காஷ்மீரில் 36 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு| Dinamalar

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஊழல், பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டிற்குள்ளான 36 போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு நிர்வாகம் கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவலத்துறையில் 36 போலீஸ் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது. இது தொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியாக நடத்திய விசாரணையில், இவர்கள் பணிக்கு சரிவர வராமல் அலட்சியம் காட்டியதும், அடிக்கடி விடுமுறை எடுத்து வருவதும் தெரியவந்தது, இவர்கள் சிலர் ஊழலில் ஈடுபட்டதும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு … Read more

நடிகைகள் முதல் பெண் தலைவர்கள் வரை…ஒற்றை நாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடியை வெட்டி போராட்டம்

ஈரானின் கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக போராடிய மஹ்சா மோகோய்(18) சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அபிர் அல்-சஹ்லானி தலைமுடிகளை வெட்டி போராட்டம். ஈரான் அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஈரானில் பெண்கள் தலைமறைப்புகளை (ஹிஜாப்) அணிவது கட்டாயமாக்கப்படுவதாக ஈரானின் பழமைவாத அரசு  அறிவித்ததை தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் போராட்டம் வெடித்தது. செப்டம்பர் 13 அன்று தெஹ்ரானில் மஹ்சா அமினி … Read more

பிரதமரை அவதுாறாக பேசிய குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கைது| Dinamalar

புதுடில்லி பிரதமர் மோடி மற்றும் பெண்கள் குறித்து அவதுாறாக பேசிய குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இட்டாலியாவை புதுடில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர்கோபால் இட்டாலியா பேசும் இரண்டு, ‘வீடியோ’ க்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதில், முதல் வீடியோவில் அவர் பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். இரண்டாவது வீடியோவில், ‘சுரண்டலுக்கு அடிப்படை காரணமே கோவில்களும், இதிகாச கதைகளும் தான். ‘பெண்கள் மரியாதையுடன் … Read more

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல் நடத்திய வட கொரியா: அணு ஆயுத பயிற்சிகளையும் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு

வட கொரியா-வால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பான் கிழக்கு கடலில் விழுந்தது. பல ஏவுகணைகளை ஏவி இருக்கலாம் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கருத்து. வட கொரியா வியாழக்கிழமையான இன்று அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கிழக்கு கடலில் ஏவியதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியா-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நாளுக்கு முன்னதாக, வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் அடையாளம் அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தினர்.  இதனை … Read more

கேரள நரபலி கொடூரர்களுக்கு 1 2 நாள் போலீஸ் சாட்டை!| Dinamalar

கொச்சி :தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி உட்பட மூன்று பேரை, 12 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மூவர் கைது இங்கு, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்த்ரீகத்தை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை … Read more

சுரங்க மாஃபியாவைப் பிடிக்கப்போன இடத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; பாஜக தலைவர் மனைவி பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில், சுரங்க மாஃபியாவைச் சேர்ந்த குற்றவாளியை, போலீஸார் பிடிக்கப்போன இடத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர் பா.ஜ.க தலைவரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. முதலில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று, சுரங்க மாஃபியாவான ஜாஃபர் என்பவரைக் கைதுசெய்யத் தேடலில் ஈடுபட்டிருக்கிறது. பின்னர் அந்த நபர் உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரத்பூர் கிராமத்தில், பா.ஜ.க தலைவர் குர்தாஜ் புல்லரின் வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த … Read more

பெண் பத்திரிகையாளர் மீது குற்றப்பத்திரிகை| Dinamalar

புதுடில்லி :பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 2.69 கோடி ரூபாய் பணத்தை, பத்திரிகையாளர் ரானா அயூப் தன் சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ரானா அயூப், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக, 2020 ஏப்., முதல் மூன்று நிதி திரட்டும் பிரசாரங்களை மேற்கொண்டார். ‘கீட்டோ’ எனப்படும், நிதி திரட்டும் இணையதளம் வாயிலாக இந்த பணியை மேற்கொண்டார். இதில் திரட்டப்படும் பணம், குடிசை பகுதியில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகளின் … Read more

“சட்டப்பிரிவு 66A-ன் கீழ் இனி வழக்கு பதிவு கூடாது..!" – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?

தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 A-ன் கீழ் கணினி, தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக மற்றவர்களை தாக்கிப் பேசுவது, அச்சுறுத்தும் பதிவுகள், பொய்யான தகவலை பதிவிடுவது இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். அதை மீறுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறிப்பிட்ட தொகை அபராதமாகவும் விதிக்கப்படும். கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. காரணம், நாட்டின் பாதுகாப்பையோ அல்லது சமூகத்தின் அமைதியை சீர்குலைக்காத தனிநபரின் கருத்து எப்படி தவறாகவும், மேலும் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யும் … Read more

உக்ரைனை நோட்டோ அனுமதித்தால்…மூன்றாம் உலக போர் நிச்சயம்: ரஷ்யா எச்சரிக்கை

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நோட்டோவுடன் உறுப்பினர் ஆவதற்கான ஆச்சரியமான முயற்சியை அறிவித்தார். உக்ரைனை நேட்டோவில் அனுமதிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்.   உக்ரைன் நோட்டோவில் இணைவது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் எச்சரித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக, ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை தன்னுடன் இணைத்து கொண்டாதாக ஜனாதிபதி புடின் அறிவித்தார்.  ஜனாதிபதி … Read more

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு பெரிய அமர்வில் மீண்டும் விசாரணை| Dinamalar

புதுடில்லி :வகுப்பறைகளில் மாணவியர், ‘ஹிஜாப்’ அணிவதற்கு தடை விதிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வின் இரண்டு நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இதையடுத்து, அதிக நீதிபதிகள் உடைய அமர்வில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கல்வி நிறுவனங்களில் மாணவ – – மாணவியர் ஆடை அணிவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப் பட்டது. … Read more