சிதம்பரம்: பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! – அதிர்ச்சி வீடியோ

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதி வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், நேற்று நள்ளிரவு மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவர் தாலி கட்டும் அதிர்ச்சி வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில், சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலைக்கு அருகிலுள்ள சிறிய பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவி ஒருவர் சீருடையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் மாணவர் ஒருவரும் அமர்ந்திருக்கிறார். அவர்களை வீடியோ எடுக்கும் சிலர், ”கட்டுயா… கட்டுயா…” என்று சொல்ல, அந்த மாணவர் தனது பாக்கெட்டில் இருந்து மஞ்சள் … Read more

சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை சுற்றி வளைத்த பிரித்தானிய கடற்படை: படகில் எவ்வளவு போதைப்பொருள் இருந்தது தெரியுமா?

சந்தேகத்துக்குரிய வகையில் பயணித்த படகு ஒன்று பிரித்தானிய கடற்படை சுற்றி வளைத்தது. அதில், 870 கிலோ போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் சந்தேகத்துக்குரிய வகையில் படகு ஒன்று செல்வதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய கடற்படை, ஹெலிகொப்டர் ஒன்றை அந்த இடத்துக்கு அனுப்பியுள்ளது. படகை ட்ராக் செய்த ஹெலிகொப்டர் அனுப்பிய தகவலின்பேரில் கடற்படையினர் அந்த படகை சுற்றி வளைத்துள்ளனர். MINISTRY OF DEFENCE  அந்த படகை சோதனையிட்டபோது, அதில் 870 கிலோ போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் … Read more

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முக்கிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியாவில் புதிதாக 2,424 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,424 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,424 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,14,437 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,923 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,57,544 ஆனது. தற்போது 28,079 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 3 பேர் … Read more

“இதுவரை ரயில்ல போனதே இல்ல; டீச்சருக்கு ரொம்ப தேங்க்ஸ்!"- நெகிழ்ந்த மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் `இல்லம் தேடிக் கல்வி’ மையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களின் பணி அப்பகுதி மக்களின் பாராட்டுதலுக்கும் உள்ளாகியிருக்கிறது. மாணவர்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் அக்கறையினால் முதல் பருவத்தேர்வு விடுமுறையிலும், அவர்களை கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பதற்காக அறிவுச் சார் சுற்றுலா, அரசு அலுவலக பணி நடைமுறை அறிதல், இன்பச்சுற்றுலா என ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்கு பல்வேறு சமூக சிந்தனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதில் முதல் குழுவாக, ஸ்ரீவில்லிபுத்தூர் … Read more

தொலைதூரக்கல்வி மோசடி சான்றிதழ்: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் உள்பட 5பேர் சஸ்பெண்டு

சென்னை: தொலைதூரக்கல்வி மூலம் படித்ததாக மோசடி சான்றிதழ் வழங்கிய விவகாரம் தொடர்பாக  சென்னை பல்கலைக்கழக உதவி பதிவாளர் உள்பட 5பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு பணியில் உள்ளவர்கள், வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள், செல்வந்தர்கள், வியாபாரிகள் என பல தரப்பினர் தொலைதூரக் கல்விமூலம் படித்து பட்டங்களை பெற்று வருகின்றனர். ஆனால், கல்லூரி சென்று நேரடியாக கல்வி பயில்பவர்களுக்கும், தொலைதூரக் கல்வி மூலம் அஞ்சல் வழி கல்வி பயில்வர்களுக்கும் இடையே பெருத்த வேறுபாடு … Read more

இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்டாய இந்தியை புகுத்தி ஒன்றிய அரசு இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம். இந்தியை கட்டாயமாக்குவதை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரை காத்திட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி … Read more

அடையாளம் தெரியாத ஆண் உடல் : போலீசார் விசாரணை| Dinamalar

புதுச்சேரி : சாலையோரத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தவளக்குப்பம் மெயின் ரோட்டில், நேற்று முன்தினம் காலை 6.50 மணிக்கு 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து இறந்தவர் யார், எப்படி இறந்தார் என்பது … Read more

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரின் உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22 -ம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முலாயம் சிங் யாதவ் அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து … Read more

உபியின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்…

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் உடல்நிலை கடந்த ஒரு வாரமாக கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மூத்த அரசியல்வாதியும்,  உ.பி. மாநில முதல்வருமான 82வயது முலாயம்சிங் யாதவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு … Read more