரவிந்தரின் சக்தியை இளைஞர்கள் உணர வேண்டும்| Dinamalar

புதுச்சேரி: ”அரவிந்தரின் யோக சக்தி, ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல; அது அனைவரையும் இணைக்கும் சக்தியாக உருவாகும்,” என, பிரதமர் மோடி பேசினார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த அரவிந்தரின் பிறந்த நாள் விழாவில், காணொலியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரவிந்தர் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு பேசியதாவது: புதுச்சேரி மண்ணில் அரவிந்தரின் நினைவை போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு புதிய உணர்வை, சக்தியை … Read more

ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் தடைப்பட்ட உணவு தானிய ஏற்றுமதி: பல டன்கள் விவசாய பொருட்கள் வெளியேற்றம்

ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனைகளை தொடர்ந்து உணவு தானிய ஏற்றுமதி இடைநிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் மீண்டும் உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் துறைமுகங்களை விட்டு வெளியேற தொடங்கியுள்ளது. இடைநிறுத்தப்பட்ட தானிய ஏற்றுமதி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக … Read more

அறங்காவலர் நியமனம்: அரசுக்கு நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி :கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் 30 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஆனால், இந்தக் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில், மாநில அரசு அக்கறை காட்டவில்லை’ என கூறியிருந்தார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நேற்று இந்த மனு மீது விசாரணை … Read more

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் விடுதலை!

பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து ஸ்பெயின் நீதிமன்றம் விடுவிதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு கடந்த 2009-2013 காலகட்டத்தில் பிரேசிலின் கிளப் அணியான சண்டோசில் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாடினார். அதன் பின்னர் பார்சிலோனா அணிக்கு மாறிய நெய்மர், 2017ஆம் ஆண்டு முதல் பாரிஸ் சையிண்ட் ஜேர்மைன் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். அவர் சாண்டோஸ் அணியில் இருந்தபோது அவரது விளையாட்டு உரிமைகளில் 40 சதவீதத்தை, பிரேசிலிய விளையாட்டு முதலீட்டு நிறுவனமான டிஐஎஸ் வைத்திருந்தது. … Read more

சட்டவிரோத பண பரிமாற்றம் தமிழக அமைச்சருக்கு சிக்கல்| Dinamalar

புதுடில்லி:சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத் துறைக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத் … Read more

குரோஷியாவை சிதறடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணியை மொத்தமாக சிதறடித்து ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா. மெஸ்ஸி முதல் கோலை பதிவு செய்ய நடக்கவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் பிரான்ஸ் அல்லது மொராக்கோ அணியுடன் ஞாயிறன்று அர்ஜென்டினா மோதும். @getty பரபரப்பான ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி முதல் கோலை பதிவு செய்ய, தொடர்ந்து ஜூலியன் அல்வாரெஸ் இரண்டு கோல்களை பதிவு செய்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா … Read more

சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து ரூ.30 லட்சம், நகைகள் கொள்ளை

கோல்கட்டா :கோல்கட்டாவில் தொழிலதிபர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் போல் நடித்து, 30 லட்சம் ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள போவனிபோர் பகுதியில் தொழிலதிபர் சுரேஷ் வாத்வா, 60, வசித்து வருகிறார். இவர் வீட்டில் நேற்று நுழைந்த ஏழு பேர் கும்பல், தங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் எனவும், ‘ரெய்டு’ நடத்த வந்திருப்பதாகவும் கூறி, 30 லட்சம் ரூபாய் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அள்ளிச் … Read more

பிரித்தானியாவில் உறைந்த ஏரியில் உயிருக்கு போராடிய சிறார்கள்… இரக்கமே இல்லாமல் வீடியோ பதிவு செய்த மக்கள்

பிரித்தானியாவில் உறைந்த ஏரியில் தவறி விழுந்து உதவி கேட்டு கதறிய சிறார்களை காப்பாற்ற அப்பகுதி மக்கள் எவரும் முயற்சிக்கவில்லை என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சிறார்கள் கதறும் காட்சி குறித்த சிறார்கள் கதறும் காட்சிகளை அப்பகுதியில் சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் தற்போது வெளியிட்டுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. @PA அந்த காணொளியில், உறைந்த ஏரியில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்த 8, 10 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறார்களும் உதவிக்கு கதறுவது … Read more

2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து: குரோஷியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா – அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குரோஷியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது.

மாயமான மலேஷிய விமானம் புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது திட்டமிட்டு விமானி மூழ்கடித்ததாக சந்தேகம்| Dinamalar

கோலாலம்பூர் :எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் எம்.எச்., – ௩௭௦ விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், ௨௦௧௪ மார்ச் ௮ம் தேதி கடல் பகுதிக்கு மேல் பறந்த போது மாயமானது. இதில், ௨௩௯ பேர் இருந்தனர்; பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.மாயமான விமானத்தை தேடும் … Read more