அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக 26ந்தேதி பதவி ஏற்கிறார் மல்லிகார்ஜூன கார்கே…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரும் 26ந்தேதி தலைவராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17ந்தேதி நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே  7,897 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் கட்சி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நேரு-காந்தி குடும்பத்திற்கு வெளியே இருந்து அதன் முதல் தலைவரை புதன்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது. கார்கே  ராஜதந்திரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய … Read more

தமிழ்நாடு முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு அனுமதி: தீயணைப்பு துறை டிஜிபி தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை டிஜிபி பி.கே.ரவி தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 861 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி 6,673 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர், மேலும் மாணவர்களுக்கு 1,610 தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது என்று தீயணைப்புத்துறை டிஜிபி கூறியுள்ளார்.

ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு!| Dinamalar

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று(அக்.,20) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சூரத்தில் இருந்து 61 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 7 கிமீ ஆழத்தில் நிலவியது என தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று(அக்.,20) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சூரத்தில் இருந்து 61 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக … Read more

உக்ரைனை விட்டு இந்தியர்கள் விரைவில் வெளியேற இந்தியா கோரிக்கை

கியே இந்தியா உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு புதிய பயண ஆலோசனையை வழங்கியுள்ளது, கியேவில் உள்ள இந்திய தூதரகம். பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், சமீபகாலமாக அதிகரித்து வரும் போர்களை’ மேற்கோள்காட்டி உள்ளது. பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், உக்ரைன் முழுவதும் சண்டைகள் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்கள் உட்பட இந்தியர்கள், கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று வெளியிடப்பட்ட பொது … Read more

ஸ்மார்ட்போன் வாங்க ரத்தம் விற்க முயற்சி; அதிரவைத்த 12-ம் வகுப்பு சிறுமி!

மின்னணு தொழில்நுட்பங்கள் பெரும் வளர்ச்சியடைந்த இந்தக்காலத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிடித்திருக்கும் ஒன்றுதான் ஸ்மார்ட்போன். ஆனால் வசதிபடைத்தவர்களிடம் இலகுவாக சென்று சேரும் இந்த ஸ்மார்ட்போன், ஏழைகளுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. ஸ்மார்ட்போன் இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுமியொருவர், ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ரத்தத்தை விற்க முடிவுசெய்து மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 12-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி, தெற்கு தினாஜ்பூரிலுள்ள தபன் காவல் நிலையப் பகுதியின் கர்தாவில் … Read more

234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகளையும், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலினிடம், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தை தொடங்கிடும் வகையில் மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை (User ID and … Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த தனி நபரை நியமிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த 044 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வாழ்க்கை முறையில் மாற்றம்: பிரதமர் அறிவுரை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: சுற்றுச்சூழலை பாதுகாக்க, நமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் ஏக்தா நகரில், ஒற்றுமை சிலை பகுதியில் ‘மிஷன் லைப்’ இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடியும், ஐக்கிய நாடுகள் பொது சபையின் பொது செயலாளர் ஆன்டோனியோ குட்டெரஸ்சும் துவக்கி வைத்தனர். இந்த விழாவில் ஆன்டோனியோ குட்டெரஸ் பேசுகையில், நமது கிரகத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக தீர்வு காண தனிநபர்களும், சமுதாயமும் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,36,517 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,510- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,82,064- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது … Read more

தனியார் பள்ளிக்கு மேசைகளை எடுத்துச்செல்ல அரசுப்பள்ளி மாணவர்கள்; டிராக்டர் பயணம் – இருவர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி எனும் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த 17-ம் தேதி மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் மேசைகள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றி இறக்குவதற்கு, 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அம்மாணவர்கள் டிராக்டரின் பின்பகுதிகளில் நின்றபடி மேசைகளை பிடித்தவாறும், என்ஜின் பகுதியில் சக்கரத்திற்கு மேற்பகுதியில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் … Read more