பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கத்தி குத்து சம்பவம்: 25 வயது இளைஞர் கைது

மத்திய லண்டனில் நடத்தப்பட்ட கத்தி குத்து சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது. புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உதவுவதற்காக சாட்சிகளிடம் தொடர்ந்து முறையீடு. பிரித்தானியாவில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தின் போது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய லண்டனின் பிஷப்ஸ்கேட்டில் (Bishopsgate) கடந்த வியாழக்கிழமை காலை 9:45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தி குத்து தாக்குதல் அரங்கேறியது. இந்த தாக்குதலில் மூன்று கத்தி குத்துகள் நடந்ததாகவும், ஒருவர் தரையில் தள்ளப்பட்டதாகவும் லண்டன் நகர காவல் துறைக்கு வியாழன் … Read more

ஐபிஎல் போட்டிகளில் விளையாடாதீர்கள்! ஜாம்பவான் வீரர்

கிரிக்கெட்டை ரசித்து விளையாடினால் மன அழுத்தம் இருக்காது என கபில் தேவ் தெரிவித்துள்ளார் இந்திய வீரர்கள் அழுத்தத்தை தவிர்க்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க வேண்டும் – கபில் தேவ் ஐபிஎல் போட்டிகள் வீரர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஜாம்பவான் வீரர் கபில் தேவ் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி தொடராக உருவெடுத்துள்ளது. இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் அதிக அளவில் … Read more

சரக்கு போக்குவரத்து ரயில் தடங்களில்1,000 பாலங்கள் அமைக்க திட்டம்| Dinamalar

புதுடில்லி, கிழக்கு மற்றும் மேற்கு ரயில்வேயின் பிரத்யேக சரக்கு போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, 1,000 மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாலங்கள் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாபின் லுாதியானா முதல், மேற்கு வங்கத்தின் தன்குனி வரையில், 1,875 கி.மீ., துாரத்திற்கு பிரத்யேக சரக்கு போக்குவரத்து வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள உத்தர பிரதேசத்தின் தாத்ரி முதல், மும்பையின் ஜவஹர்லால் நேரு துறைமுகம் வரையிலான 1,506 … Read more

கண்ணிவெடிகளை மிதித்த ரஷ்ய ராணுவ வீரர்கள்: அடுத்த நொடி அரங்கேறிய பயங்கரம்! வீடியோ ஆதாரம்

தரைக் கண்ணிவெடிகளை மிதித்ததால் வெடித்து சிதறிய ரஷ்ய வீரர்கள். இணையத்தில்  வெளியான வெடிப்பு காட்சிகளால் பரபரப்பு. போர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்ய துருப்புகளின் சிறிய குழு ஒன்று, உக்ரைன் மறைத்து வைத்து இருந்த கண்ணிவெடிகளில் பட்டுச் சிதறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.  ரஷ்யாவையும், கிரிமியாவையும் இணைக்கும் The Kerch பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் மீண்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. பாலத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உக்ரைன் தலைநகர் … Read more

2 பயங்கரவாதிகள்சுட்டுக் கொலை| Dinamalar

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தங்பவா என்ற பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது சுட்டனர். உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். நேற்று அதிகாலை … Read more

வாக்குறுதியை தவறவிட்டதால் சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி: ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்த புதிய தகவல்!

WellChild விருது விழாவின் வெற்றியாளர்களுடன் இளவரசர் ஹரி வீடியோ அழைப்பில் பேசினார். விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு வெற்றியாளர்களிடம் மன்னிப்பையும் இளவரசர் ஹரி கேட்டுக் கொண்டார்.   WellChild விருது விழாவின் வெற்றியாளர்களுடன் வீடியோ அழைப்பில் பேசிய இளவரசர் ஹரி, தனது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்த தகவலை வழங்கியுளார். WellChild என்ற நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேசிய தொண்டு நிறுவனம், கடந்த மாதம்  லண்டனில் விருது விழா ஒன்றை நடத்தியது. அதில் இளவரசர் ஹரி … Read more

அனந்தபத்மநாப சுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டு வாழ்ந்த சைவ முதலை இறப்பு| Dinamalar

காசர்கோடு:கேரளாவில், காசர்கோடு அனந்தபத்மநாப சுவாமி கோவில் குளத்தில், ௭௦ ஆண்டுகளாக சைவ உணவை மட்டும் உண்டு வாழ்ந்து வந்த தெய்வீக முதலை நேற்று இறந்தது. கேரளாவில் காசர்கோடு அருகே கும்ப்ளா என்ற இடத்தில் அனந்தபத்மநாப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலின் மூலஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்குச் சொந்தமான குளத்தில், ௭௦ ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பபியா என்ற முதலை நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது. எப்போதும் குளத்தில் … Read more

உக்ரைனை உலுக்கிய ஏவுகணைகள்…ரஷ்ய எல்லையை சீண்டியதால் பதிலடி: ஜனாதிபதி புடின் எச்சரிக்கை

ரஷ்யாவை சீண்டியதால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது என புடின் அறிவிப்பு. ரஷ்யாவில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள மேலும் முயற்சித்தால் பதில் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை. கிரிமியா பாலம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார். ரஷ்யாவையும், கிரிமியாவையும் இணைக்கும் The Kerch பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, திங்களன்று உக்ரைனின் எரிசக்தி, இராணுவம் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கு எதிராக  ரஷ்யா … Read more

பசு தேசிய விலங்கா? பொதுநல மனு தள்ளுபடி!| Dinamalar

புதுடில்லி, பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும்படி மத்திய அரசை உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தன்னார்வ தொண்டு நிறுவனமான கோவன்ஷ் சேவா சதன் மற்றும் சில அமைப்புகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் அபேய் எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை நேற்று விசாரித்தது. அப்போது மனுதாரர்களின் வழக்கறிஞர், ‘நாட்டில் பசுக்கள் பாதுகாக்கப்படுவது மிகவும் அவசியம். எனவே, பசுவை … Read more

சாத்தூர்: ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பச்சிளம் குழந்தை திடீர் மரணம்!- உறவினர்கள் முற்றுகை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (32). இவருடைய மனைவி முத்துகனி (32). இந்தத் தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் முத்துகனி இரண்டாவதாக கருவுற்றிருந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக தாயில்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உள்நோயாளியாக சேர்ந்திருக்கிறார். குழந்தை இதனையடுத்து 8-ம் தேதி (சனிக்கிழமை) முத்துக்கனிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. தாய்-சேய் இருவரும் … Read more