டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் உதவி…

சென்னை: தலைமைச்செயலகம் வந்துகொண்டிருந்தபோது, சென்னை  அண்ணா சாலையில் டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உதவி செய்தார்.  விபத்தில் சிக்கியவரை மீட்டு பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அண்ணா சாலை வழியாக அலவலகம் வந்துகொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போது,  டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவரை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய் பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி வந்து விபத்தில் சிக்கியவருக்கு உதவியுள்ளார்.  வாகனம் அண்ணாசாலையில் டிஎம்எஸ் அருகே வந்துகொண்டிருந்தபொது சாலையில் இருசக்கர வாகனம் … Read more

நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி தீபாவளி சிறப்பு ரயில்

சென்னை: நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 3 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது; இதற்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,338 கோடி அபராதம்| Dinamalar

புதுடில்லி : ‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’ இயங்குதளங்களில் இதர போட்டியாளர்களுக்கு சரிசமமான வாய்ப்பு அளிக்காமல் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டி, ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 1,338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’களில் தரவிறக்கம் செய்யப்படும் அனைத்து செயலிகளையும் கூகுள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் புதிதாக வாங்கும் ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை அவர்கள் நீக்கவும் முடியாது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அளித்த … Read more

ஒரு பனையேறியின் கனிவான கோரிக்கை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் பனைக்கு கற்பக விருட்சம் என்ற பெயர் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் மேலான பனை மரங்கள் இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கணக்கிட முடியாத அளவுக்கு, பனை மரங்கள் செங்கல் சூளைக்கும், வீட்டுமனைகள் கட்டுவதற்கும் வெட்டப்பட்டதால், இப்போது … Read more

தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி! டிஜிபி எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும்  டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். kமாநிலம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக, மின்கட்டணம் கட்டவில்லை, அதனால், உங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. உடனே கீழேஉள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள், அல்லது இணையதளத்தை தொடர்பு கொள்ளுங்கள் என பலருக்கு குறுஞ்செய்தி (மெசேஜ்) வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருவதுடன், இதுதொடர்பாக மின்வாரியத்திலும் புகார் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், டிஜிபி … Read more

தீபாவளியை முன்னிட்டு பொள்ளாச்சி சந்தையில் ஆடு, சேவல் விற்பனை அமோகம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியில் நேற்று வாரந்தையின் போது, தீபாவளியை முன்னிட்டு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆடு மற்றும் பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனை வாங்க, வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒருபகுதியில், வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதில், மாட்டுச்சந்தை கூடும்போது, அதன் அருகேயே ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், வரும் 24ம் தேதி  தீபாவளி பண்டிகை … Read more

சிவனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார்| Dinamalar

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு பாரம்பரிய ஆடையையும் வழங்கினார். மலைவாசிகளின் பாரம்பரிய உடையில் கலக்கும் மோடி கேதார்நாத்தில் பூஜை செய்து வழிபாடு ………. புரோகிதர் மந்திரம் கூற தொடர்ந்து பிரதமர் மோடி சிவனை வழிப்பட்டார். சிறப்புபூஜையும் நடத்தினார். கோயிலுக்கு வந்த மோடி, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய உடையான ‘சோழா டோரா’ அணிந்திருந்தார். மோடி, இதற்கு முன்னர் ஹிமாச்சல பிரதேசத்திற்கு வந்த போது, சம்பா … Read more

பர்சனல் லோன் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.2 லட்சம் சுருட்டல்; டெல்லி கும்பல் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கனிக்குமார். இவரது தொலைபேசி எண்ணுக்குக் கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதில், ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும் லட்சக்கணக்கில் தனி நபர் கடன் கொடுக்கிறோம் என்று வந்திருக்கிறது. உடனே, அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட கனிக்குமார், தனக்கு ரூபாய் ஐந்து லட்சம் தனி நபர் கடன் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து, இரண்டுக்கும் மேற்பட்ட எண்களில், `தனலெட்சுமி பைனான்ஸில் இருந்து பேசுகிறோம்…’ என்று … Read more

பிரதமர் போட்டியில் களமிறங்கும் போரிஸ் ஜான்சன்: ரிஷி சுனக்குக்கு எதிராகவா கூட்டணியா?

பலரும் எதிர்பார்க்காத விதமாக பிரதமர் போட்டியில் களமிறங்குகிறார் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவர் ரிஷி சுனக்குக்கு போட்டியா அல்லது அவருடன் கூட்டணி அமைப்பாரா? பிரதமர் இல்ல பார்ட்டிகள் முதல், பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவுக்கான அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அடுத்த பிரதமருக்கான போட்டியில் பங்கேற்பவர்கள், 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என புதிய விதி பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போரிஸ் ஜான்சனுக்கு அவ்வளவு … Read more

அலகாபாத் : டெங்கு காய்ச்சலுக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றிய மருத்துவமனைக்கு சீல்..

பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவருக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜீஸை டியூப் வழியாக உடலுக்குள் செலுத்தியதால் அந்த நபர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த மருத்துவமனை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு நேற்றிரவு சீல் வைக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சாத்துக்குடி சாற்றை பிளேட்லெட்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்றுவரும் மோசடி கும்பல் குறித்து தகவல் கிடைத்தது. பிரயாக்ராஜ் நகரின் பம்ரௌலி பகுதியில் வசிக்கும் பிரதீப் … Read more