நெருங்கும் சுதந்திர தினம்… உக்ரைனில் முக்கிய நாட்டின் தூதரகம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை

அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுத்துள்ளது கடுமையான தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகளை ரஷ்யா முடுக்கிவிட்டுள்ளது உக்ரைன் நாடு சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில் ரஷ்ய தரப்பு கொடூரமான தாக்குதலை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் செயல்பட்டுவரும் அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ரஷ்ய துருப்புகள் எந்த நேரத்திலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளது. @reuters ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தங்களுக்கு … Read more

இடைத்தரகர் சுகேஷை சிறை மாற்ற உத்தரவு| Dinamalar

புதுடில்லி : பணப் பரிமாற்ற மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை, டில்லி திஹார் சிறையிலிருந்து மண்டோலி சிறைக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறித்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியபால் ஆகியோர், டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதி மீது மேலும் பல மோசடி வழக்குகளும் உள்ளன. இந்நிலையில், திஹார் … Read more

கர்நாடகத்தில் புதிதாக 1,465 பேருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 24,564 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 987 பேர், மைசூரூவில் 99 பேர், ஹாசனின் 73 பேர் உட்பட புதிதாக 1,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பல்லாரி, தார்வாரில் தலா ஒருவர் இறந்தனர். இதுவரை 40 லட்சத்து 43 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 40 ஆயிரத்து ஆயிரத்து 176 பேர் உயிரிழந்துள்ளனர். 1,295 பேர் நேற்று குணம் அடைந்தனர். 39 லட்சத்து 92 … Read more

இந்திய ஊழியர்களை வெளியேற்றிய கத்தார் அரசு.. என்ன நடந்தது..?!

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் சம்பள பாக்கியை கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களைத் தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளது கத்தார் அரசு. வளைகுடா நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது வெளிநாட்டு ஊழியர்களுக்குப் போதுமான வசதிகள் செய்து கொடுக்காமல், ஊதியமும் முழுமையாகக் கொடுக்காமல் இருக்கும் பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்தாலும், தற்போது பெரிய அளவில் வெடித்துள்ளது. வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற பல ஆயிரம் பேரின் வாழ்க்கை மேம்பட்டு உள்ளது, ஆனால் … Read more

சருமத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள ஆசையா? இதோ சில எளிய டிப்ஸ்

பொதுவாக பலருக்கு சருமத்தை பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை காணப்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை தான் நம்மில் பலர் வாங்கி போடுவதுண்டு. இருப்பினும் இது தற்காலிக தீர்வினை தான் தரும். இயற்கை முறையில் சருமத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள வேண்டும். இதற்கு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். ஆப்பிள் துண்டுகளை நன்றாக அரைத்து தேன், ஓட்ஸ் பவுடர், ஆகியவற்றுடன் சேர்த்து க்ரீம் போல ஆக்கி … Read more

'ஐ.என்.எஸ். விக்ராந்த்' போர்கப்பலை செப். 2-ம் தேதி நாட்டு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி, முதல் முறை யாக உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர் கப்பலை நம் கடற்படை உருவாக்கி உள்ளது.மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மொத்தம் 860 அடி நீளம் 203 அடி அகலம் உடைய இந்த கப்பல் 40 ஆயிரம் டன் எடையுடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டம் கடந்த ஆக.04-ம் தேதி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ‘ இந்நிலையில் வரும் … Read more

சென்னையில் ஆப்பிள் 14 உற்பத்தியா.. கடுப்பில் சீனா.. ஏன் தெரியுமா?

ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது ஐபோன் 14 உற்பத்தியினை இந்தியாவில் விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஐபோன் 14, சீனாவிலேயே உற்பத்தி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போது சீனாவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேச சமயம் சீனாவில் உற்பத்தியினை நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் ஷாக்..! சீனாவுக்கு போட்டி … Read more

திருச்சி – ஊறும் வரலாறு – 5: ரயில் புராணம்!

‘ஒரு புதிய வரவை’ மக்கள் வரவேற்பதன் அழகு வார்த்தையில் தெரியும். ‘ரயில்’ புதியவரவாக புகையோடு ஊருக்குள் வந்தது. அது வந்து நின்ற இடத்தை நாம் ‘புகைவண்டி நிலையம்’ என்றோம். எளிய கிராமத்து மக்கள் சர்வசாதாரணமாக ரயில் வந்து நிற்கும் இடத்தை ‘ரயிலடி’ என்றார்கள். அவர்களுக்குப் பழக்கமான சத்திரம் சாவடி என்பதுபோல. இதுதான் ஒரு அறிவியல் வரவு மக்கள்மயப்பட்டதன் அடையாளம். இவ்வளவுக்கும் அவர்கள் ஊருக்கு பஸ் அடிக்கடி வருகிறது. அது நிற்கும் இடத்தை யாரும் ‘பஸ்ஸடி’ என்று சொல்வதில்லை. … Read more

அது தவறு தான்… இன்னொரு விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர் சன்னா மரின்

பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டு பிரதமர் சன்னா மரின் புகைப்படங்கள் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்படுவதாக வெளியான புகைப்படத்திற்கு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்துகொண்டு விருந்து கொண்டாட்டங்களில் அதிகமாக ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் விருந்தினர்கள் சிலர் … Read more

யூரோ நாணயத்திற்கே இந்த நிலையா..? ஐரோப்பா-வின் மோசமான காலகட்டம்..!

பொருளாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகித உயர்த்தி வருகிறது. இதற்கிடையில் சீனா பொருளாதாரத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்று வட்டியைக் குறைத்து உள்ளது. இதன் மூலம் உலகப் பொருளாதாரம் வலுவிழக்கும் என்ற அச்சம் அதிகமாகி சர்வதேச முதலீட்டாளர்கள் அபாயகரமான அல்லது சரிவு ஏற்படும் என அதிகளவில் நம்பும் சந்தைகளில் இருந்து முதலீடுகளை வெளியேற்றி வருகிறது. இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய … Read more