கேரளத்தை உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப் விடுதலை!

திருவனந்தபுரம்: கேரளத்தை உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என கூறப்பட்ட நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அவர்மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என கூறி நீதிபதி திலிப் மற்றும் அவரது நண்பரை விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளார். எட்டு ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு,  இன்று  (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், திலீப்பை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து விடுவித்தார். திலீப் … Read more

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

இடாநகர், அருணாச்சல பிரதேசத்தின் ஷி யோமி பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2:38 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.48 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ … Read more

Mohan lal:“எங்கள் அன்பான லாலுவுக்கு" – வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி | வைரலாகும் வீடியோ

71-வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பைப் பாராட்டி, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வழங்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டபோதே திரைப்பிரபலங்கள் பலரும் நடிகர் மோகன் லாலுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதற்கிடையில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மம்முட்டியும், நடிகர் மோகன்லாலும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா … Read more

சென்னை மெரினா அருகே பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல்…

சென்னை:  பொதுமக்கள் வந்து செல்லும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்  பெண் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மெரினா கடற்​கரை​யில் உள்ள அண்ணா சதுக்கம் பின்​புறம் கல்​லுக்​குட்டை என்ற பகுதி உள்​ளது. இந்த பகு​தி​யில் விபச்சாரம் உள்பட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில்,  35 வயது மதிக்​கத்​தக்க பெண் ஒரு​வரது … Read more

எதிர்காலத்தை கட்டமைத்த மோடி-புதின் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் அந்த நிதியை வைத்து தான் ரஷியா, உக்ரைன் நாட்டுடன் போரிடுகிறது என்றார். அதற்காக இந்தியாவிற்கு கூடுதலாக அபராத வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் இந்தியா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. எனவே டிரம்ப், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷிய நிறுவனங்களுக்கு புதிய … Read more

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் – என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேனில்’ நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், நடனக் கலைஞரின் பின்னால் உள்ள கன்சோலில் தீ எரிவது பதிவாகியிருந்தது. கிளப்பின் ஊழியர்கள் சிலர் கன்சோலை நோக்கி விரைந்து சென்று தீ பரவும் இடத்திலிருந்து கம்ப்யூட்டர்களை எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. गोवा के … Read more

“எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடிப்போம்…”! மதுரையில் ஸ்டாலின் பேச்சு…

மதுரை: “எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடிப்போம்…” மதுரையில்  நடைபெற்ற அரசு விழாவில்   பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். மதுரை,  உத்தங்குடியில் நடந்த அரசு விழாவில் ரூ.2,630.88 கோடியில் 63 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ரூ.17.18 கோடியில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 1,77,562 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட … Read more

“எனக்கு சரியான வீடு கூட இல்லை'' – கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி

மாலத்தீவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்றார். கேரம் … Read more

கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக, தனது தாய் இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலக சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இது குறித்து, மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (வயது: 46) என்பவரிடம் சதீஷ் பலமுறை கேட்டும், அவர் இழுத்தடித்து … Read more

Hockey Men's Junior WC: இறுதிப்போட்டி கனவை இழந்த இந்தியா; அரையிறுதியில் ஜெர்மனியிடம் படுதோல்வி

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் இன்று (டிசம்பர் 7) நடைபெற்றது. முன்னதாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளில், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறின. இன்று சென்னையில் மாலை 5:30 மணியளவில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs அர்ஜென்டினா அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. Hockey Men’s Junior WC – Spain vs Argentina போட்டி ஆரம்பித்த 6-வது நிமிடத்திலேயே கோல் அடித்தது … Read more