கர்நாடகாவில் தொடர் மழை மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு… கே.ஆர்.எஸ். அணை நாளை திறக்கப்பட உள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம்…

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு, மாண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேபோல் முன்னெப்போதும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணை ஜூன் மாதத்திலேயே முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் … Read more

Rishabh Pant: "விபத்துக்குப் பின் கண்விழித்ததும் பண்ட் முதலில் கேட்டது..!" – பகிரும் மருத்துவர்

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்துக்குள்ளானார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பண்ட் 632 நாள்கள் கழித்து வங்கதேசத்துக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச போட்டியில் களமிறங்கி அப்போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ரிஷப் பண்ட் அதன்பிறகு, 2024 டி20 உலகக் கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர் ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் … Read more

பூரி கோயில் கூட்ட நெரிசல் | நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த ராகுல் காந்தி கோரிக்கை

பூரி ஜெகநாதர் கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலை “பெரிய சோகம்” என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஒடிசா அரசை வலியுறுத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள உலக புகழ்பெற்ற ஜெகநாதர் கோயில் ஆண்டுத் தேரோட்டம் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. முதல் நாள் தேரோட்ட நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடிய நிலையில் அங்கு பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இருந்தபோதும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிடும் அளவுக்கு சிறப்பாக … Read more

உத்தரகாண்ட்: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் பாலிகர் பகுதியில் இன்று மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. கனமழையால் அப்பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஆற்றின் அருகே கட்டப்பட்டு வந்த ஓட்டலில் கட்டிட வேலை செய்துவந்த 9 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 1 More update தினத்தந்தி Related Tags : உத்தரகாண்ட்  Uttarakhand 

மதுரை மாநகராட்சி: வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு; மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மீது புகார்

மாநகராட்சிக்கு ரூ 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வரி விதிப்பில் மோசடி செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கைது செயப்பட்டவர்கள் இதன் பின்னணியில் மாநகராட்சியின் உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள், புரோக்கர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். பரபரப்பை ஏற்படுத்தி வரும் இச்சம்பவம் குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். “மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட … Read more

ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

இஸ்லாமாபாத் இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.54 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.25 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,69.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் … Read more

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உயர்வு

மேட்டூர், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயை எட்டியதை அடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. இந்த நீர்வரத்தானது நேற்று மாலையில் வினாடிக்கு … Read more

“மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' – மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்ஸ்மென்ரின்(7) என்ற மகளும் உள்ளனர். பென்குரூஸ் கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் படித்துவருகிறான். டிக்ஸ்மென்ரின் பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். டார்வினும், அவரது மனைவி பபிதா நித்யசெல்வி ஆகியோர் தங்கள் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று முன் தினம் பகல் முழுவதும் அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. … Read more

தற்போதைக்கு வீடுகளுக்கு மின் கட்டண உயர்வில்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் சிவசங்கர் வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு தற்போது இல்லை என அறிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், ”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும்” … Read more

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு ரத யாத்திரை நேற்று முன் தினம் தொடங்கியது. திருவிழா 9 நாட்கள் நடைபெறும். மூன்று தேர்களும் முதல்நாள் மாலையிலேயே ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு செல்லவேண்டியது. ஆனால் பாலபத்திரர் தேர் ஒரு திருப்பத்தில் திரும்பும்போது நகர முடியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் பின்னால் வந்த மற்ற தேர்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் நேற்று காலை மீண்டும் ரத யாத்திரை தொடங்கியது. … Read more